search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள்"

    • ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஆறாகுளம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார். இதையடுத்து அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவரது கூட்டாளிகள் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் இருப்பதாக அவர் தெரிவித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை மடக்கி பிடித்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் நவீன் குமார்(வயது 27),அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி அண்ணாதுரை என்பவரது மகன் வசந்தகுமார்(22) , திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாகனத்தையும் பறிகொடுத்து நடுவழியில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
    • குமரி மாவட்டம் முழுவதும் தினமும் நடைபெறும் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென்கோடி யில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

    தமிழகத்தில் விற்பனை யாகும் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் தான் விற்பனை ஆகிறது.

    அதி வேகத்தில் செல்லும் நவீன ரக இருச்சக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களும் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இம்மாவட்டத்தில் வாகன விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக இருச்சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.

    மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் சாகசம் செய்யும் மாணவர்கள், வாலிபர்கள் இருச்சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கன்னியா குமரி மாவட்டத்தில் விபத்துகள் மூலமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி சென்றதே காரணம் என்பதை போக்குவரத்து போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    இதுபோன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீ சாரும் இணைந்து தற்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிர சாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இருச்சக்கர வாகனங்களில் வரும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு உடனடியாக ரூ.1000 அபராதம் விதிக்கலாம் என்றும் போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    இப்படி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் ஒரே சேர விடுத்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் என அனைத்து பகுதிகளி லும் இருச்சக்கர வாகன சோதனை தீவிரம் அடைந்தது.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000, லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5 ஆயிரம், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தால் ரூ.1500, ஒரே வண்டியில் 3 பேர் சென்றால் ரூ.1000 என அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதில் போலீசாரிடம் சிக்கும் வாலிபர்கள் பலரும் மொத்தமாக ரூ. 8 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

    முன்பெல்லாம் போலீசார் ஸ்பாட் பைன் விதித்தாலும் பணம் இல்லை என்றால் ஒரு செல்லாைன எழுதி கொடுப்பார்கள். அதனை கோர்ட்டில் செலுத்தி கொள்ளலாம்.

    இப்போது சோதனையில் சிக்குவோருக்கு செல்லான் கொடுப்பது கிடையாது. மாறாக ஆன்லைன் மூலம் அபராதத்தை உடனடியாக கட்டியாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படு கிறது. பணம் கட்ட வழி யில்லா விட்டால் வாக னத்தை போலீசார் பறி முதல் செய்து விடுவார்கள்.

    அபராத தொகையை கட்டிய பின்பு தான் வாகனத்தை எடுத்து செல்ல முடியும் என்பதால் சோதனையில் சிக்கிய மாணவர்கள் பலரும் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் யாரும் மனம் இரங்கக்கூடாது என்று உயர் அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். போக்கு வரத்து விதிகளை மதிக்கவேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர், தங்கள் மகன், மகள்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் இதுபோன்று அபராதம் கட்டி பணத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் வேதனை என்னவென்றால் வாலி பர்களுக்கு இணையாக இளம்பெண்களும் இச்சோதனையில் சிக்கி கொள்கிறார்கள். முன்பு இவ்வாறு சிக்கி கொள்ளும் பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.

    இப்போது அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. பணம் இல்லை யென்றால் பெற்றோருக்கு போன் செய்து அவர்களை வந்து அபராதத்தை கட்டி செல்லும்படி கூறுகி றார்கள். இதனால் நாகர் கோவில், தக்கலை பகுதி களில் இளம் பெண்களும் நடுவழியில் தவித்தப்படி நிற்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

    ஹெல்மெட் சோதனை ஒருபுறம் நடக்க அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்தியபடி வலம் வரும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை அகற்றிய பின்பு அதற்கும் அபராதம் பெறப்பட்ட பின்னரே அந்த வாகனங்கள் விடுவிக்கப்படுகிறது.

    • கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • கடையின் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராய புரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்ற பெண் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணவேணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று கடைக்கு சென்று தீயை அணைத்தார். இதில் கடையில் இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து இருந்தது. அந்த வழியாக சென்ற வயரும் கருகி இருந்தது. எனவே மின் கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என நினைத்து கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றார்.

    அவர் மறுநாள் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த எண்ணை பாக்கெட்டுகள், சூடன், திரி ஆகியவற்றை சேதப்படுத்தி யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடைக்குள் ஆபாச வார்த்தைகளை எழுதி விட்டும் சென்றிருந்தனர்.

