search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாநில கருத்தரங்கம்
    X

    கல்லூரியில் மாநில கருத்தரங்கம்.

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாநில கருத்தரங்கம்

    • பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
    • உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    கல்வி குழும தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார். கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    கல்வி குழும செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் நடராஜன், முகமது இஸ்மாயில், துணை முதல்வர்கள் கலியபெருமாள், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

    பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் உமா வரவேற்றார். துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர் வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×