search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 73 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 4 மேடிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பென்ஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலை வாங்க இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1.5 லட்சம் ஆகும். இந்த தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

     

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் விலை ரூ. 73.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை 2023 மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலில் தற்போதைய மாடலில் இருப்பதை விட காஸ்மடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

    இந்த காரின் நீளம் 60 மில்லிமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது 4716 மில்லிமீட்டராக உள்ளது. இதன் மூலம் காரின் வீல்பேஸ் 15 மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டு தற்போது 2888 மில்லிமீட்டராக இருக்கிறது. காரின் பின்புறத்தில் பம்ப்பர் சற்று கூர்மையாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், பவர்டு டெயில்கேட் வழங்கப்படுகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேடிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    • புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் செப்டம்பர் 6-ம் தேதி புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. இதற்கான நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இந்த மாடலின் பெயர் மற்றும் விவரங்களை டிவிஎஸ் நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட RTR310 ரோட்ஸ்டர் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் டெயில் லைட் டுவின்-பாட் டிசைன் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டயர் ஹக்கரில் நம்பர்பிலேட் மற்றும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    தோற்றத்தில் இந்த மாடல் RR310-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய அபாச்சி RR310 மாடலில் இருப்பதை போன்றில்லாமல், RTR310 மாடலில் அப்ரைட் எர்கோனோமிக்ஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஹேன்டில்பார் அகலமாக காட்சியளிக்கிறது. புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அந்த வகையில், புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹார்டுவேரை பொருத்தவரை அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    • நிசான் மழைகால பராமரிப்பு திட்டத்தில் 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிசான், டேட்சன் கார்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

    நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மழைகால செக்-அப் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது காரை இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ் திட்டம் ஜூலை 15-ம் தேதி துவங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நிசான் கார் வைத்திருப்போர் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு சென்று நிசான் மற்றும் டேட்சன் வாகனங்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை செக்கப் செய்து கொள்ள நிசான் கனெக்ட்ஆப் அல்லது நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

     

    மழைகால பராமரிப்பு பலன்கள்:

    நிசான் நிறுவனம் அறிவித்து இருக்கும் மழைகால பராமரிப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது. இதில், பேட்டரி செக்கப், வெளிப்புறம் மற்றும் உள்புற ஆய்வு, அன்டர்பாடி செக்கப், ரோடு டெஸ்ட், இலவச வாட்டர் வாஷ் உள்ளிட்டவை அடங்கும்.

    இலவச கார் பராமரிப்பு சேவை மட்டுமின்றி வைப்பர் பிளேடுகளுக்கு 10 சதவீதமும், லேபர் மற்றும் பிரேக் பேட் மாற்றுவதற்கு அதிகபட்சம் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    "அர்த்தமுள்ள கார் பயன்படுத்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதுவே எங்களை தனித்துவம் மிக்க பிரான்டாக மாற்றுகிறது. மழைகால பராமரிப்பு திட்டம் இந்த குறிக்கோளின் அங்கங்களில் ஒன்று. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கடக்கும் வகையில் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் பல்வேறு வழிகளில் இதுவும் ஒன்று," என நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதற்கு சமீபத்தில் தான் மீண்டும் விருப்பம் தெரிவித்து இருந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான அடுத்த முயற்சியாக மும்பையில் அலுவலகம் ஒன்றை லீசுக்கு எடுத்திருக்கிறது.

    டெஸ்லா இந்தியா மோட்டார் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கும் புதிய அலுவலகம் பூனேவின் பன்ஷில் பிஸ்னஸ் பார்க்-இல் அமைந்து இருக்கிறது. இந்த அலுவலகத்திற்கு மாத வாடகை மட்டும் ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள 5 ஆயிரத்து 850 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் டெஸ்லா இந்தியா அலுவலகம் உருவாகிறது.

     

    வாடகை ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி துவங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அலுவலகத்துக்கான இடம் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெஸ்லாவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் என்ஜின் கொண்ட கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் டெஸ்லா நிறுவனம் பெரும் பங்காற்றி இருக்கிறது.

    • ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது.
    • ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனை சமீபத்தில் நிறுத்தம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. காம்பஸ் மாடல் விலை ரூ. 43 ஆயிரமும், மெரிடியன் எஸ்யுவி விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரமும் அதிகரித்து இருக்கிறது.

