search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "How To"

    • மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம்.
    • புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே.

    நம்முடை மனம் அமைதிபெற வேண்டும். வாழ்க்கையில் நினைத்த காரியங்களை சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு துணைசெய்யும் மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம். தியானம் யாரெல்லாம் செய்யலாம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியானம் செய்யலாம். தியானம் எந்த இடத்தில் செய்யலாம் என்றால், அமைதியாக இருக்கக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அங்கு அமர்ந்து தியனம் செய்யலாம்.

    சரி தியானம் எப்படி செய்ய வேண்டும்? புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே, புருவ மத்தியை நினைத்துக்கொண்டு இருந்தால் தலைவலி மட்டும் தான் வரும். அப்போது பல பேர் என்ன சொல்லுவாங்க தியானம் செய்தால் தலைவலிதான் வருகிறது. அதனால் தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன் என்று சொல்வார்கள்.

    இப்போது குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது உடனே நாம் குதிரையில் ஏறி அமர்ந்துவிடுவோம். ஆனால் அந்த குதிரை பழக்கமான குதிரை இல்லை. புது குதிரை. இப்போது ஏறி உட்கார்ந்த உடனேயே குதிரையோட கடிவாளத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். குதிரையை ஓடவிட்டு பார்க்க வேண்டும். அதனை ஓடவிட்டு பார்த்து அது எப்படி ஓடுகிறது. எவ்வளவு தூரம் ஓடுகிறது என்று கவனிக்க வேண்டும். அதற்கு பிறகு அந்த கடிவாளத்தை நமக்கு ஏற்றார் போல் திசை திருப்ப வேண்டும் என்று சொன்னால்தான் அந்த குதிரையை நாம் சிறப்பாக இயக்க முடியும்.

    இதையே நாம் தியானம் செய்யும் போது எடுத்த உடனேயே நாம் நம் மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. மனித மனம் என்பது ஒரு குரங்கு. அது ஓரிடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடத்திற்கு தாவிக்கொண்டே இருக்கும். அப்போது நிலையில்லாமல் இருக்கும் மனதை நிலையாக இரு என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது எவ்வாறு நிலையாக இருக்கும் இருக்காது.

    அப்போ தியானமே செய்ய முடிதா என்றால் செய்யலாம். அதற்காக எடுத்தவுடனேயே 100 சிந்தனைகள் நமக்குள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 100 சிந்தனைகளையும் நாம் அடக்குவது என்பது கடினம். எனவே அந்த ௧௦௦ சிந்தனைகளையும் ஒரே மையப்புள்ளிக்கு கொண்டுவர வேண்டும்.

    இப்போது உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். யார் யாருக்கு எந்த தெய்வங்களை பிடிக்குமோ அந்த தெய்வங்களை நினைத்துக்கொள்ளலாம். இப்போது நீங்கள் மனதில் நினைத்த அந்த தெய்வத்தை தவிர வேறு எந்த சிந்தனைகளையும் மனதிற்குள் கொண்டுவரக்கூடாது.

    இப்போ 100 சிந்தனைகளை ஒருசேர நாம் ஒரு புள்ளியில் கொண்டுவைத்துவிட்டோம். இப்போது அந்த தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும். எனக்கு தெய்வம் பிடிக்கவில்லை என்றால் இயற்கை பிடித்தால் இயற்கையை நினைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு அருவி, கடல் மலை அல்லது அழகான மலர், பறவை, மேகம் இவற்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை உங்கள் மனதிற்குள் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதையே நீங்கள் மனதிற்குள் நினைக்க வேண்டும்.

    இதையே நாட்கள் செல்ல செல்ல இதையும் கூட இல்லானல் செய்துவிட முடியும். தனக்குள்ளே தன்னை தேடுகின்ற ஆழ்நிலை தியானத்தை இப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் பயிற்சி பெறுகிறவர்கள் முதலில் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். எப்படி உட்கார வேண்டும் என்றால் பத்மாசனத்தில் உட்கார வேண்டும். அல்லது வஜ்ஜிராசனத்தில் உட்கார வேண்டும்.

