search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி"

    • சட்டபேரவையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதி இருக்கிறது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் மொத்தம் 6 சட்ட மன்ற தொகுதி இருக்கிறது.இதில் என்னுடைய கிள்ளியூர் தொகுதியில் சட்டமன்ற பயணியர் தங்கும் விடுதி கிடையாது. இங்கு முக்கிய மானவர்கள் நிறைய பேர் வந்து செல்கிறார்கள். அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதியிலும் பயணியர் விடுதி இல்லை.ஆகவே கிள்ளியூர் தொகுதியில் பயணியர் விடுதி, ஆய்வு மாளிகை அமைத்து தரு வார்களா? என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு. கூறியதாவது:-

    தொகுதிக்கு தொகுதி ஆய்வு மாளிகை அல்லது சுற்றுலா மாளிகை அமைப் பது என்பது அரசினுடைய விதியில் இல்லை. பொது வாக மாவட்ட தலைநக ரங்கள், அதைபோல தாலுகா தலைநகரங்கள் போன்ற இடங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் தாலுகா தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் தான் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் வருவது, தங்குவது அல்லது அமைச்சர் வரு வது, சட்டமன்ற உறுப்பி னர்கள் வருவது என்று இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

    அவர் சொல்வது மாவட்ட தலை நகரம் இல்லை. அடுத்த மாதம் நான் கன்னியா குமரி வருவதாக இருக்கி றேன். ஒருவேளை அது தாலுகா தலைநகரமாக இருக்கு மேயானால் நான் அங்கே வருகிற போது நேரடியாக நானே அவசியம் வந்து பார்க்கிறேன். அவசியம் இருக்குமேயானால், முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அங்கே அதனை அமைப்பதற்கான முயற்சியை செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து துறை அமைச்சரிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியோர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக சட்டமன்ற அலுவலகத்திற்கு அதிகமான மனுக்கள் வந்துள்ளதாலும், பொதுமக்கள் பலமுறை நேரில் சந்தித்து என்னிடம் கோரிக்கை வைத்துள்ளதாலும் கீழ்கண்ட வழித்தடங்களில் இயங்கி கொண்டிருந்த பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கி தந்து உதவுமாறு அமைச்சரை கேட்டு கொள்கிறேன்.

    கருங்கலில் இருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள் நகர், இரணியல், வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு செல்லும் பாயிண்டு டூ பாயிண்டு முழுநேர பேருந்து, மற்றும் புதுக்கடை, சடையன்குழி, கிள்ளியூர், தொலையாவட்டம், பாலூர், கருங்கல், கருமாவிளை, கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, பாளையம், திங்கள்நகர் வழியாக தக்கலை செல்லும் தடம் எண் 10 C - புதுக்கடை - தக்கலை முழுநேர பேருந்து மற்றும் வடசேரி, பார்வதிபுரம், சுங்கான்கடை, பரசேரி, இரணியல், திங்கள்நகர், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், இனையம்புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர் வழியாக ராமன்துறை செல்லும் தடம் எண் 309 E மற்றும் 309 E, F.P - நாகர்கோவில் - ராமன்துறை முழுநேர பேருந்து, மற்றும் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குருந்தன்கோடு, இரணியல், திங்கள்நகர், பாளையம், திக்கணங்கோடு, மத்திகோடு, கருங்கல், மிடாலக்காடு வழியாக மிடாலம் செல்லும் தடம் எண் 7 J - நாகர்கோவில் - மிடாலம் பேருந்து, குளச்சல், பாலப்பள்ளம், கருங்கல், பாலூர், கம்பிளார், வேங்கோடு, புதுக்கடை, நித்திரவிளை வழியாக நீரோடி காலனி செல்லும் தடம் எண் 302 A - குளச்சல் - நீரோடி பேருந்து, கருங்கலில் இருந்து

    பாலூர், தெருவுக்கடை, தொழிக்கோடு, செந்தறை, பரவை, பொத்தியான்விளை, வில்லாரிவிளை, கீழ்குளம், தேங்காப்பட்டணம், புதுக்கடை, காப்பிக்காடு வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87B - மார்த்தாண்டம் - கருங்கல் பேருந்தை ஒரே வழித்தடத்தில் முழுநேர பேருந்தாக இயக்க வேண்டும். இனையம் முதல் தேங்காப்பட்டணம் வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87A - பேருந்தை இனையத்திலிருந்து உடவிளை, ஈத்தன்காடு, செந்தறை, தொழிக்கோடு, தெருவுக்கடை வழியாக கருங்கல் வரை பொதுமக்கள் நலன் கருதி நீட்டிப்பு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று தொடங்கியது
    • நட்டாலம் வழியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குள் பாதயாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர்கள் கிறிஸ்டோபர், பால்ராஜ், டென்னிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தேர்தல் பொறுப்பாளர் சனல்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பாதயாத்திரை இன்று காலை 9 மணி அளவில் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஊரம்பு, நடைக்காவு வழியாக மதியம் நித்திரவிளை வந்தடைகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் நித்திரவிளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, விரிவிளை, மங்காடு, முஞ்சிறை வழியாக புதுக்கடை பேருந்து நிலையம் வந்தடையும். இத்துடன் முதல் நாள் பாதயாத்திரை புதுக்கடையில் நிறைவடைகிறது. பின்னர் புதுக்கடையில் உள்ள ஜே.ஆர். மஹாலில் அனைவரும் தங்குகின்றனர்.

    2-ம் நாள் பாதயாத்திரை நாளை (10-ந்தேதி) காலை 8 மணிக்கு புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கைசூண்டி, கூட்டாலுமூடு, தேங்காப்பட்டணம், கீழ்குளம், புத்தன் துறை, இனையம், பாரக்கான் விளை வழியாக மதியம் தொழிக்கோடு வந்தடையும். பின்னர் அங்கு மதிய உணவு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு தொழிக்கோடு பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தெருவுக்கடை, கருங்கல், மூசாரி, பாலூர், தொலையாவட்டம் வந்தடை யும். பின்னர் தெய்வப்பனவிளையில் அனைவரும் தங்குகின்றனர்.

    இதனை அடுத்து 3-ம் நாள் பாதயாத்திரை நாளை மறுநாள் (11-ந்தேதி) காலை 8 மணிக்கு தொலையா வட்டத்தில் இருந்து ஆரம்பிக்க ப்பட்டு முள்ளங்கி னாவிளை, நட்டாலம் வழியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குள் பாதயாத் திரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த பாத யாத்திரையில் மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், கிள்ளியூர் யூனியன் சேர்மன் கிரிஸ்டல் ரமணி பாய், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கொல்லங்கோடு நகர காங்கி ரஸ் கமிட்டி தலைவர் ரெஜீஸ், மாவட்ட நிர்வாகிகள் அருளானந்தன், ஸ்டீபன், டென்னிஸ், அசோகன், ராஜேந்திரகுமார், ரசல் ராஜ், கொல்லங்கோடு கவுன்சிலர் ஜெரோம் உட்பட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் திரளாக இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ×