search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களியக்காவிளை"

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை யில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாகர்கோவில் :பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குகளியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலை யில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண் கடத்து வதை பார்த்துள்ள னர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்த உடன் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

    பின்னர் டெம்போவை யும், கிட்டாச்சி எந்திரத்தை யும் பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் செம்மண் கடத்தியதாக பா.ஜ.க.வின் முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் மற்றும் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த றோய், மடிச்சல் பகுதியை சேர்ந்த ஆபீஸ், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


    • ஒருவர் படுகாயம்
    • இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.

    களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது.
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தோமஸ் இவர் டாஸ்மார்க் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. தோமஸ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர் மது அருந்தி விட்டு சரிவர வேலைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தோமஸ் அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தனது அறையில் சென்று கதவை பூட்டி உள்ளார்.நீண்ட நேரமாகியும் தோமஸ் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்த போது தோமஸ் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். தோமஸ் சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது. மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தோமஸை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விடுதியில் இருந்து வெளியேறிய மாணவர்கள்
    • பெற்றோர் அழைத்துச் சென்றதால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்திரன் (வயது 19). இவர் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் விடுதியின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர் சுமித்திரன் உடலை களியக்காவிளை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சுமித்திரன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை யில் மாணவர் சுமித்திரன் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சூழலில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் தங்கள் பிள்ளைகளின் பாது காப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    அதற்கு கல்லூரி நிர்வா கம் கொடுத்த விளக்கத்தால் திருப்தி அடையாத சில பெற்றோர், தங்கள் பிள்ளை களை வீட்டிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.மேலும் சில மாணவர்கள் தாங்களாகவே வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி வளாகத்தில் பர பரப்பு ஏற்பட்டது.

    • போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்
    • முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும், மாணவரின் பெற்றோரும் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள படந்தாலு மூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுமித்திரன் (வயது 19) படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று மர்மமான முறையில் விடுதி யின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    களியக்காவிளை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்த சம்ப வம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவரின் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    அதில்,சுமித்திரன் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாண வனுக்கு ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது மாணவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் குறிப்பிட்டு உள்ளனர்.

    வேறு ஏதாவது மோதலில் தாக்கப்பட்டு சுமித்திரன் இறந்திருக்கலாமா? அதன் பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.

    3-வது மாடியில் இருந்து சிறு நைலான் கயிறு மூலம் மாணவர் சுமித்ரன் குதித்து தற்கொலை செய்திருந்தால் கயிறு அறுபட்டு சுமித்திரன் கீழே விழ வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இறந்த அவரை, யாரோ தூக்கி வந்து கயிற்றில் தொங்க விட்டது போல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

    மேலும் மாணவர் தங்கியிருந்த விடுதியில் இரவு 1 மணிக்கு மேல் கஞ்சா வியாபாரிகள் உள்ளே செல்வதாகவும் அந்த ஊர் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும் மாணவரின் பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
    • மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.

    இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.

    மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுசீந்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவர்க ளிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கை.
    • கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக தேங்காய் ஏற்றி மினி டெம்போ ஒன்று வந்துக்கொண்டிருந்தது. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சுமார்1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

    இதையடுத்து போலீசார் டெம்போ டிரைவரை கைது செய்தனர்.அவர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    • திருமண விழாவில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
    • பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பாறசாலை இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரென்ஜித் ( வயது 40).

    இவரது நண்பர்கள் விபின், றிஜூ , ரெஜி. நேற்று காலை நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமணவீட்டிற்கு சென்றனர். திருமணம் முடிந்து நண்பர்கள் சேர்ந்து மது விருந்து நடத்தினர். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

    இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ரென்ஜித் மது போதையில் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். அவரது நண்பர்களான விபின், றிஜூ , ரெஜி ஆகியோர் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

    மது போதையில் ரென்ஜித் வீட்டிற்கு சென்று 3 பேரும் சேர்ந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து ரென்ஜித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரென்ஜித்தும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேரும் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் ரென்ஜித் தலையில் தாக்கியதோடு, அவரது கழுத்திலும் குத்தினர். இதில் ரென்ஜித் படுகாயமடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த உடன் 3 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது படுகாயமடைந்த ரென்ஜித் இறந்த நிலையில் காணப்பட்டார். மேலும் போலீசார் ரென்ஜித் உடலை மீட்டுஉடல் கூறு ஆய்விற்கு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் நண்பர்கள் இடையே மாறி மாறி தாக்கியதில் விபின் தலையிலும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர் பாறசாலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரெஜூ, றஜி யை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இடையே மது போதையில் நடந்த கொலை சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      கன்னியாகுமரி:

      ஐரேனிபுரம் பகுதியில் வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      • ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
      • களியக்காவிளை போலீசார் விசாரணை

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார்.

      பல்வேறு சமூக பணி களிலும் பீட்டர் ஈடுபட்டு வந்தார். மேலும் குழித்துறை பகுதியில் குற்றச் செயல்களையும் இவர் கண்டித்துள்ளார். இதனால் சிலருடன் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

      சம்பவத்தன்று பீட்டர் குழித்துறையில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பீட்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

      பின்னர் மேல்சிகிச்சை க்காக அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பீட்டரை தாக்கியது பால விளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ புத்திரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சசி, கில்பர்ட் என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

      ராஜ புத்திரன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.சமீபத்தில் வழக்கு ஒன்றில் 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற அவன், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

      • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
      • கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

      கன்னியாகுமரி:

      களியக்காவிளை வட்ட வழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வா ளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

      அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிறுத்தப்படாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

      காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

      பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலு வலகத்திலும் ஒப்படைக் கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      ×