என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govindammal Aditanar womens college"

    • 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இயற்பியலை இலகுவான முறையில் ஆர்வமுடன் கற்கும் விதமாக கடந்த 2 நாட்களாக செய்முறை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 12-ம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இயற்பியல் துறை மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுபைதார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 77 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பின்னர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜோ ஜாக்குலின் அமலியா வரவேற்று பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் கற்பகவல்லி, வசுமதி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்ற கூட்டம் நடந்தது.
    • நாசரேத் ஜெ.ஜெ.நிறுவனத்தின் தளவாட சேவைகள் தொடர்பான ஆலோசகர் பேரின்பராஜ் ‘தளவாட வேலை தொடர்பான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ஜெயசுபா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாசரேத் ஜெ.ஜெ.நிறுவனத்தின் தளவாட சேவைகள் தொடர்பான ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் உரிமையாளரான பேரின்பராஜ் 'தளவாட வேலை தொடர்பான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார்.

    அப்போது, பொருட்களை எவ்வாறு பண்டக சாலையில் சேகரிப்பது, சரக்குகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான செயல்பாடுகள் மற்றும் பொருட்களை எவ்வாறு கையாண்டு விநியோகிப்பது என்பது குறித்து விளக்கினார். பின்னர் 3-ம் ஆண்டு மாணவி ராஜதேவி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர்கள் தமிழ்செல்வி, கமலச்செல்வி, வணிகவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியர்கள் மாரியம்மாள், சந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது
    • கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்தனர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொருளியல் துறை தலைவர் சண்முகவல்லி வரவேற்று பேசினார்.

    பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் தே.கதிரவன் "பொருளியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற முன்னாள் மாணவிகளும், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பொருளியல் துறை தலைவர் மகாலட்சுமி, சாத்தான்குளம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி உதவி மேலாளர் ரத்தினவள்ளி, ஏரல் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரியாதேவி ஆகியோர் பேசும்போது, நாங்கள் இந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தோம். பொருளியல் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்விற்கான வழிகாட்டுதல் வகுப்புகளில் கலந்து கொள்வோம். கல்லூரியில் வழங்கப்பட்டு வரும் பிற வாய்ப்புகளையும், நூலக வசதிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினோம். இதனால் நாங்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று இத்தகைய நல்ல பதவியில் இருக்கிறோம் என கூறினர். பின்னர் கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்தனர். பள்ளி மாணவிகள் சிலர் நிகழ்ச்சி பற்றிய தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில், 12 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொருளியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் செல்வராணி மற்றும் ஜின்சிமோள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளியல் துறை உதவி பேராசிரியை கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்தி, பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×