    ஜீப் மெரிடியன் X வேரியன்ட் விலை ரூ. 42 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. என்ட்ரி லெவல் (O) 4x2 AT வேரியன்ட் விலை ரூ. 45 ஆயிரமும், லிமிடெட் (O) 4x2 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x2 AT மாடல்களின் விலை முறையே ரூ. 47 ஆயிரம் மற்றும் ரூ. 48 ஆயிரம் உயர்த்தப்பட்டது.

    டாப் என்ட் லிமிடெட் (O) 4x4 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x4 AT மாடல்களின் விலை ரூ. 51 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. மெரிடியன் அப்லேன்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     

    சமீபத்தில் தான் ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது. இதற்காக ALD ஆட்டோமோடிவ் உடன் ஜீப் கூட்டணி அமைத்தது. இதில் நிச்சயிக்கப்பட்ட பைபேக், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, வருடாந்திர பராமரிப்பு, ரோடுசைடு அசிஸ்டன்ஸ், காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்த பலன்கள் ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் மெரிடியன் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனையை ஜீப் நிறுவனம் நிறுத்தியது.

    • வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
    • மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.

    ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     

    டாடா பன்ச் CNG:

    ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

     

    ஆடி Q8 இ டிரான்:

    ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா ருமியன்:

    டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    வால்வோ C40 ரிசார்ஜ்:

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.
    • கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும்.

    மழை காலத்தில் கார் ஓட்டுவது சற்றே சவாலான காரியம் ஆகும். பொதுவாக மழை காலங்களில் கார் ஓட்டும் போது, மைலேஜ் சற்று குறைவதை பலரும் அனுபவித்து இருப்பர். அந்த வகையில், மழை காலங்களிலும் காரின் மைலேஜ் குறையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    திட்டமிடல்:

    சமயங்களில் குறுக்கு வழியை தேர்வு செய்வது ஆபத்தில் முடியலாம். அதுவும் மழை காலங்களில் எந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் என்பது தெரியாது. இதனால் மழை காலங்களில் குறுக்கு வழிகளை தவிர்த்து, முன்கூட்டியே பயணத்தை திட்மிடுவது நல்லது.

     

    திராட்டில்:

    கார் பயன்பாட்டில் திராட்டில் செய்வதில் மென்மையாக செயல்பட்டால் காரின் மைலேஜ் சீராக அதிகப்படுத்த முடியும். காரை அக்செல்லரேட் செய்யும் போது தான் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.

    டயர் அழுத்தம்:

    டயரின் அழுத்தத்தை அதிகப்படுத்தினால், காரின் மைலேஜ் அதிகரிக்கும். ஆனால் இவ்வாறு செய்யும் போது க்ரிப் இழக்க நேரிடலாம். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். இதன் காரணமாக மழை காலங்களில் கார் டயர் அழுத்தத்தை உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.

     

    ஏசி:

    மழை காலங்களில் கார்களை ஏசி இல்லாமல் பயன்படுத்தும் போது வின்ட்ஷீல்டு முழுக்க புகை மூட்டம் ஏற்பட்டு சாலை சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், மழை காலங்களில் ஏசி-யை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வைக்காமல், குறைந்த குளிர்ச்சி ஏற்படும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

    கியர்:

    கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில், கார் ஓட்டும் போது முடிந்தவரை அதிகபட்ச கியருக்கு விரைந்து மாறிக் கொள்வது நல்லது. குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகிவிடும்.

    Photo Courtesy: Freepik

    • பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் தனது கார்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் அறிவித்தது. 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 9 சதவீத யூனிட்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும்.

    2025 வாக்கில் இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவன தலைவர் விக்ரம் பாவா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் i7, ix, i4 மற்றும் மினி SE போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது. 

    • மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றலாம்.
    • நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றும் போது, பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    கார்களில் வழங்கப்படும் பேட்டரி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரையிலும், எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கும். எனினும், இதைத் தொடர்ந்து காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை கட்டாயம் ஏற்படும்.

    அந்த வகையில் காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை ஏற்படும் போது, நீங்களாகவே கார் பேட்டரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் போது, ஒரளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.

     

    கார் பேட்டரியை அறிந்து கொள்ளுங்கள்:

    ஆன்லைன் வலைதளம் அல்லது உள்ளூர் பேட்டரி கடைகளில் பேட்டரியை வாங்கும் முன், கார் பேட்டரியின் அம்சங்கள் அறிந்து வைப்பது அவசியம் ஆகும். இதற்கு பேட்டரி பேக் மீதோ அல்லது, யூசர் மேனுவலை பார்க்க வேண்டும்.

    பழைய பேட்டரியை கண்டறிதல்:

    அனைத்து கார்களிலும் பேட்டரி, பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்காது. சில கார்களில் பேட்டரி, பூட் பகுதியிலும் பொருத்தப்பட்டு இருக்கலாம். இதற்கும் யூசர் மேனுவலை பார்க்கவோ அல்லது சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு பேட்டரி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

     

    துண்டித்தல்:

    கார் பேட்டரியை கண்டறிந்த பிறகு, அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயர்களை கழற்றி விட வேண்டும். அனைத்து பேட்டரி பேக்-களிலும் இரண்டு முனையங்கள் இருக்கும். ஒன்று பிளாக் வயர் மூலமாகவும், மற்றொன்று ரெட் வயர் மூலமாகவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரெட் வயர் பாசிடிவ் முனையம் ஆகும்.

    சுத்தம் அவசியம்:

    காரில் இருந்த பழைய பேட்டரியை கழற்றிய பிறகு, பேட்டரி முனையங்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில சமயங்களில் பேட்டரி முனையங்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு முனையங்கள் அரித்த நிலையில் இருப்பது கனெக்டர்களின் திறனுக்கு நல்லது கிடையாது.

    இதன் காரணமாக பேட்டரி முனையம் மற்றும் பேட்டரி டிரே உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மின்சாரம் சீராக பாயும். முனையங்கள் சுத்தமாக இருக்கும் போது, பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

     

    புதிய பேட்டரி:

    முனையங்கள் மற்றும் பேட்டரி டிரே சுத்தம் செய்த பிறகு, புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்து விடலாம். இன்ஸ்டால் செய்யும் போது, பிளாக் வயரை நெகடிவ் முனையத்திலும், ரெட் வயரை பாசிடிவ் முனையத்திலும் இணைக்க வேண்டும். பேட்டரி முனையங்கள் சீராக இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பிறகு பேட்டரி பேக்-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • மாருதி சுசுகி கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்துக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இக்னிஸ் மாடலை வாங்குவோர் ரூ. 64 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தேர்வு செய்யப்பட்ட நெக்சா கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.

    இவை எக்சேன்ஜ் ஆஃபர், ரொக்க வடிவில் தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. ஜூலை மாதத்துக்கான பலன்கள் மாருதி சுசுகி இக்னிஸ், சியாஸ் மற்றும் பலேனோ மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    2017 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி இக்னிஸ் மாடல் இன்று வரை நெக்சா பிரான்டின் என்ட்ரி-லெவல் மாடலாகவே நீடிக்கிறது. புதிய இக்னிஸ் மாடலை வாங்குவோர் ரூ. 64 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும். இது மேனுவல் வேரியன்ட்களுக்கான சலுகை ஆகும்.

     

    ஆட்டோமேடிக் வேரியண்ட் வாங்குவோர் ரூ. 54 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இதில் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை அடங்கும்.

    நெக்சா பிரான்டிங்கில் பழைய மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி சியாஸ் இருக்கிறது. இந்த செடான் காருக்கு ரூ. 38 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை சியாஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு பொருந்தும். இதில் ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

    மாருதி சுசுகி பலேனோ மாடலின் பெட்ரோல் மேனுவல் மற்றும் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் வேரியன்டிற்கு ரூ. 17 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது நல்லது.
    • வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காலம் துவங்கி விட்டது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தமிழகத்திலும் வானிலை அடிக்கடி மாறிக் கொண்டே தான் வருகிறது. வரும் மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், கார் பயன்படுத்துவோர் அதனை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    பார்கிங்கில் கவனம் தேவை:

    வெள்ள பாதிப்பில் சிக்காமல் இருக்க கார்களை எளிதில் தண்ணீர் சூழும் பகுதிகளில் பார்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் காலத்தில் முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட்டு காரை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வது பெருமளவு பாதிப்பை தவிர்க்க உதவும். வெள்ள பாதிப்பில் சிக்கிய கார்களை சரி செய்ய அதிக பணம் செலவாகும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து பணத்தை மிச்சம் செய்யலாம்.

