என் மலர்

    நீங்கள் தேடியது "Seminar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் கலைக்கல்லூரி, பிஷப் கால்டுவெல் கலைக்கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் பல கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு தலைவர் ஜெயசுதா பெர்சியா தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி கணித துறை விரிவுரையாளர் பெலிஸ்டா சுகிர்த லிசி, வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிதி சமீலா, தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கபட்டனர். சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை சகாய ஹென்ஸி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • யூரியா உரத்தால் மண் வளம் பாதிப்பை தவிர்க்க விளக்கம் அளிக்கப்பட்டது.

    மதுரை

    இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மண்டல இணைப்ப திவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    விவசாய பெருமக்கள் அதிக அளவு யூரியா உரம் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட இப்கோ, நானோ யூரியா, இப்கோ டி.ஏ.பி. மற்றும் சகாரிக்கா உரங்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து இப்கோ நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு விற் பனை இணையம் (டான் பெட்) துணைப் பதிவாளரும், மண்டல மேலாளருமான ச.பார்த்திபன், டான்பெட் நிறுவன புதிய தயாரிப்பு உரங்களின் சிறப்புகள் பற் றியும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டான் பெட் புதிய தயாரிப்பு உரங் கள் பெற்று விநியோகம் செய்திடுமாறும் தெரிவித்தார். இதில் இப்கோ நிறுவ மாநில விற்பனை மேலாளர், டான்பெட் எரியோடு உர ஆலை வல்லுநர், கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • அதி வேகமாக செல்லும் வாகனத்தால் விபத்து ஏற்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தங்கத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    மாநிலத் துணைச் செயலாளர் ராஜாராமன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ஜெயசங்கர் மாவட்ட ஆட்சி மன்ற குழு அமைப்பாளர் அன்வர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்வமுத்து குமணன் வரவேற்றார்.

    சிறப்புரையாக பட்டிம ன்றம் நடுவர் சரவணன், முனைவர் தனவேலன், முருகானந்தம், மாவட்ட செயலாளர் கனகசபை, ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி விளக்கி கூறினர்.

    கருத்தரங்கில் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை செல்லும் சிலர் அதி வேகமாக வாகனங்களை இயக்கி சாலையில் செல்லும் பொது மக்கள் மாணவ மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்கள் மீது வாகனத்தை பரிமுதல் செய்து சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல மாவட்ட கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது.

    அதனை சீரமைத்து தர வேண்டும்.

    மயிலாடு நகராட்சி நகர பகுதிகளில் பாதாள சாக்கடை பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலிய மூர்த்தி, சுவாமிநாதன், தர்மரா ஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
    • கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் 'தூய மற்றும் பயன்பாட்டு கணிதம்' என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கில் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியர் சுரேஷ் சிங், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் வில்சன் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ்சிங், வரைபட கோட்பாடுகள் பற்றியும், அதன் வாழ்நாள் பயன்பாடுகள் குறித்த வரைபடம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார். வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களை கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன் அறிமுகம் செய்து வைத்து, வரவேற்று பேசினார். இதில், துறை தலைவர்கள் பாலு, வேலாயுதம், கவிதா, அந்தோணி சகாய சித்ரா, ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    இக்கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் 42 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் ெசய்திருந்தனர். கருத்தரங்க அமைப்பு ெசயலாளர் சரண்யா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்டிமட விவசாயிகளுக்கு கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    • தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் நிலக்கரி சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, திரும்ப விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் குறுகிய காலத்தில் கூழ் மரம் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பாக தேவனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் பங்கேற்று வனத்துறை திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன உதவி பொதுமேலாளர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் உதவி பொது மேலாளர் ரவி, முதுநிலை மேலாளர் செழியன், துணை மேலாளர் பிரசாத் மற்றும் தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சவுக்கு, தைலமர மரக்கன்றுகள் கருத்தரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்
    • கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து ஒரு நாள் ஆய்வு கருத்தரங்கை கல்லூரி கலையரங்கில் நடத்தினார்கள்.

    மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபார யுக்திகளை மேம்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினர்.

    கல்லூரியின் வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் கன்னியம்மாள் வரவேற்புரை வழங்கினார், துணை முதல்வர் முனைவர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார்.

    வணிகவியல் துறை தலைவர் யமுனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகத் தொழிற்சார் கணக்கியல் துறை தலைவர் சுதா நன்றியுரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக 'தனி மனித சுகாதாரம்' என்ற தலைப்பில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.நித்தியானந்த ஜோதி வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் சுத்தம் வேண்டும் என்று கூறினார். மேலும் வரும் நோய்களை கண்டறிய சுய பரிசோதனை வேண்டும் என்றும் நோய்களை தடுக்க ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்றும் கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு உறுப்பினர்களான பேராசிரியர்கள் முருகேஸ்வரி, முனைவர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் முனைவர் வசுமதி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், பேராசிரியர் ஜேனட் சில்வியா ஜெய ரோஸ் ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு மருத்து வம், ஊட்டச்சத்து, மற்றும் சுகாதாரம் சார்ந்த ஆலோ சனைகளையும், வாழ்த்து களையும் வழங்கி னர்.

    புதுமண தம்பதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    விழாவில் ஆழ்வார் திருநகரி குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர்கள், வட்டார ஒருங்கி ணைப் பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் 6 நாள் சித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் சித்த மருத் துவர்களுக்கான தோல் நோய்கள் மற்றும் அழகு சிகிச்சைக்கான ஆறு நாட் கள் தொடர் மருத்துவ கருத் தரங்கு நடைபெற்று வருகி–றது. இந்த நிகழ்ச்சியை பூவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலைய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) ரோஜா ரமணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை டாக்டர். வெங்கடேஷ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர். மீனா, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்கு னர் டாக்டர். மீனாகுமாரி, துச்சேரி மண்டல சித்த ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். சத்யரா ஜேஸ்வரன், டாக்டர். ஜெய வெங்கடேஷ்,

    கோகிலா சித்த மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வரையும் அருப்புக்கோட்டை சித்த மருத்துவமனை மருத்து வர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோகிலா சித்த மருத்துவ மனை உயர் நிர்வாக அலுவ லர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print