search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை"

    • 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
    • 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த அவர் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தனது முதல் கட்ட யாத்திரையை காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த யாத்திரையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய பிரபலங்களும் பயணித்தனர். யாத்திரையின் போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் பேசியது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் முதல்கட்ட யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி ரூ.71.8 கோடி செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் மொத்த ஆண்டு செலவின் 15.3 சதவீதமாகும். 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

    அதில், 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது கடந்த 2022-2023-ம் ஆண்டில் ரூ.452 கோடியாக குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அதன் செலவினம் ரூ.400 கோடியில் இருந்து 467 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
    • காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.

    தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்.
    • கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் வழக்கமாக உள்ளது.

    அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள்பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் செல்கின்றனர். அவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாளை மறுநாள் தை 1-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இதையொட்டி நாளை (3-ந் தேதி ) முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    அதன்படி நாளை (3-ந் தேதி) காலை 11 மணியளவில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பேளூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். 3 மணிக்கு ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் டவுன் பகுதியிலும், மாலை 6 மணிக்கு கெங்கவல்லி தொகுதியில் தம்மம்பட்டியிலும் பாத யாத்திரை செல்கிறார்.

    4-ந் தேதி காலை 11 மணிக்கு ஓமலூர் தொகுதிக்கு ட்பட்ட ஓமலூரிலும், மதியம் 3 மணிக்கு வீர பாண்டி தொகுதி இளம்பிள்ளையிலும், மாலை 6 மணிக்கு எடப்பாடி பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    5-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகரில் பாத யாத்திரை நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் மாநகர தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மேற்கு சட்ட சபை தொகுதிக்குட்பட்ட சேலம் 5 ரோடு முதல் மெய்யனூர் சாலை வரையிலும் மதியம் 2 மணி வரைக்கும், செவ்வாய்ப்பேட்டை முக்கோணம் முதல் அரசு ஆஸ்பத்திரி வரை மாலை 5 மணிக்கும், தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குகை முதல் தாதகாப்பட்டி வரை இரவு 7 மணிக்கும் பாதயாதத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.

    8-ந் தேதி காலை 11 மணிக்கு மேட்டூர் தொகுதி மேச்சேரியில் பா.ஜனதா தலைவர் பாதயாத்திரை செல்கிறார். மேலும் சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (3-ந் தேதி) காலை 9 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.
    • தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர்.

    பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

    அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் ேபசி முடிப்பார்கள்.

    நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல

    காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான்.

    இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும்,

    குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக் கணக்கானவர்கள் ஆண்டுதோறும்

    பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.

    சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    • ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.

    பல்லடம்:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்,என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் அவர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் பாதயாத்திரை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் வினோத் வெங்கடேஷ்,ஜோதிமணி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வடிவேலன் வரவேற்றார்.

    கூட்டத்தில் பல்லடம் நகருக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலையை சிறப்பான முறையில் வரவேற்பது. பாதயாத்திரையில் நிர்வாகிகள்,தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக அனைவரும் பொதுமக்களுடன் பங்கேற்று பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ்,ஈஸ்வரி செல்வராஜ்,மற்றும் பா.ஜ.க. மாவட்ட,ஒன்றிய ,நகர, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலையின் 2-ம் கட்ட பாதயாத்திரை பொட்டல்புதூரில் தொடங்கியது.
    • விவசாயிகள் சார்பில் அண்ணாமலைக்கு ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தமிழக பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் 2-ம் கட்ட பாதயாத்திரை நேற்று மாலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பொட்டல்புதூரில் தொடங்கியது. தொடர்ந்து திருமலையப்பபுரம், ரவனசமுத்திரம் விலக்கு, முதலியார்பட்டி வழியாக அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார்.

    உற்சாக வரவேற்பு

    சாலையில் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் சென்ற பயணிகளிடம் கையசைத்தவாறு சுமார் 4 கிலோமீட்டர் நடை பயணம் செய்த அவருக்கு வழி நெடுகிலும் நின்ற பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மாலைகள் மற்றும் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

    கடையம் பகுதிக்கு வந்தவுடன் அண்ணாமலைக்கு விவசாயிகள் சார்பில் ஏர் கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கடையம் மெயின் பஜார் வழியாக லாலா கடை மூக்கு பகுதிக்கு சென்ற அண்ணாமலை அந்தப் பகுதியில் பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    அதனை முடித்துக் கொண்டு இரவு தென் காசியில் உள்ள கீழப்புலியூர் ெசன்ற அண்ணாமலை கீழப்புலியூர் வாய்க்கால் பாலம் நீதிமன்ற கட்டிடம் பகுதி பழைய பஸ் நிலையம் மேம்பாலம் வழியாக தென்காசி புதிய பஸ் நிலையம் வரை சுமார் 6 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    நீதிமன்ற கட்டிடம் அருகில் வந்த போது பெண்கள் சார்பில் முளைப்பாரி எடுத்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களிடம் தாமதம் ஆனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை கூறினார்.

    மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும். இந்த மாதம் முடிவதற்குள் பயணத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து தென்காசியில் பொதுக் கூட்டம் நடத்தி அதில் நான் உங்களிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவருமான விஸ்வை ஆனந்தன், பா.ஜ.க. மாநில முன்னாள் பிரசார பிரிவு அணி துணைத் தலைவரும், அகில பாரத அய்யா வழி மக்கள் பேரியக்கத்தை சேர்ந்தவருமான சுவாமிதோப்பு ஸ்ரீவைகுண்ட வரகவி ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால குருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில பொதுச்செயலாளர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைச் செயலாளர் மருதுபாண்டியன், பொன் பாலகணபதி, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
    • குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தொண்டி

    தமிழகத்தில் பிரச்சித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தற்போது கொடியேற்றப் பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வேளாங்கண்ணிக்கு செல்கிறார்கள்.

    அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தொண்டி அருளானந்தர் தேவாலயத்தில் வழிபட்டு அங்கிருந்து வேளாங் கண்ணிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் செல்கின்றனர்.

    இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் குளம், திருப்பா லைக்குடி குடிநீர் ஊரணி மற்றும் சாலையோரம் உள்ள நீர்நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    • பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.
    • 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்கிறார்.

    ராமேசுவரத்தில் கடந்த மாதம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 41 சட்ட மன்ற தொகுதிகளில் பாத யாத்திரை சென்றார். கடந்த 22-ந்தேதி நெல்லையில் முதற்கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

    2-ம் கட்ட பாதயாத்திரை அடுத்தமாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங் கும் அண்ணாமலை அன்று இரவு தென்காசியில் நிறைவு செய்கிறார்.

    பின்னர் அங்கிருந்து வாசுதேவ நல்லூர், கடையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக 6-ந்தேதி சங்கரன் கோவில் செல்கிறார்.

    சங்கரன் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாதயாத்திரையில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    பின்னர் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், போடி ஆகிய பகுதிகள் வழியாக 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

    இந்த 2-ம் கட்ட பாத யாத்திரை செல்லும் பகுதிகள் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே இந்த பகுதிகளில் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.

    • தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது
    • கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    நேற்று முன்தினம் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். சாமியார் மடத்திலிருந்து தனது பாதயாத்திரையை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கினார். தொண்டர்கள் புடைசூழ அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.காட்டாத்துறையில் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பாரத மாதா சிலைக்கும் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

    பாதயாத்திரையில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    பாதயாத்திரையின் போது இளம்பெண்கள், சிறுவர், சிறுமிகள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். மணலி சந்திப்பில் இன்று மதியம் தனது பாதயாத்திரை நிறைவு செய்தார்.

    பாதயாத்திரையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து தக்கலை சாமியார்மடம் சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. இன்று மாலையில் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    நாளை (18-ந்தேதி) காலை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு நிறைவு செய்கிறார். நாளை மதியம் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.

    • லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்ள ஏற்பாடு
    • அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற் கொள்வதற்காக வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரை சந்தித்து பேசுகிறார்.

    17-ந்தேதி குளச்சல் பத்ம நாபபுரம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளும் அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் மாலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதயாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். பாதயாத்திரை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

    மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×