search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம்
    X

    ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம்

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரோபாடிக்ஸ்- ஆட்டோமேஷன் கருத்தரங்கம் நடந்தது.
    • ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார்.

    சிவகாசி

    பொறியாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் மாணவர்கள் சங்க தொடக்க விழா மற்றும் "ரோபாடிக்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது.

    கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ்.விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் பி.மாரிச்சாமி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் எச். கனகசபாபதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் வாழ்த்தி பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மேட் லேப் என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் சேவை மேலாளர் எஸ்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் தினத்தை தொடங்கி வைத்தார். இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட கே.ராஜபாண்டி, கே.தேவராஜ் (4-ம் ஆண்டு), கோபி ஆனந்த் (3-ம் ஆண்டு) ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு இறுதி யாண்டு மாணவர்க ளுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியை சிறப்பு விருந்தினர் நடத்தினார். இந்த பயிற்சியில் நவீன இயந்திரவியல் துறையில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தானியங்கி கருவிகளின் சிறப்பு அம்சங்களையும் அவற்றின் செயல்பாட்டினையும் எடுத்துரைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முத்தையா நன்றி கூறினார்.

    Next Story
    ×