search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்டிஏ"

    • அரியானா மாநிலத்தில் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
    • அந்த மையத்தில் அதிகபட்ச மதிப்பெண் 682 என இன்று வெளியிட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு முடிவில் அரியானாவில் உள்ள ஹர்தயாள் பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் 6 பேர் 720-க்கு 720 மதிப்பெண்களும், இரண்டு பேர் 718 மற்றும் 719 மதிப்பெண்களும் பெற்றனர். நீட் தேர்வில் 719 மதிப்பெண்கள் பெற முடியாது. மேலும் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதன்பின் கருணை மதிப்பெண் 1563 பேருக்கு வழங்கப்பட்டது என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனால் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் பல மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றம் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை மையம் வாரியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இதில் ஏற்கனவே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற ஹர்தயாள் பள்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் ஒரேயொரு மாணவர்தான் 682 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும, 13 மாணவர்கள் 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 800 மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வை எழுதினார்கள். முழு மதிப்பெண் பெற்ற அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற்றார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்கு எவ்வளவு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.

    பீகார் மாநிலம் ஹஜாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பொது பள்ளியில் 701 பேர் தேர்வு எழுதினர். இதில் அதிகபட்ச மதிப்பெண் 700-க்கு குறைவாகும். ஏழு மாணவர்கள் 650-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 23 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 46 பேர் 550-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் முதல்வர் பேப்பர் லீக் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜலராம் சர்வதேச பள்ளியில் 1,838 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதிலும் 700-க்கு அதிகமான மதிப்பெண் யாரும் பெறவில்லை. ஐந்து மாணவர்கள் 650 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 31 மாணவர்கள் 55-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகர் மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதிய மாநிலங்களில் 149 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2037 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்தமாக 4297 மாணவர்கள் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் 1017 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் இரண்டு மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 52 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு.
    • பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவை பார்க்கும் வரை கருத்து கூற இயலாது.

    பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உடன்பாடு இல்லை.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வலியுறுத்தும்போதெல்லாம், மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் சாதிவாதி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்புக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், அதன் புள்ளி விவரங்களை பொது வெளியில் தெரிவித்தால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் (UCC) ஆகியவை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை ஏதும் நடத்தவில்லை.

    பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக அதுகுறித்து ஒரு முடிவு எடுக்க முடியாது. அதேவேளையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) நாடு முழுவதும் ஒரே தேர்தல், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முழுமையாக ஆதரிக்கும்.

    இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியங்களின் மொழி, கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட எல்லாம் மாறுபட்டவை. எல்லோரையும் ஒரே புள்ளியில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை குறித்து வியக்கிறேன்.

    இது இந்து- முஸ்லிம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்துக்களில் பாரம்பரியம், திருமணம் உள்ளிட்டவை நாடுகளில் மாறுபட்டவையாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் இதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என நினைக்கிறேன். அதனால் அவர்களை நீங்கள் எப்படி ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும்?. ஆகவே வரைவு வரும்வரை, இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து- முஸ்லிம் பிரிவினை பற்றியது அல்ல. இது அனைவரையும் ஒன்றிணைப்பது பற்றியது என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • தற்போது பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது.
    • இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளது.

    இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றால் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக-வால் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 240 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றது. இதனால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார்.

    மக்களவையில் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையிலும் தனி மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 குறைவாக உள்ளது.

    மாநிலங்களவை மொத்தம் 245 எம்.பி.க்களை கொண்டதாகும். மத்திய அரசின் பரிந்துரையின்படி ஜனாதிபதி சில எம்.பி.க்களை நியமனம் செய்வார். அவ்வாறு நியமனம் செய்த நான்கு (ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி) எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதனால் மாநிலங்களவையில் பா.ஜகவின் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது.

    இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. 245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை. தற்போது மாநிலங்களவையில் 225 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13, ஆம் ஆத்மி மற்றும் திமுக-வுக்கு தலா 10 எம்.பி.க்கள் உள்ளனர்.

    பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை அல்லாத சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், நியமனம் எம்.பி.க்கள் மற்றும் சுயேட்சை எம்.பி.க்களும் உள்ளனர்.

    தற்போது ஒரு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டுமென்றால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 13 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (11), அதிமுக (4) ஆகிய இரண்டு கட்சிகளும் 15 எம்.பி.க்களை வைத்துள்ளன. இவர்கள் ஆதரவு தேவைப்படும்.

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு கட்சிகளும் பாஜக-வுடன் நல்ல உறவில் இருந்தன. ஆனால் தேர்தலின்போது அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு எதிராக பாஜக சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதனால் இரண்டு கட்சிகளும் ஆதரவு கொடுக்குமா? என்பது தெரியவில்லை.

    அதேபோல் மாநிலங்களவையில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான்.

    இவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்றால் நியமன எம்.பி.க்கள் ஆதரவை நாட வேண்டியிருக்கும். நியமன எம்.பி.க்கள் எண்ணிக்கை மொத்தம் 12 ஆகும்.

    மாநிலங்களவையில் மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இந்த வருடத்திற்குள் 11 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா, அசாம், பீகார் மாநிலங்களில் தலா இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அசாம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏழு இடங்களில் வெற்றி பெற முடியும். மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக கூட்டணி ஒன்றிணைந்து செயல்பட்டால் இரண்டிலும் வெற்றி பெற முடியும். அத்துடன் ஒய்எஸ்ஆர், நியமன எம்.பி.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்ட வாய்ப்புள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு இடங்கள் காலியாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    • என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இந்தியா கூட்டணி கே. சுரேஷை நிறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 230-க்கும் அதிகமான இடங்களை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெற்றுள்ளதால் எந்த விவகாரத்தையும் ஒருமனதாக தேர்வு செய்ய ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது.

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. சபாநாயகர் பதவிக்கு என்டிஏ கூடட்ணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கொடுக்க இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கேட்டுக்கொண்டது. ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால் துணை சபாநாயகர் பதவி வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்வேட்பாளாராக கே. சுரேஷ் என்பவரை நிறுத்தியுள்ளது.

    இதனால் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணை சபாநாயகர் பதவி தர தயராக இருந்தால், நாங்கள் என்டிஏ வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். இரு அவைகளும சமூகமாக நடைபெற பிரதமர் மோடி நேற்று ஒருமித்த கருத்து குறித்து பேசினார்.

    அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யும் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

    சபாநாயகர் அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகளுக்கு என்டிஏ-வுக்கு வழங்கினோம். நேற்று ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜூனாவிடம் பேசினார். அப்போது கார்கே, உங்களுடைய வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் துணை சபாநாயகர் பதவியை விரும்புகிறோம் என்றார். அப்போது ராஜ்நாத் சிங், மோடியிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.

    இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வின்போது வினாத்தாள் லீக்கானதாக குற்றச்சாட்டு.
    • தேர்வு முடிவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.

    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின்போது பேப்பர் லீக்கானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரிசல்ட் வெளியானபோது 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்ணும், 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.

    இதனால் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தேசிய தேர்வு முகமை முறைகேடு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தது. மத்திய அரசும் பேப்பர் லீக்கானதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றது.

    என்றபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பான பொதுநல வழக்கு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 8-ந்தேதி நீதிமன்றம் நடைமுறைகள் தொடங்க இருக்கிறது.

    மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நேற்று, உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
    • பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.
    • அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்த முறை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லாமல் இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது, நஜ்முல்லா ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதே போன்று, 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற போது நக்விக்கும் சிறுபான்மையினர் நலத்துறையே ஒதுக்கப்பட்டது.

    18 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததே அமைச்சரவையில் இஸ்லாமியர் இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது. கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இஸ்லாமிய எம்.பி.க்களில் 21 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதர மூவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஓவைசி, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களான அப்துல் ரஷீத் ஷேக் மற்றும் முகமது ஹனீஃபா ஆவர். 

    • விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
    • பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.

    மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.

    எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்

    இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.

    விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

    காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.

    ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்

    இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.

    இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.

    • முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது.
    • நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய போகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் (16) வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது.

    அதேவேளையில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 12-ந்தேதி ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி ஓபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் இருக்கும்வரை அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், விளிம்பு நிலையில் இருக்கம் மக்களின் தரநிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம் என சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    சிறுபான்மையினர் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய தனி வருமானம் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஒரு அரசாக என்னுடைய பொறுப்பு அவர்களை வறுமையில் இருந்து மீட்பதுதான். எனவே நான் எடுக்கும் எந்த முடிவுகளும் சமரச அரசியல் (வாக்கு வங்கிக்காக இடஒதுக்கீடு வழங்குவது) அல்ல, மாறாக அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே.

    நீங்கள் நம்முடைய நாட்டை வளர்ச்சி நாடாக்க விரும்பினால், யாரையும் பின்னாடி விடமுடியாது. அவர்களை ஒன்றிணைத்து, சிறந்த வாய்ப்பை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, தெலுங்கு தேசம் கட்சியின் முத்திரையாக (Trade Mark) இருந்து வருகிறது.

    நாங்கள் ஒருபோதுமு சபாநாயகர் பதவி குறித்து பாஜகவிடம் பேசவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றுதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் மந்திரி பதவி கேட்கவில்லை. மாநிலத்தின் நலம்தான் எங்களுடைய நலம்.

    இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெற அவரது மகனான நாரா லோகேஷ் முக்கிய பங்காற்றினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதுபோது, தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
    • உ.பி. மற்றும் மகாராஷ்டிரவில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.

    ஏற்கனவே மந்திரிகளாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

    உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிர மக்கள் பா.ஜ.க.வினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அயோத்தியில் அவர்களால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. அயோத்தி மக்களை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்? என்.டி.ஏ. கூட்டணியின் தற்போதைய விளக்கம் நாயுடு சார்ந்த கூட்டணி அல்லது நிதிஷ் சார்பு கூட்டணி என தெரிவித்தார்.

    • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

    தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

    பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

    • மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
    • மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்தியாவில் 18 ஆவது பாராளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து, சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் வருகிற 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தலை நடத்தி முடித்த இந்தியாவுக்கும், தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, இரு தலைவர்களும் அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச கூட்டமைப்பு மூலம் சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த இணைந்து பணியாற்றுவதாக வலியுறுத்தினர்.

    இதே போன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், "பாராளுமன்ற தேர்தல் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவித்தார்."

    ×