search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து
    X

    விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்

    களியக்காவிளை அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து

    • பெண் படுகாயம்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று அதிகாலை ஒரு கார் புறப்பட்டது.

    அந்த காரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த முகமது சாபி ஓட்டி வந்தார். காரின் பின் சீட்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜினா அமர்ந்திருந்தார்.

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதி யில் கார் வந்த போது எதிர்பா ராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பின்இருக்கையில் அமர்ந்தி ருந்த அஜினா படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×