search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
    X

    கைதானவர்களை படத்தில் காணலாம். 

    திருப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

    • நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து சென்றதும் தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபா ளையம் பிரிவு காளியப்பநகர் 2-வது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அனுசுயா (வயது63).இவர் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள் மோட்டா ர்சைக்கிளில் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் ,செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அனுசுயா நல்லூர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார்வழ க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தெருவை தள்ளி உள்ள ராஜலட்சுமி(38) என்ற பெண்ணும்அடிக்கடி அனுசுயா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அனுசுயாவின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சை க்கி ளில் வந்து சென்றதும் தெரிய வந்தது. மோட்டார்சைக்கிளின் எண்கள் மூலம் நகைகளை பறித்துசென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டி யைசேர்ந்த மாதேஷ்(24), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) மற்றும்இவர்கள் நகையை பறித்து செல்ல உதவியது ராஜலட்சுமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பறித்து சென்ற 6 பவுன் நகைகளையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×