search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×