search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வாலிபர்கள் பலி
    X

    2 வாலிபர்கள் பலி

    • 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பொதும்பு வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (24). இவர் இவர் பைக்கில் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதி யது. இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான அலங்காநல்லூர் முருகன் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அருண்குமார் (28).இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பைக்கை ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்த பகுதியில் விளம்பர பலகை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் படுகாயமடைந்தார்.

    அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×