    இல்லையென்றால் எங்களுக்கு வயதாகிவிட்டது. கால்வலி, மூட்டுவலி எல்லாம் உள்ளது என்றால் நீங்கள் எப்போதும் போல் சேரில் கூட அமர்ந்துகொள்ளலாம். சரி சேரில் உட்கார்ந்துவிட்டோம். இப்போது கைகளை எப்படி வைக்க வேண்டும். கைகளில் சின் முத்திரையை வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்கள் கட்டை விரலையும், நம்முடைய ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைத்து வைத்தால் அதற்கு சின் முத்திரை என்று பெயர்.

    இல்லையென்றால் அவர்கள் இரண்டு கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ள வேண்டும். கைகளை கோர்த்தவண்ணம் தியானம் செய்யும்போது கைகளை வைத்துக்கொள்ளலாம். இப்போது எந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் தியானம் செய்யலாம். எவ்வாறு அமர்ந்து தியானம் செய்யலாம். கைகளை எப்படி வைத்து தியானம் செய்யலாம் என்பதை தெரிந்துகொண்டோம்.

    இதையும் மீறி நாம் எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டால் தியானத்திற்கு நேரம் என்பது கிடையாது. ஆரம்பத்தில் உங்களால் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடிகிறதோ அவ்வளவு நேரம் உட்கார்து தியானம் செய்யலாம். முதலில் உட்காருவதில் சிரமம் இருக்கும். அதுவே பழகப்பழக 10 நிமிடம், 15 நிமிடம் அல்லது ஒருமணிநேரம் கூட இந்த தியானம் என்பதை செய்ய முடியும்.

    இந்த தியானம் செய்வதினால் நமக்கு என்ன பயன் என்று கேட்டால், யாராக இருந்தாலும் முதலில் ஒரு தெளிவான மனநிலை உருவாகும். மிகவும் அருமையாக உடற்கூறுகள் இயங்குவதற்கு உண்டான தன்மை கிடைக்கும். நுரையீரல் நமக்கு நன்றாக வேலை செய்யும். தியானம் செய்யும் போது மூச்சில் நமது கவனம் இருப்பதால் ஆயுள் அதிகரிக்கும்.

    இது இல்லாமல் தியானம் செய்யும் போது உடலும் மனதும் ஒன்றாக சேரும். நல்ல நினைவாற்றல் ஏற்படும். எதை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவான மனநிலை இருக்கும். ஒரு மனிதனி பண்படுத்தி மனிதனாகவே வைத்திருக்கக்கூடிய உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வது தியானம். அதிலும் ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்துகொண்டு வந்தால் நம்மை இன்னும் அதாவது ஒரு மகானின் நிலைக்கு உயர்த்தும்.

    அதனால் படிப்படியாக தியானம் செய்பவர்களுக்கு இதுதான் வழி. அதனால் ஆரம்பத்தில் முதலில் ஒன்றை நினைக்க வேண்டும். அதன்பிறகு அந்த ஒன்றையும் நீக்கிவிடுவது தான் நமக்கு முழுமையான வெற்றி.

    • மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.
    • கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும்.

    மழை காலத்தில் கார் ஓட்டுவது சற்றே சவாலான காரியம் ஆகும். பொதுவாக மழை காலங்களில் கார் ஓட்டும் போது, மைலேஜ் சற்று குறைவதை பலரும் அனுபவித்து இருப்பர். அந்த வகையில், மழை காலங்களிலும் காரின் மைலேஜ் குறையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    திட்டமிடல்:

    சமயங்களில் குறுக்கு வழியை தேர்வு செய்வது ஆபத்தில் முடியலாம். அதுவும் மழை காலங்களில் எந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் என்பது தெரியாது. இதனால் மழை காலங்களில் குறுக்கு வழிகளை தவிர்த்து, முன்கூட்டியே பயணத்தை திட்மிடுவது நல்லது.

     

    திராட்டில்:

    கார் பயன்பாட்டில் திராட்டில் செய்வதில் மென்மையாக செயல்பட்டால் காரின் மைலேஜ் சீராக அதிகப்படுத்த முடியும். காரை அக்செல்லரேட் செய்யும் போது தான் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.

    டயர் அழுத்தம்:

    டயரின் அழுத்தத்தை அதிகப்படுத்தினால், காரின் மைலேஜ் அதிகரிக்கும். ஆனால் இவ்வாறு செய்யும் போது க்ரிப் இழக்க நேரிடலாம். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். இதன் காரணமாக மழை காலங்களில் கார் டயர் அழுத்தத்தை உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.