    இது குறித்து கடையில் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த சூலக்கல்லை 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தான் கடையில் தீ வைத்து ஆபாச வார்த்தைகளை எழுதி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலத்தின் கீழ்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை கண்டதும் 2வாலிபர்கள் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த ரவிச்சந்திரன், அவர்களிடம் சோதனை செய்தபோது வாள், அரிவாள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரவிச்சந்திரன் அந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவனியாபுரம் திருப்பதி நகர் 8-வது தெரு, கணேசன் மகன் ரூபன் (24), அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் இருளப்பன் மகன் தமிழ் இனியன் (19) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    மதுரை

    அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி கணேசநகர் முதல்தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கணேசமூர்த்தி(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக மன விரக்தியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பி.பி.குளம் மருதுபாண்டியர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (32). நிரந்தர வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளிமுத்துவின் தாய் பாண்டிச்செல்வி தல்லாகுளம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்களை தாக்கி பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம் சந்திரலேகா நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் சரவணன் (வயது22).இவர் ஆரப்பா ளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.600-ஐ வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் 4-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), தத்தனேரி களத்துபொட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போன் பறிப்பு

    அவனியாபுரம் பெரியசாமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (49). இவர் விளக்குத்தூண் பகுதியில் உமறுப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் 17 வயது சிறுவன், காளவாசல் தமிழ் தென்றல் 3-வது தெரு மோகன் மகன் விமல் (19), அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நகை பறிப்பு

    திருமங்கலம் தென்கால் நகரை சேர்ந்த லட்சம் மகன் நிஷாந்தன் (25). இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பரிடம் சிலர் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகைையயும் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் (27), வெங்கடசாமிநாயுடு அக்ரகாரம் சரவணன் மகன் ஆகாஷ் (20), சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் (22), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    • கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.
    • கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவர்கள் நகைகள் திருடியது தெரிய வந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பெரிய கடை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு நகைகடைக்கு நகைகள் வாங்குவது போல மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர். கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மற்றும் நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.

    பின்னர் ஊழியர்களை உரிமையாளரையும் ஏமாற்றி விட்டு கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு, தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவர்கள் நகைகள் திருடி செல்வது தெரிய வந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறை யினர்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்கள் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் 134 கிராம் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பொதும்பு வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (24). இவர் இவர் பைக்கில் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதி யது. இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான அலங்காநல்லூர் முருகன் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அருண்குமார் (28).இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பைக்கை ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்த பகுதியில் விளம்பர பலகை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் படுகாயமடைந்தார்.

    அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைதனார்கள்.
    • சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை கே.புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம் பட்டி முத்துப்பட்டி தெரு முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) ஆகிய 2 பேர் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற ஒயிட் (32), எஸ்.எம்.பி. காலனி சக்திவேல் மகன் ஜோதிகுமார் என்ற எலும்பன் (23) ஆகிய 2 பேர் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதங்களு டன் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இேதபோல் பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே ஆயுதங்களுடன் திரிந்த வண்டியூர் காளி யம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூரிய பிரகாஷ் என்ற கல்கட்டை (24), முந்திரிதோப்பு, மவு லானா சாகிப் தெரு மணி கண்டன் என்ற உசிலைமணி (34) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீ சார் கைது செய்தனர்.

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
    • அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.

    • நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து சென்றதும் தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபா ளையம் பிரிவு காளியப்பநகர் 2-வது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அனுசுயா (வயது63).இவர் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள் மோட்டா ர்சைக்கிளில் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் ,செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அனுசுயா நல்லூர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார்வழ க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தெருவை தள்ளி உள்ள ராஜலட்சுமி(38) என்ற பெண்ணும்அடிக்கடி அனுசுயா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அனுசுயாவின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சை க்கி ளில் வந்து சென்றதும் தெரிய வந்தது. மோட்டார்சைக்கிளின் எண்கள் மூலம் நகைகளை பறித்துசென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டி யைசேர்ந்த மாதேஷ்(24), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) மற்றும்இவர்கள் நகையை பறித்து செல்ல உதவியது ராஜலட்சுமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பறித்து சென்ற 6 பவுன் நகைகளையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி கோச்சடை மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்தார். அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த முருகக்கடவுள் மகன் அரவிந்த் குமார் (20), குறிஞ்சி நகரை சேர்ந்த கருப்பு என்று தெரியவந்தது.

    இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    ×