    பேட்டரி பாதுகாப்பு:

    கனமழை காலக்கட்டங்களில் காரின் பேட்டரி இணைப்பை துண்டித்து விடுவது காரில், ஷாட் சர்கியூட் அல்லது எலெக்ட்ரிக் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க செய்யும். புதிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது சற்றே கடினமான காரியம் ஆகும்.

     

    ஜன்னல்களில் கவனம்:

    மழை மட்டுமின்றி கார் பயன்பாட்டின் போது பின்பற்ற வேண்டிய மிக முக்கிய விஷயம் ஜன்னல்களை மூடி வைப்பது. பலரும் கார் ஜன்னல் மற்றும் கதவுகளை சரியாக மூடாமல் விட்டுவிடுவர். இதனை சரியாக செய்தால், மழை காலங்களில் கார்களுக்குள் நீர் புகாமல் இருக்கும்.

    கசிவு மற்றும் துரு:

    காரில் ஏதேனும் பகுதியில் கசிவு அல்லது துருப்பிடித்து இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். மழை காலங்களில் கார் எளிதில் துருப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும். இதனை சரிபார்க்கும் போது கார்களில் உள்ள ரப்பர் பீடிங்களையும் சரிபார்ப்பது நல்லது.

    ரப்பர் மேட்:

    காரை சுத்தமாக வைத்துக் கொள்ள ரப்பர் மேட் பயன்படுத்தலாம். ரப்பர் மேட்களை சுத்தப்படுத்துவது எளிமையான காரியம் ஆகும். இதனை நிமிடங்களில் கழுவவும், காய வைக்கவும் முடியும். இதுதவிர ரப்பர் மேட்கள் கார்பெட் லைனிங் ஈரமாவதை தடுக்கும். 

    • பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது.
    • மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது.

    மழையில் நனைந்து கொண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டும் வழக்கம் அனைவருக்கும் இருக்காது. சிலருக்கு இவ்வாறு செய்வது பிடிக்கும், சிலருக்கு மழையில் பைக் ஓட்டுவது சிக்கலான காரியமாக இருக்கும். ஒருசிலர் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மழையில் பைக் ஓட்டுவதை தவிர்த்து விடுவர்.

    எதுவாயினும், மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது. அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் நிலை ஏற்பட்டால், சில வழிமுறைகளை பின்பற்றினால் அச்சம் கடந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணத்தை நிறைவு செய்து விடலாம். அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    நிறங்கள்:

    மழையோ, வெயிலோ எந்த காலத்தில் பைக் எடுத்தாலும், சீட்டில் உட்காரும் முன் தேவையான பாதுகாப்பு அக்சஸரிக்களை அணிந்து கொள்வது அவசியம் ஆகும். மழையின் போது சாலையை அதிக தெளிவாக பார்க்க முடியாது என்பதால், சற்றே பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது. இத்துடன் நீர்புகாத வசதி கொண்ட ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். இதுவும் சற்றே பிரகாசமான நிறம் கொண்டிருத்தல் நல்லது.

    வேகம்:

    மழையில் பைக் ஓட்டும் போது முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 முதல் 20 மீட்டர்கள் இடைவெளி விட்டு செல்வது அவசியம் ஆகும். மேலும் பைக்கை முடிந்த வரை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்.

    ஒருவேளை காரின் பின்னாடி பைக் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், பைக்கினை டயர் காரின் பின் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு பைக் ஓட்டும் போது, கார் ஏதேனும் பள்ளத்தில் இறங்குவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் வீண் பதற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

     

    பாதை:

    மழை காலங்களில் எல்லா சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதில்லை. சில இடங்களில் சாலையில் நீர் உடனடியாக வடிந்து விடும். சில பகுதிகளில் ஈரம் காய்ந்துவிடும். இதுபோன்ற பகுதிகளில் ஈரமான பகுதியை தவிர்த்து, நீர் காய்ந்து போன பகுதியில் பைக் ஓட்டலாம். ஈரமான தரையை விட ஈரமற்ற தரையில் பைக் அதிக சீராகவும், கண்ட்ரோல் சிறப்பாகவும் இருக்கும்.

    சுற்றுப்புறம்:

    மழையின் போது சுற்றுப்புறங்களை அதிக கவனமுடன் கையாள வேண்டியது அவசியம் ஆகும். அடிக்கடி கண்ணாடிகளை சரிபார்ப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இன்டர்செக்ஷன் அல்லது ரவுன்டானா உள்ளிட்டவைகளை கடக்கும் போது, மற்ற வாகனங்கள் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

    ×