     

    ஏசி:

    மழை காலங்களில் கார்களை ஏசி இல்லாமல் பயன்படுத்தும் போது வின்ட்ஷீல்டு முழுக்க புகை மூட்டம் ஏற்பட்டு சாலை சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், மழை காலங்களில் ஏசி-யை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வைக்காமல், குறைந்த குளிர்ச்சி ஏற்படும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

    கியர்:

    கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில், கார் ஓட்டும் போது முடிந்தவரை அதிகபட்ச கியருக்கு விரைந்து மாறிக் கொள்வது நல்லது. குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகிவிடும்.

    Photo Courtesy: Freepik

    • மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றலாம்.
    • நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றும் போது, பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    கார்களில் வழங்கப்படும் பேட்டரி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரையிலும், எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கும். எனினும், இதைத் தொடர்ந்து காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை கட்டாயம் ஏற்படும்.

    அந்த வகையில் காரின் பேட்டரியை மாற்றுவதற்கான தேவை ஏற்படும் போது, நீங்களாகவே கார் பேட்டரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். மிக எளிமையான டூல்களை கொண்டு கார் பேட்டரியை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்களாகவே காரின் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் போது, ஒரளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.

     

    கார் பேட்டரியை அறிந்து கொள்ளுங்கள்:

    ஆன்லைன் வலைதளம் அல்லது உள்ளூர் பேட்டரி கடைகளில் பேட்டரியை வாங்கும் முன், கார் பேட்டரியின் அம்சங்கள் அறிந்து வைப்பது அவசியம் ஆகும். இதற்கு பேட்டரி பேக் மீதோ அல்லது, யூசர் மேனுவலை பார்க்க வேண்டும்.

    பழைய பேட்டரியை கண்டறிதல்:

    அனைத்து கார்களிலும் பேட்டரி, பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்காது. சில கார்களில் பேட்டரி, பூட் பகுதியிலும் பொருத்தப்பட்டு இருக்கலாம். இதற்கும் யூசர் மேனுவலை பார்க்கவோ அல்லது சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு பேட்டரி இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

     

    துண்டித்தல்:

    கார் பேட்டரியை கண்டறிந்த பிறகு, அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயர்களை கழற்றி விட வேண்டும். அனைத்து பேட்டரி பேக்-களிலும் இரண்டு முனையங்கள் இருக்கும். ஒன்று பிளாக் வயர் மூலமாகவும், மற்றொன்று ரெட் வயர் மூலமாகவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரெட் வயர் பாசிடிவ் முனையம் ஆகும்.

    சுத்தம் அவசியம்:

    காரில் இருந்த பழைய பேட்டரியை கழற்றிய பிறகு, பேட்டரி முனையங்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில சமயங்களில் பேட்டரி முனையங்களில் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு முனையங்கள் அரித்த நிலையில் இருப்பது கனெக்டர்களின் திறனுக்கு நல்லது கிடையாது.

    இதன் காரணமாக பேட்டரி முனையம் மற்றும் பேட்டரி டிரே உள்ளிட்டவைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மின்சாரம் சீராக பாயும். முனையங்கள் சுத்தமாக இருக்கும் போது, பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

     

    புதிய பேட்டரி:

    முனையங்கள் மற்றும் பேட்டரி டிரே சுத்தம் செய்த பிறகு, புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்து விடலாம். இன்ஸ்டால் செய்யும் போது, பிளாக் வயரை நெகடிவ் முனையத்திலும், ரெட் வயரை பாசிடிவ் முனையத்திலும் இணைக்க வேண்டும். பேட்டரி முனையங்கள் சீராக இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பிறகு பேட்டரி பேக்-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமமான காரியம் ஆகும்.
    • கார் இன்டீரியரில் ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும்.

    மழை வெளுத்து வாங்கும் கனமழை காலமோ அல்லது நீர்நிலைகளுக்கு எடுத்து செல்வதோ கார் இன்டீரியரில் எப்போது வேண்டுமானாலும் எளிதில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் தான். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும், இதனை முழுமையாக தவிர்ப்பது முடியாத காரியம் தான். அந்த வகையில், ஈரமாகும் கார் இன்டீரியரை விரைந்து காய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

    மழை பெய்யும் போது சன்ரூஃப் லீக் அல்லது ஜன்னல் வழியே கார் இன்டீரியரில் நீர்புகும் சூழல் ஏற்பட்டால், எதில் பிரச்சினை ஏற்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை நீர் 3 செமீ அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் உதவியை நாடுவதே சிறந்தது.

     

    டிரெயின் பிளக்:

    பெரும்பாலான கார்களில் இன்டீரியரில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு டிரெயின் பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்டீரியரில் உள்ள நீரை வெளியேற்றலாம். சில கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமான காரியம் ஆகும்.

    மைக்ரோஃபைபர் துணி:

    தரமான மைக்ரோஃபைபர் துணி அல்லது டவல்களை கொண்டு நீரை முடிந்த வரை உறிஞ்சி அதனை வெளியில் பிழிந்துவிடலாம். இவ்வாறு செய்யும் போது கார்களின் இன்டீரியர் அதிவேகமாக காய்ந்து விடும். முதலில் செய்யும் போது, இந்த வேலை செயலற்றதாக தோன்றும். ஆனால், இதுவே சிறப்பான வழிமுறை ஆகும்.

     

    காற்றாடி:

    இனி அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, போர்டபில் காற்றாடி கொண்டு ஒரே திசையில் வீச செய்ய வேண்டும். சமயங்களில் ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை கொண்டும் இன்டீரியரில் உள்ள ஈரத்தை சரி செய்யலாம். இது கார் இன்டீரியரில் உள்ள ஈரத்தை பெருமளவுக்கு நீக்கிவிடும்.

    ஈரத்தன்மை:

    கார்களில் நீர் புகுந்தால், நீரை எப்படியோ வெளியேற்றி விட முடியும். எனினும், அதன் பிறகு ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும். இதற்கு சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். கார் இன்டீரியரை சுற்றி சிலிகா ஜெல் பாக்கெட்களை வைத்தால் ஈரத்தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.

    • என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அவசியம்.
    • கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    கார்களுக்கு என்ஜின் தான் இதயம் எனலாம். இதனை சரியாக வைத்துக் கொண்டாலே இவற்றில் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு என்ஜினை சரியாக பரிமரித்தால், அதன் திறன் சீராக இருப்பதோடு, நீண்ட காலத்திற்கு சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். அந்த வகையில் கார் என்ஜினை எப்போதும் சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    என்ஜின் ஆயில்:

    என்ஜின் பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் லூப்ரிகேஷன் தான். என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அத்தியாவசியமான ஒன்று ஆகும். குறைந்த அளவு என்ஜின் ஆயில் அல்லது பழைய என்ஜின் ஆயில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை என்ஜினை விரைந்து பாழாக்கி விடும்.

    என்ஜின் பாழாகும் பட்சத்தில் அதனை சரியாக சரிசெய்வது மிகவும் கடினம் ஆகும். இவ்வாறு சரி செய்தாலும், பெரும்பாலான சூழல்களில் இவை மீண்டும் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனை தவிர்க்க என்ஜினுக்கு சீரான இடைவெளியில் ஆயிலை மாற்றுவது நல்லது.

    என்ஜின் கூலன்ட்:

    இன்டர்னல் கம்பஷன் என்ஜின் அல்லது ஐ.சி. என்ஜின் அதிகளவு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை என்ஜினில் உள்ள என்ஜின் கூலிங் சிஸ்டம் தான் குறைக்கும். கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது என்ஜின் எப்போதும் சீரான வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.

    ஏர் ஃபில்ட்டர்:

    காரின் மிக முக்கிய பாகங்களில் ஒன்று தான் ஏர் ஃபில்ட்டர். இது காரின் செயல்திறனை நேரடியாக பாதிப்பதோடு, என்ஜினில் வெளிப்புற அம்சங்கள் நுழைந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்கிறது. இதன் காரணமாக ஏர் ஃபில்ட்டரை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம் ஆகும்.

    ஆயில் ஃபில்ட்டர்:

    தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக சேகரிக்கப்படும் அழுக்குகளை நீக்கும் பணியை ஆயில் ஃபில்ட்டர் மேற்கொள்கிறது. இதில் பாழாகி போன என்ஜின் ஆயில் சேகரிக்கப்படும். சீரான இடைவெளியில் இதனை அகற்றாத பட்சத்தில் என்ஜினில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும்.

