search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா"

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • முதலில் இருந்தே தடுமாறிய இந்திய அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் விளாசினார்.

    இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பொறுப்புடன் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 47 ரன்னிலும் முருகன் அபிஷேகம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே நம்பிக்கையாக இருந்த அவர்கள் அவுட் ஆனதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐசிசி கோப்பையை தவறவிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    அந்த நிலையை ஜூனியர் இந்திய அணி மாற்றும் என்ற நம்பிக்கையும் பொய்யானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி கோப்பை கனவு எட்டா கனியாகவே இந்திய அணிக்கு உள்ளது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். 

    அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் ஐசிசி கோப்பையை தவறவிடும். அந்த நிலையை மாற்றுமா? பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
    • இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். சாம் கான்ஸ்டாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் டிக்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நமன் திவாரி பிரித்தார். ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் டிக்சன் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்ஜாஸ் சிங் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
    • அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    பெனோனி:

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் பெனோனி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

    • தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.

    அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.

    முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

    • 2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி.
    • நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம்- கிரிக்கெட் சங்கம்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டி தொடங்க இன்னும் ஐந்து மணி நேரமே இருக்கும் நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது எனத் தெரிய வந்துள்ளது.

    2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்காலிகமாக மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பாக்ஸ் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் (floodlights) ஜெனரேட்டர் மூலம்தான் இயக்க முடியும்.

    ராய்ப்பூர் கிராமப்புற வட்ட பொறுப்பாளர் அசோக் கந்தெல்வால், "கிரிக்கெட் சங்க செயலாளர் தற்காலிகமாக செயல்திறனை அதிகரித்துக் கொடுக்க விண்ணப்பம் செய்திருந்தார். ஆயிரம் கிலோவாட் கேட்ட நிலையில் 200 கிலோவாட் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வேலை இன்னும் தொடங்கப்படவில்லை" என்றார்.

    2018-ம் ஆண்டு மாரத்தான் போட்டியின்போது, மைதானத்தில் மின்சாரம் வசதி இல்லை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அப்போதுதான் 2009-ம் ஆண்டில் இருந்து மின்சார கட்டணம் கட்டவில்லை. 3.16 கோடி ரூபாய் பாக்கி உள்ளது எனத் தெரியவந்தது.

    இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு பொதுப் பணித்துறையிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செல்லவை விளையாட்டுத்துறை ஏற்கவேண்டும். மின்கட்டணம் விவகாரத்தில் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

    மின்சாரத்துறையில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிய போதிலும் இரு துறைகள் சார்பில் நிலுவைத் தொகையை கட்டவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட மூன்று சர்வதேச போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருனேஷ் சிங் பரிஹார் கூறுகையில் "பெரிய போட்டிகள் என்பதால் மின்சாரம் குறித்து கவலை கொள்கிறார்கள். நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம். இருந்தபோதிலும், மைதான விளக்குகள் விவகாரம் கவலை அளிக்கிறது. எவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்று எனக்குத் தெரியாது. மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் தற்காலிக இணைப்பு வாங்கப்பட்டுள்ளது" என்றார்.

    சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்படும் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள விசயம் ஆச்சர்யமாக உள்ளது. மேலும், இரு துறைகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையால் மின்சாரத்தை பெற முடியாத இல்லையில் மைதானம் அமைந்துள்ளது.

    • முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.

    இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.

    23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • 2-வது போட்டியில் இந்தியா 235 ரன்கள் குவித்தது.
    • ரிங்கு சிங் 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தபோது, அனைவருடைய கண்ணிலும் பட்டவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி வேறு, சர்வதேச போட்டி வேறு. இவரால் அதேபோல் சிறப்பாக விளையாட முடியுமா? இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ரன் குவித்து கொடுப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால், முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலையில் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இருந்தபோதிலும், அது நோ-பால் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    ரன்கள் அடிக்க வேண்டுமே, விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை அவரது முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. ஆஹா... நமக்கு ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். விமர்சகர்களும் முணுமுணுக்க தொடங்கினர்.

    நேற்றைய 2-வது போட்டியிலும் 14 பந்துகள் இருக்கும்போது களம் இறங்கினார். 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 26 வயதேயாகும் ரிங்கு சிங்கை இனிமேல் ஒயிட்பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர்ந்து பார்க்கலாம். இவர்தான் இனிமேல் பினிஷர். தல தோனியை செய்த வேலையை இவர்தான் செய்வார் என ரசிகர்கள் வெளிப்படையாக நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    ரசிகர்களின் கருத்தை தனது புன்னகையால் மறைமுகமாக தெரிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

    போட்டி முடிவடைந்தபின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது சூர்யகுமார் யாதவ் பேசுகையில் "இளம் வீரர்கள் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் முன்னதாகவே, முதல் பேட்டிங்கிற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினோம்.

    ரிங்கு சிங் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, அவர் வெளிப்படுத்திய நிதானம் அற்புதமானது. எனக்கு அவர் ஒருவரை நினைவூட்டினார் (புன்னகை). ஒவ்வொருவருக்கும் அதன் விடை தெரியும் (மீண்டும் புன்னகை)." என்றார்.

    இந்த அணியின் தலைசிறந்த பினிஷராக எம்.எஸ். டோனி திகழ்ந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது நிதானத்தை இழக்கமாட்டார். இறுதி கட்ட ஓவரை சிறப்பான வகையில் டார்கெட் செய்வார். தற்போது அதேவழியில் ரிங்கு சிங் செல்கிறார் என்பதை புன்னகை மூலம் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திருக்கலாம்.

    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
    • அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.

    அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    இதில், முதலாவதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    14 ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வாடே களத்தில் விளையாடினர்.

    இதில், மார்கஸ் 45 ரன்களில் அவுட்டானதை அடுத்து, மேத்யூ வாடேவுடன் சியோன் அபாட் விளையாடி ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, நாதன் எல்லிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

    16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் எடுத்திருந்தது.

    20 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

    17வது ஓவரில் ஆடம் சம்பாவும் ஒரு ரன்னில் அவுட்டானதை அடுத்து தன்வீர் சங்கா களமிறங்கினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து டி20 தொடரில் 2வது ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    ×