search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎம்பிள்யூ"

    • பிஎம்டபிள்யூ G310 R மாடல் முன்னதாக டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் நிறங்களில் கிடைத்தது.
    • பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது G310 R மோட்டார்சைக்கிளின் புதிய நிற வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிறம் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் போன்ற நிறங்களுடன் இணைகிறது.

    புதிய நிறம் தவிர பிஎம்டபிள்யூ G310 R அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் சிங்கில்-பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கவுல், மஸ்குலர் பியூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட்கள், என்ஜின் கவுல், ஸ்டெப்-அப் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     

    ஹார்டுவேரை பொருத்தவரை 41 மில்லிமீட்டர் அளவில் அப்சைடு டவுன் போர்க்குகள், பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 300 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 ஹெச்பி பவர் மற்றும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருள் மற்றும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டு உள்ளது. 

    • பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் தனது கார்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில் அறிவித்தது. 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 9 சதவீத யூனிட்கள் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும்.

    2025 வாக்கில் இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவன தலைவர் விக்ரம் பாவா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். 2023 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 500-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் i7, ix, i4 மற்றும் மினி SE போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறது. 

    ×