search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை கலைக்கல்லூரியில்  விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்த போது எடுத்தபடம்.

    அம்பை கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் சங்கர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சவுந்திர ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் தங்கப்பாண்டியன் வாழ்த்தி பேசினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் உதவிப் பேராசிரியர் இசக்கி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் அம்பை ஏ.எஸ்.பி. பல்பீர்சிங், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் கஷ்மீர் ராஜா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×