search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20"

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் போட்டியில் அரைசதம்.
    • ரிங்கு சிங் நெருக்கடியை எளிதாக சமாளித்து போட்டியை முடித்து வைத்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    முதல் போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ரிங்கு சிங் இறுதியில் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து பினிஷராக செயல்பட்டார்.

    தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்தில் 21 ரன் எடுத்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி குறைந்தபட்சம் பவர்பிளேயான முதல் ஆறு ஓவர்கள் விளையாடினால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். திலக் வர்மா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இந்த ஆறு பேட்ஸ்மேன்களில் மூன்று பேருக்கு கிளிக் ஆனால் இந்தியாவின் பேட்டிங் டாப்பாக இருக்கும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித், முகேஷ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகேஷ் குமார் மட்டுமே குறைவான ரன்கள் (ஓவரில் 29 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். அதேபோல் அக்சார் பட்டேல் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்ற பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

    ஆஸ்திரேலியாவை பொறுத்தரை பேட்டிங்கில் ஸ்மித், மேத்யூ ஷார்ட், இங்லிஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், வடே என உள்ளனர். பந்து வீச்சில்தான் அந்த அணிக்கும் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் பந்து வீச்சில் கவனம் செலுத்தும்.

    இரு அணிகளில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

    • டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.

    நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.

    டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.

    அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.

    தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.

    உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.

    விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.

    • போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
    • தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ல் தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல்,

    பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ல் தொடங்கி இன்று முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (6-ந் தேதி) தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 94 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 95 துறை அலு வலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பி னர்கள், 9 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2,069 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாது காப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    • குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
    • ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் தொட்டகம்பை, சேரனூர், குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.

    சேதமடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    அவருடன் கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்ஸஸ் சந்திரன், பாசறை பேரூராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூராட்சி செயலாளர் சரவணன், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசியமய–மாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்–படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
    • மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் மினி டெம்போ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது. மேலும் அதில் உள்ள லிங்கை பார்க்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை உண்மை என்று நம்பிய சரவணன் அந்த லிங்கை பார்த்தபோது அதில் கேட்கப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20,236 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர். 

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.20 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    • எஸ்.கே.20 படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படம் 'எஸ்.கே.20'. இப்படத்தை தெலுங்கில் வெளியான 'ஜாதி ரத்னாலு' படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார். இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    எஸ்கே20

    எஸ்கே20

    தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று 'எஸ்.கே.20' திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுனர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 'எஸ்.கே.20' படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

    அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பின்னரும் படம் தமிழகம் முழுவதும் 398 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

    சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.

    உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.



    தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.

    2.0 படம் நேற்று வரை தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக 3டி வசதி கொண்ட தியேட்டர்களில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகிறது. 2டி பதிப்பை விட 3டி வசதியில் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

    இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய கதாநாயகர்களின் படங்கள் வருகின்றன. 2.0 படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

    ×