search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரி: உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம்
    X

    சிறப்புரையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    காளீஸ்வரி கல்லூரி: உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம்

    • காளீஸ்வரி கல்லூரியில் உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''உலகமயமாக்கும் போக்கு'' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி அறிமுக உரையாற்றினார்.

    சிவகாசி சிறப்பு விருந்தினராக எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகமயமாக்கல் என்பதன் பொருள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், உலகமயமாக்கும் யுக்திகள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் நிறை-குறைகள், இதனால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சந்தையிடுதலில் ஏற்பட்டுள்ள புதிய யக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.

    அனைத்து மாணவர்க ளையும் சுயதொழில் தொடங்க ஊக்கம் அளித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீதப் பிரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    சூரியபிரகாஷ் வரவேற்றார். மகாராஜா நன்றிய கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார். இந்த சிறப்புரையில் 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×