search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு
    X

    உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    Next Story
    ×