search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.S.R. College"

    • பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • தாளாளர் ஆர்.சோலைசாமி, அட்வான்டேஜ் மேலாளர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சிவகாசி

    அமெரிக்காவின் பன்னாட்டு ஐ.டி. நிறுவ னமான ரெட்ஹாட் நிறுவனம் இந்தியாவில் ரெட்ஹாட் லினகஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் திறமை சாலியான மாணவர்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூ ரியின் அசோசி யேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி அமைப்பின் மூலமாக ரெட்ஹாட் நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி சென்னை, அட்வான்டேஜ் மேலாளர் சுகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ரெட்ஹாட் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்குரிய மையமாக பி.எஸ்.ஆர். கல்லூரி திகழும் என்பது குறிப்பிடத்தக்து.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண் குமார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராம திலகம், பேராசிரியர் பால சுப்பிரமணியன், பயிற்சியாளர்கள் மகேஷ்வரன், வசந்தகுமார் (அட்வான் டேஜ் புரோ) மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடநத்து.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான ஊக்கமூட்டும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை ''காட் இந்தியா டிரஸ்ட்'' முரளிஜி சுவாமி கலந்து கொண்டு பேசினார்.

    முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சுவாமியின் சீடர்களான லலிதா, பவானி, சாந்தி, சந்திரபிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறையின் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி தாளாளர்் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    உயிர் மருத்துவ பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வாஷினி வரவேற்றார். உயிர் மருத்தவ துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ''நிப்ரோ மெடிக்கல் இந்தியா'' நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் நம்பி வேதாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    3-ம் ஆண்டு மாணவர் சதீஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின்ர் பேசுகையில், உயிர் மருத்துவ பொறியியல் துறை என்பது வளர்ந்து கொண்டிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும்.

    உயிர் மருத்துவ பொறியாளர்கள் மருத்தவ சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், மற்றும் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மல்டிமீடியா பிரசன்டேசன், போஸ்டா் மேக்கிங் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இதில் பல்வேறு கல்லூரிகளில் இருத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கிருத்திகா, காளீஸ்வரி, மாணவர் ஒருங்கிணைப்பாளர், 4-ம் ஆண்டு மாணவர் நெல்லையப்பராஜா மற்றும் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம் நடந்தது.
    • ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார்.

    சிவகாசி

    பொறியாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் மாணவர்கள் சங்க தொடக்க விழா மற்றும் "ரோபாடிக்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது.

    கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ்.விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் பி.மாரிச்சாமி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் எச். கனகசபாபதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் வாழ்த்தி பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மேட் லேப் என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் சேவை மேலாளர் எஸ்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் தினத்தை தொடங்கி வைத்தார். இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட கே.ராஜபாண்டி, கே.தேவராஜ் (4-ம் ஆண்டு), கோபி ஆனந்த் (3-ம் ஆண்டு) ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு இறுதி யாண்டு மாணவர்க ளுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார். இந்த பயிற்சியில் நவீன இயந்திரவியல் துறையில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தானியங்கி கருவிகளின் சிறப்பு அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டினையும் எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முத்தையா நன்றி கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினரான பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் பேசுகையில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மருந்து தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் உயிர் செயல் முறைகளில் திரவ இயக்கவியலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். உருவகப் படுத்துதல், தொழிற்முறை பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார்.

    திரவ இயக்கவியலில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். இதனால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இந்த துறை சம்பந்தமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட திரவ இயக்கவியல் ஆய்வகம் துணைபுரியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சுேரஷ்குமார் மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×