search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதி"

    • ஆதி திராவிடர்-பழங்குடியின மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
    • இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ-மாணவியர் விடுதிகள் மாணவர் விடுதி 22, மாணவியர் விடுதி 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகள் கீழ்கண்ட அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து தங்கி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 4 இணை சீருடைத்துணிகள் தைத்து வழங்கப்படும்.

    அரசாணைப்படி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10சதவீதம்), பிற வகுப்பி னர்கள் (5சதவீதம்) என்ற விகிதத்தில் புதிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    மாணவர்கள் விடுதியில் சேர அவர்களது பெற்றோர், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்த பட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

    மேற்படி நிபந்தனை மாணவிக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாண வர்கள் இணைய வழியில் https:\\tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை யாசிரியர் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு EMIS எண் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

    விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் புகைப்படம், சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை, பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விண்ணப் பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளினி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன.
    • உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன. அதன்படி உடுமலை அரசு பள்ளி மாணவர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவர் விடுதி, தாயம்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி, குண்டடம் அரசு பள்ளி மாணவர் விடுதி, எலுகாம்வலசு அரசு பள்ளி மாணவர் விடுதி, சின்னக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர் விடுதி, திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி, பல்லடம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர் விடுதி, அவினாசி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகியவை மாணவர்களுக்காக உள்ளன.

    இதுபோல் திருப்பூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தாராபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவியர் விடுதி, முத்தூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, சின்னகாம்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவை மாணவிகளுக்காக உள்ளன.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 4 சீருடைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    பள்ளி விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதிச்சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து வருகிறது.
    • 30 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேரால யத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.

    ஆண்டு பெருவிழாவில் கலந்து கொள்ள நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஆலயநிர்வாகம் செய்து வருகிறது.

    ஆலயம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து உள்ளது.

    ஆலய வளாகத்தில் கும்பகோணம் முன்னாள் பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் பெயரில் அமைந்த 30அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி புதுப்பிக்கப்பட்ட விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    இதற்கானகல்வெட்டை மறைமாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பூண்டி பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பேராலயதுணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ்,ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
    • பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்டம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அடுத்தமாதம் (மே) 2-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 15 நாட்கள் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். இந்த கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    முகாமில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோர் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அலுவலக வேலை நேரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி வாயிலாகவோ பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இந்த முகாமில் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
    • பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.

    • மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்.
    • விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

    இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி அமைந்துள்ளது.

    இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு தரமான முறையில் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து.

    இந்த விடுதியில் திடீரென மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா? எனறு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறி இல்லை.

    மோர் மோசமாக இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக தரமாக வழங்க வேண்டும்.

    சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதற்கு மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும், மின் விளக்குகள் வரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கூறினர்.

    கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

    மேலும் உங்களது தேவைகள் எதுவானாலும் தயங்காமல் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறி தனது மொபைல் எண்ணை தெரிவித்தார்.

    • விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
    • மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.

    இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.

    மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுசீந்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவர்க ளிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

    • சட்டபேரவையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதி இருக்கிறது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் மொத்தம் 6 சட்ட மன்ற தொகுதி இருக்கிறது.இதில் என்னுடைய கிள்ளியூர் தொகுதியில் சட்டமன்ற பயணியர் தங்கும் விடுதி கிடையாது. இங்கு முக்கிய மானவர்கள் நிறைய பேர் வந்து செல்கிறார்கள். அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதியிலும் பயணியர் விடுதி இல்லை.ஆகவே கிள்ளியூர் தொகுதியில் பயணியர் விடுதி, ஆய்வு மாளிகை அமைத்து தரு வார்களா? என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு. கூறியதாவது:-

    தொகுதிக்கு தொகுதி ஆய்வு மாளிகை அல்லது சுற்றுலா மாளிகை அமைப் பது என்பது அரசினுடைய விதியில் இல்லை. பொது வாக மாவட்ட தலைநக ரங்கள், அதைபோல தாலுகா தலைநகரங்கள் போன்ற இடங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் தாலுகா தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் தான் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் வருவது, தங்குவது அல்லது அமைச்சர் வரு வது, சட்டமன்ற உறுப்பி னர்கள் வருவது என்று இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

