search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seminar"

    • கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
    • இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு நீடித்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்லைன் வணிகத் தளத்தை 'நேச்சுரலே' நிறுவனம் நடத்தி வருகிறது.

    இதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்து அதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

    அந்த வரிசையில் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பேரோஸ் ஓட்டலின் 'அலெக்சாண்ட்ரியா டாவெர்ன்' உணவு விடுதியில் நேற்று நடத்தியது. 

    இந்த கருத்தரங்கத்துக்கு நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் தலைமை தாங்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமியின் மகளும், புகழ்பெற்ற உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா முன்னிலை வகித்தார்.

    சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, சுவை மற்றும் நேரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்த செயல்முறையை சுவாரஸ்யமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி, சமையல் கலை நிபுணர் அதிரா, ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த சுவையான உணவுகள் தயாரிப்பு குறித்த சமையல் விளக்கத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கூறியதோடு, சமைத்தும் காட்டினார். 

    பின்னர், அலெக்சாண்ட்ரியா டாவெர்ன் உணவு விடுதி சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் கருத்தரங்கில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டன. அதனை அவர்கள் அனைவரும் ருசி பார்த்து, உணவின் சுவைக்காக பாராட்டும் தெரிவித்தனர்.

    மேலும், கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
    • பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.

    இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

    இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

    தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.

    இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .

    இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    • காலநிலை பாதிப்புகள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும்.
    • விருதுநகர் சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சுற்றுச் சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம் உதவி இயக்குநர் மணிஷ்மீனா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி னார். கருத்தரங்கில் கலெக் டர் மற்றும் அதிகாரிகள் பேசினர்.

    அதில் இந்தியரின் சரா சரி ஆயுட்காலம் 73 ஆண்டு கள். இந்தியாவின் டெல்லி போன்ற நகரங்களில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்கா லம் காற்று மாசால் 6 ஆண்டு கள் குறைகிறது என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டில் 4-ல் 3 பங்கு மக்கள் நகரங்கள் மற்றும் நகரங்கள் ஒட்டி பகுதிகளில் தான் வசிப்பார் கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக் கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சி னைகள் அதிகமாகும். மேலும், வெப்பநிலை படிப் படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நகரமயவாவதில் முன்னி லையில் இருப்பது தமிழ்நாடு தான்.காலநிலை மாற்றத் தால் கடல் மட்டத்தில் இருந்து வெப்பம் அதிகமாக வருவதால் பலத்த காற்றுடன் வெப்ப சலனம் மழை அதிக மாக உள்ளது. சில இடங் களில் பருவமழை பொய்த்து தண்ணீருக்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை யும் உள்ளது.இந்த பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நம் அடுத்த சந்ததிகளுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க வழி வகுத்திடும்.

    இந்தியா போன்ற அதிக மான மக்கள் தொகை வாழக்கூடிய நாடுகளில் இது குறித்து அதிகமாக பேசு வதற்கும், சிந்திப்பதற்கும் மிக முக்கியமான தேவை இருக்கிறது. இதை அனை வருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற கருத்தரங் குகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    • யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
    • யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.

    இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

    • மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்
    • தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு குறித்து அதிகாரிகள் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதிவரை நடக்க உள்ளது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சி கூட்டுறவு விற்பனை சங்க மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல்-மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்.

    ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாழ்வியல் மற்றும் தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ரா.மது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார்பதிவாளருமான அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கம் மற்றும் நக்கீரர் தமிழ் சங்கம் இணைந்து ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு வளரும் தமிழ் தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க நிர்வாகி உதயகுமார் பெரியசாமி, புதுவை தமிழ் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாபு, புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர்கள் சங்க செயலாளரும் குரும்பாம்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருமான சீனிவாசன், தமிழ் சங்க பலகை தலைவர் தமிழ் பித்தன், லேடர் கமர்சியல் நிறுவனர் செழியன் குமாரசாமி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், தமிழ்நாடு அனைத்து சமையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இனியவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் அமைப்புகளின் பேரவை தலைவர் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இதில் குணவதி மைந்தன், கோபாலகிருஷ்ணன், சுரேஷ்பாபு, சங்கர், பெருமாள், சதீஷ் அசோகன், குமரன், எம்.ஜி.ஆர். மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக புதுவை தமிழ் சங்க பொருளாளர் அருள் செல்வம் நன்றி கூறினார்.


    • ஜெயங்கொண்டம் வரதராஜன்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.மேலும் கல்லூரி மாணவிகள் ஊழல் தடுப்பு பற்றி கேள்விகள் எழுப்பியபோது, அதற்கு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிறப்பாக திறமையாக கேள்வி கேட்ட மாணவிகளை டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.இறுதியில் பள்ளி மாணவிகள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மதர் ஞானம்மா கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர். சுந்தரராஜன், ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவ ரையும் வரவேற்றார். தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    • சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் எம்.ஆர்.சி. கல்லூரியில்கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்டம்எம்.ஆர்.சி. கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம், தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்,அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பல்வேறு சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினார். அவருடைய போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் முக்கிய சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என பேசினார்.

    இந்நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ச.பரிமளம், தாசில்தார்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா,தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ் மற்றும் அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், இருபால் மாணவ,மாணவிகள்,கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.

    கரூர் அரசு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில்தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மண்ம ங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம், இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு கல்லூரி கலை யரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் சங்கர் வரவேற்றார்.

    கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கௌசல்யா, குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம், குளித்தலை கிராமியம் இய க்குனர் டாக்டர் நாராயணன், இலங்கை தமிழர் நலன் தனி வட்டாட்சியர் நேரு ஆகி யோர் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவ ருக்கும் சட்ட கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.

    • அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது
    • முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம்

    அரியலூர், 

    முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னி ட்டு அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செந்தி ல்குமரன் அனை வரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரி யர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், இளநிலை உதவி யாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண்ணகி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×