search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே ஆலய நிர்வாகி  தற்கொலை
    X

    கோப்பு படம்

    களியக்காவிளை அருகே ஆலய நிர்வாகி தற்கொலை

    • மகன் ஒரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு
    • அவரிடம் உறவினர்கள் யாரும் பேசுவதில்லை என்பதால் மன வேதனை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவர் வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தலைவராக உள்ளார். இவருக்கு மனைவியும் மகள், மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி வேறு ஊரில் வசித்துவருகிறார்.மகன் திருமணம் முடிந்து ராஜேந்திரனுடன் உள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் மகன் ஒரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கில் ராஜேந்திரனுக்கு ஏராளமான பணம் செலவானதாக கூறப்படுகிறது.

    மேலும் அவரிடம் உறவி னர்கள் யாரும் பேசுவதில்லை என்றும் தெரிகிறது. இதனால் ராஜேந்திரனுக்கும் அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ராஜேந்திரன் மன வேதனையில் இருந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு அறையில் சென்று தூங்கி உள்ளார்.காலையில் வெகு நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி அறைக்குள் சென்று பார்த்தார்.

    அப்போது கணவர் விஷம் குடித்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×