    அவர் சொல்வது மாவட்ட தலை நகரம் இல்லை. அடுத்த மாதம் நான் கன்னியா குமரி வருவதாக இருக்கி றேன். ஒருவேளை அது தாலுகா தலைநகரமாக இருக்கு மேயானால் நான் அங்கே வருகிற போது நேரடியாக நானே அவசியம் வந்து பார்க்கிறேன். அவசியம் இருக்குமேயானால், முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அங்கே அதனை அமைப்பதற்கான முயற்சியை செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
    • ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

    அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்காணிப்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகர எல்லைக்குள் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் 50 தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:-

    லாட்ஜிகளில் உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களின் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் தங்கி செல்பவர்களின் விவரங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.அறையில் தங்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களின் விபரங்களை வாங்கி சேமித்து பராமரிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் அளிக்கும் தொலைபேசி எண் சரியானதுதானா எனஉறுதி செய்ய வேண்டும்.

    லாட்ஜ் வரவேற்பு அறையில்வாடிக்கையாளர்கள் முகம் தெளிவாக பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்.

    அதேபோல் வாகன நிறுத்தும் இடங்களில் உள்ளகேமரா வாகன எண் தெளிவாக பதிவு செய்யும் வகையில் பொருத்தவேண்டும். 24x7 என்ற வகையில் கண்காணித்து பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.லாட்ஜிற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் உடைமைகளைசோதனை செய்ய Baggage Scanner பொருத்த வேண்டும்.தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் முழுவிவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர்களின்அடையாள அட்டைகளைபெற வேண்டும். அதேபோல்லாட்ஜில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், வேலையாட்கள்விவரங்களை அடையாள அட்டையுடன் வாங்கி வைத்து பராமரிக்க வேண்டும்.

    தங்கும் விடுதிகளில் தவிர்க்க வேண்டியவை

    லாட்ஜில் (சீட்டாட்டம், விபச்சாரம் மற்றும் மது அருந்த அனுமதிஅளித்தல்) ஆகிய சட்ட விரோதமான செயல்கள் எதையும் அனுமதிக்ககூடாது.லாட்ஜில் தங்கக்கூடிய நபரின் அடையாள அட்டை மட்டுமே வாங்கவேண்டும். வேறு ஒரு நபரின் அடையாள அட்டை வாங்கி வைக்ககூடாது.உரிய அடையாள அட்டை அளிக்காத நபர்களை தங்க அனுமதிக்க கூடாது.வாடிக்கையாளர்கள் லாட்ஜில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்எதையும் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. இது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.கூட்டத்தில் துணைகமிஷனர்கள், உதவிகமிஷனர்கள் பங்கேற்றனர்.

    • தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை, அக். 13-

    குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகலை அடுத்த குட்டைக் கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரு கிறது.

    இங்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவரது தாயார் வெளி நாட்டில் நர்சு வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி யின் படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொடுக்க வேண்டி அதற்கான ஏற்பாடு களை தாயார் செய்து வந்து உள்ளார். ஆனால் மாணவி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இதனை கண்டித்த தாயார், மகள் காதலிப்பதாக தெரிய வந்த வாலிபரிடமும் செல்போனில் பேசி, தனது மகளை விட்டு செல்லுமாறு திட்டி உள்ளார்.

    இதுபற்றி அந்த வாலி பர், மாணவியிடம் கூறி உள்ளார். மேலும் அவரது தாயார் பேசியதை செல்போ னில் பதிவு செய்து அதனை மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் மாணவி மன வருத்தம் அடைந்தார்.

    நேற்று இரவு மாணவி தான் தங்கி இருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அதில் தோல்வி கண்டு கீழே விழுந்ததில் அவரது 2 கால்களும் உடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார்.

    தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி தூக்குப் போடவில்லை என்பதும், கல்லூரியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதில் தான் மாணவியின் 2 கால்களும் உடைந்த நிலையில் உயிருக்கு போராடியபடி வலி தாங்க முடியாமல் கதறி அழுது உள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவி கள் மற்றும் விடுதி காப்பா ளர்கள், மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றதாக கூறிய நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதல் விவகாரத்தில் மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேலி ருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்து உள்ளது.

    தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×