search icon
என் மலர்tooltip icon
    • கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம்

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

    • ராஜபாளையம் அருகே முதியவர் தாக்கப்பட்டார்.
    • சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    சேத்தூர் வளையல் தெருவை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (65). இவர் விவசாய நிலங்களில் மாட்டுக்கிடை அமைத்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே உள்ள சிவக்காடு பகுதியில் மாட்டு கிடை அமைத்திருந்தார்.

    நள்ளிரவு அங்கு ஆணைக்குட்டி காவல் பணி மேற்கொண்டிருந்த போது மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நீலமேகம், நாயகம் ஆகிய 2 பேர் வந்து தகராறு செய்து ஆணைக்குட்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி காயமடைந்தார்.
    • தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம் (40). தச்சு வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை அழைக்க மனைவி, மகனுடன் சுந்தர மகாலிங்கம் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி சென்றார். அங்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு சுந்தர மகாலிங்கம் மீண்டும் குடும்பத்தினருடன் ஊருக்கு புறப்பட்டார். ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தர மகாலிங்கம், அவரது மகன் ஹர்சன் (6) ஆகியோர் காயமடைந்தனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த சுந்தர மகாலிங்கம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்.

    • விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.

    முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது 3 கத்திகள், கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோலைய ழகுபுரம் பகவதி அம்மன் கோவில் 3-வது தெரு சேகர் மகன் உமையாகுமார் என்ற பெரிய எலி (23), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு பாண்டியன் குறுக்கு தெரு பாண்டி மகன் அருண் பாண்டி (23), சோலை யழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி நகர் 4-வது தெரு மீனாட்சி சுந்தரம் மகன் சின்ன எலி (21), சோலைஅழகுபுரம் அன்வர் உசேன் மகன் அஜிஸ் (21), சோலையழகுபுரம் 3-வது தெரு ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்ற சிவா (22) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
    • கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை

    முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.

    மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.

    பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.

    சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் எழுதினார்.
    • வருகிற 2026-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

    அதில், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி முதற்கட்ட கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து 2023 ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கவும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவை யான ஏற்பாடுகளை செய்ய வும் கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதான் மந்திரி சுவாஷ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜப்பான் நாட்டின் ஜிக்கா ஏஜென்சியுடன் கடனுதவிக் கான ஒப்பந்தம் செய்துள் ளது.

    இந்த ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழு மையாக கட்டி முடிக்கப் படும்.

    மேலும் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வசதியாக முதன்மை இயக்குனர், துணை இயக்குனர் (நிர்வாகம்) கண்காணிப்பு மற்றும் முதன்மை பொறி யாளர், நிர்வாக அதிகாரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு விரைவாக செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×