search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "d"

    • தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.

    இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''உலகமயமாக்கும் போக்கு'' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி அறிமுக உரையாற்றினார்.

    சிவகாசி சிறப்பு விருந்தினராக எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகமயமாக்கல் என்பதன் பொருள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், உலகமயமாக்கும் யுக்திகள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் நிறை-குறைகள், இதனால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சந்தையிடுதலில் ஏற்பட்டுள்ள புதிய யக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.

    அனைத்து மாணவர்க ளையும் சுயதொழில் தொடங்க ஊக்கம் அளித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீதப் பிரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    சூரியபிரகாஷ் வரவேற்றார். மகாராஜா நன்றிய கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார். இந்த சிறப்புரையில் 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ×