search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Tips"

    • இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • பயன்படுத்திய கார் வாங்கும் போது பல்வேறு விஷயங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகும்.

    புதிய கார் வாங்க வங்கிகள் ஏராளமான நிதி சலுகைகளை வழங்கி வருகின்றன. என்ற போதிலும், புதிய கார் வாங்குவதற்கான பட்ஜெட் சற்று அதிகம் ஆகும். இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இதை எதிர்கொள்ளவே பலரும் பயன்படுத்திய கார் மாடல் வாங்குகின்றனர். இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்கள் விற்பனை அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

    ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் மாடலை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. நீங்கள் வாங்கும் பயன்படுத்தப்பட்ட காரில் தீர்க்க முடியாத அல்லது அடிக்கடி பிரச்சினை தரக்கூடிய கோளாறு இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அந்த கார் விபத்தில் சிக்கிய ஒன்றாகவும் இருக்கலாம். அந்த வகையில், காரை செகன்ட் ஹேன்ட்-ஆக வாங்கும்போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    கவனம் அவசியம்:

    விலையை கேட்கும் போது கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிந்தாலும், பிரீமியம் கார்கள் மற்றும் எஸ்யுவிக்களை வாங்கினால், அவற்றை பராமரிப்பதற்கான செலவீனங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களின் தேவைக்கு பட்ஜெட்டில் பார்ப்பதை விட, பயன்பாட்டுக்கு தேவையான கார் மாடலை தேர்வு செய்வது நல்லது.

    காரின் நிலை:

    காரை தேர்வு செய்த பிறகு, அதனை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கு கார்களை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாத பட்சத்தில், அந்த விஷயத்தில் விவரம் அறிந்தவர்கள் உதவியை நாடுவது நல்லது. கார் வாங்கும் முன் அதன் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    இதில் காரின் ஒட்டுமொத்த தோற்றம், அதன் இன்டீரியர் பாகங்கள், டயரின் நிலை உள்ளிட்டவைகளை முழுமையாக சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

     

    டெஸ்ட் டிரைவ்:

    கார்கள் பெரும்பாலும் தோற்றத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கும். ஆனால், ஓட்டும் போது தான் அவற்றின் உண்மையான நிலை நமக்கு தெரியவரும். அந்த வகையில், காரை வாங்கும் முன் அதனை டெஸ்ட் டிரைவ் செய்வது நல்லது. டெஸ்ட் டிரைவ் முடித்த பிறகு, கார் நிலை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது, ஏதேனும் கோளாறு இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தால், அதனை வாங்காமல் தவிர்த்து விடுவது நல்லது.

    பராமரிப்பு வரலாறு:

    கார் நல்ல நிலையில், இருப்பதை உறுதிப்படுத்திய பிறகு காரை ஓட்டுவதற்கு உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். கார் பயன்படுத்தும் அனைவரும் அதன் பராமரிப்பு விஷயங்களை தகவல்களாக வைத்திருப்பது இல்லை. ஆனால் ஒருசிலர் இவ்வாறு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். இதனால், கார் பராமரிப்பு எத்தனை கால அளவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை சரிபார்ப்பது நல்லது.

     

    தரவுகள்:

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின், கடைசியாக காருக்கான பதிவு சான்று, காப்பீடு போன்ற தரவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதோடு காரை வாங்கியதும் பதிவு சான்றில் உங்களின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

    • கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமமான காரியம் ஆகும்.
    • கார் இன்டீரியரில் ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும்.

    மழை வெளுத்து வாங்கும் கனமழை காலமோ அல்லது நீர்நிலைகளுக்கு எடுத்து செல்வதோ கார் இன்டீரியரில் எப்போது வேண்டுமானாலும் எளிதில் நீர் புகும் வாய்ப்புகள் அதிகம் தான். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும், இதனை முழுமையாக தவிர்ப்பது முடியாத காரியம் தான். அந்த வகையில், ஈரமாகும் கார் இன்டீரியரை விரைந்து காய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பார்ப்போம்.

    மழை பெய்யும் போது சன்ரூஃப் லீக் அல்லது ஜன்னல் வழியே கார் இன்டீரியரில் நீர்புகும் சூழல் ஏற்பட்டால், எதில் பிரச்சினை ஏற்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை நீர் 3 செமீ அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் உதவியை நாடுவதே சிறந்தது.

     

    டிரெயின் பிளக்:

    பெரும்பாலான கார்களில் இன்டீரியரில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு டிரெயின் பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்டீரியரில் உள்ள நீரை வெளியேற்றலாம். சில கார்களில் டிரெயின் பிளக்-களை கண்டறிதல் சிரமமான காரியம் ஆகும்.

    மைக்ரோஃபைபர் துணி:

    தரமான மைக்ரோஃபைபர் துணி அல்லது டவல்களை கொண்டு நீரை முடிந்த வரை உறிஞ்சி அதனை வெளியில் பிழிந்துவிடலாம். இவ்வாறு செய்யும் போது கார்களின் இன்டீரியர் அதிவேகமாக காய்ந்து விடும். முதலில் செய்யும் போது, இந்த வேலை செயலற்றதாக தோன்றும். ஆனால், இதுவே சிறப்பான வழிமுறை ஆகும்.

     

    காற்றாடி:

    இனி அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, போர்டபில் காற்றாடி கொண்டு ஒரே திசையில் வீச செய்ய வேண்டும். சமயங்களில் ஹேர் டிரையர் போன்ற சாதனங்களை கொண்டும் இன்டீரியரில் உள்ள ஈரத்தை சரி செய்யலாம். இது கார் இன்டீரியரில் உள்ள ஈரத்தை பெருமளவுக்கு நீக்கிவிடும்.

    ஈரத்தன்மை:

    கார்களில் நீர் புகுந்தால், நீரை எப்படியோ வெளியேற்றி விட முடியும். எனினும், அதன் பிறகு ஏற்படும் ஈரத்தன்மையை போக்குவது சவாலான காரியம் ஆகும். இதற்கு சிலிகா ஜெல் பயன்படுத்தலாம். கார் இன்டீரியரை சுற்றி சிலிகா ஜெல் பாக்கெட்களை வைத்தால் ஈரத்தன்மையை பெருமளவு குறைக்க முடியும்.

    • காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தால் எலிகளின் தொல்லை இருக்காது.
    • என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

    கார்களை பராமரித்தல் மிகவும் நேர்த்தியான வேலை. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப கார்களில் இதை செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது என ஏராளமான நுனுக்கங்கள் இதில் உள்ளன. மழை காலங்களில் கார்களுக்குள் எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்வது அதிகரிக்கும். பருவமழை பெய்யும் சீசனும் விரைவில் துவங்க இருப்பதாலும், எப்போதும் கார்களில் எலி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கார்களில் உணவு பண்டங்களை வைக்க வேண்டாம்:

    எலி மற்றும் இதர பூச்சிகள் உணவு பொருட்களை கண்டே கார்களுக்குள் ஈர்க்கப்படலாம். அதனால் கார்களினுள் உணவு பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கார் இண்டீரியரில் உணவு பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. காரை சுத்தமாகவும், எந்த விதமான துர்நாற்றமும் இன்றி பராமரித்தாலே எலிகளின் தொல்லை இருக்காது.

    இருள்சூழ்ந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்:

    எலிகள் பெரும்பாலும் இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே தங்க விரும்பும். இதன் காரணமாகவே என்ஜின் பகுதி எலிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. கார்களை எப்போதும் சுத்தமான மற்றும் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளில் நிறுத்தி வைப்பது நல்லது.

    தெளிப்பான்கள்:

    கார்களில் எலி மற்றும் பூச்சிக்கள் வராமல் இருக்க செய்வதற்காக சந்தையில் ஏராளமான தெளிப்பான்கள் (Spray) கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினாலும், கார்களில் எலி வருவதை தடுக்க முடியும். இவற்றை நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.

    செல்லப்பிராணிகள்:

    வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும், எலி மற்றும் இதர பூச்சுகளால் எவ்வித இடையூறும் சந்தித்து இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பூனை மற்றும் நாய்களை வீடுகளில் வளர்க்கும் போது, எலி மற்றும் இதர பூச்சிகள் வீட்டிற்குள் வர நினைக்காது. செல்லப்பிராணி வைத்திருக்கும் கார் ஓனர்களுக்கு இது சிறந்த வழிமுறை ஆகும்.  

    ×