    ஆயில் லீக் மற்றும் புகை:

    காரினை விரைந்து சரிபார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் அபாய எச்சரிக்கை தான் ஆயில் லீக் மற்றும் புகை வெளியீடு. காரில் இந்த பிரச்சினை ஏற்பட்டால், அதனை விரைந்து சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை தவிர்க்கும் பட்சத்தில், புதிதாக ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

    • காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தால் எலிகளின் தொல்லை இருக்காது.
    • என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

    கார்களை பராமரித்தல் மிகவும் நேர்த்தியான வேலை. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப கார்களில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது என ஏராளமான நுனுக்கங்கள் இதில் உள்ளன. மழை காலங்களில் கார்களுக்குள் எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வது அதிகரிக்கும். பருவமழை பெய்யும் சீசனும் விரைவில் துவங்க இருப்பதாலும், எப்போதும் கார்களில் எலி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கார்களில் உணவு பண்டங்களை வைக்க வேண்டாம்:

    எலி மற்றும் இதர பூச்சிகள் உணவு பொருட்களை கண்டே கார்களுக்குள் ஈர்க்கப்படலாம். அதனால் கார்களினுள் உணவு பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கார் இண்டீரியரில் உணவு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தாலே எலிகளின் தொல்லை இருக்காது.

    இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்:

    எலிகள் பெரும்பாலும் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்க விரும்பும். இதன் காரணமாகவே என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கார்களை எப்போதும் சுத்தமான மற்றும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் நிறுத்தி வைப்பது நல்லது.

    தெளிப்பான்கள்:

    கார்களில் எலி மற்றும் பூச்சிக்கள் வராமல் இருக்க செய்வதற்காக சந்தையில் ஏராளமான தெளிப்பான்கள் (Spray) கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினாலும், கார்களில் எலி வருவதை தடுக்க முடியும். இவற்றை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

    செல்லப்பிராணிகள்:

    வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும், எலி மற்றும் இதர பூச்சுகளால் எவ்வித இடையூறும் சந்தித்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூனை மற்றும் நாய்களை வீடுகளில் வளர்க்கும் போது, எலி மற்றும் இதர பூச்சிகள் வீட்டிற்குள் வர நினைக்காது. செல்லப்பிராணி வைத்திருக்கும் கார் ஓனர்களுக்கு இது சிறந்த வழிமுறை ஆகும்.  

    • இந்திய டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி விட்டன.
    • விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அதிவேக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவில் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. 2022 இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டெஸ்டிங்கை துவங்கியது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் எட்டு மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை வெளியிட்டு உள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து பலரும் 5ஜி சேவையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருப்பர். புதிய தலைமுறை இணைய சேவையான 5ஜி அதிவேக இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி ஏராளமான இதர பயன்பாடுகளையும் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    5ஜி சேவை பயன்கள்:

    இந்தியாவில் எந்த டெலிகாம் நிறுவனம் வழங்கினாலும், அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்த, 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் ஆகும். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அடுத்து உங்களது ஸ்மார்ட்போன் தேவைக்கு ஏற்ற 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தேவைப்படும் பேண்ட் சப்போர்ட் இல்லை எனில், 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.

    ஸ்மார்ட்போன், பேண்ட் வரிசையில் சிம் கார்டும் 5ஜி வசதி கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து விட்டன. தற்போதைய 4ஜி சிம் வைத்துக் கொண்டே 5ஜி சேவையை பயன்படுத்தலாம். எனினும், அப்டேட் செய்யப்பட்ட சிம் வைத்திருக்க வேண்டும்.

    மூன்றாவது மிக முக்கிய வழிமுறை ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது தான். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங்: ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- நெட்வொர்க் மோட் -- 5G/LTE/3G/2G (auto connect) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கூகுள் பிக்சல் / ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்: செட்டிங்ஸ் -- நெட்வொர்க் & இண்டர்நெட் -- சிம் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5ஜி

    ஒன்பிளஸ்: வைபை & நெட்வொர்க்ஸ் -- சிம் & நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ஒப்போ: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ரியல்மி: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    விவோ / ஐகூ: செட்டிங்ஸ் -- சிம் 1 அல்லது சிம் 2 -- மொபைல் நெட்வொர்க் -- நெட்வொர்க் மோட் -- 5G

    சியோமி / போக்கோ: செட்டிங்ஸ் -- சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5G

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றிய பின் உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்த துவங்கிட முடியும். இனி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்-ஐ கண்டறிந்த பின் தானாக 5ஜி மோடிற்கு மாறிக் கொள்ளும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    ×