search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைமுயற்சி"

    • தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.
    • தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை, அக். 13-

    குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகலை அடுத்த குட்டைக் கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரு கிறது.

    இங்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். இவரது தாயார் வெளி நாட்டில் நர்சு வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி யின் படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொடுக்க வேண்டி அதற்கான ஏற்பாடு களை தாயார் செய்து வந்து உள்ளார். ஆனால் மாணவி கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இதனை கண்டித்த தாயார், மகள் காதலிப்பதாக தெரிய வந்த வாலிபரிடமும் செல்போனில் பேசி, தனது மகளை விட்டு செல்லுமாறு திட்டி உள்ளார்.

    இதுபற்றி அந்த வாலி பர், மாணவியிடம் கூறி உள்ளார். மேலும் அவரது தாயார் பேசியதை செல்போ னில் பதிவு செய்து அதனை மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் மாணவி மன வருத்தம் அடைந்தார்.

    நேற்று இரவு மாணவி தான் தங்கி இருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அதில் தோல்வி கண்டு கீழே விழுந்ததில் அவரது 2 கால்களும் உடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார்.

    தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பளுகல் போலீசார் அங்கு சென்று மாணவியிடம்விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி தூக்குப் போடவில்லை என்பதும், கல்லூரியின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதில் தான் மாணவியின் 2 கால்களும் உடைந்த நிலையில் உயிருக்கு போராடியபடி வலி தாங்க முடியாமல் கதறி அழுது உள்ளார்.

    அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவி கள் மற்றும் விடுதி காப்பா ளர்கள், மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றதாக கூறிய நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதல் விவகாரத்தில் மாணவி கல்லூரி கட்டிடத்தின் மேலி ருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்து உள்ளது.

    தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளியில் காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வடவள்ளி:

    கோவை மருதமலை அன்னை இந்திரா காலனியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபி (22). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரூபி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடியின் மேல் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.

    காதல் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தினேசுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தினேஷ் இறங்கி வந்தார்.

    இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
    ×