search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் டிராவிட்"

    • ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்து இருந்தது.
    • எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல் இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்து இருந்தது.

     

    எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை.
    • எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.

    இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.

    இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- 

    இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
    • இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கார்டிப் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    அதை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 45.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 297 ரன்களை எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு டேவோன் கான்வே- டார்ல் மிட்சேல் முக்கிய பங்காற்றியவர்கள். அந்த ஜோடி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர். கான்வே 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111* (121) ரன்கள் விளாசி அசத்தினார். டார்ல் மிட்சேல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 118* (91) ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார். 

    அத்துடன் 3-வது விக்கெட்டுக்கு 180* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த கான்வே - மிட்சேல் ஜோடி இப்போட்டி நடைபெற்ற கார்டிஃப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ராகுல் டிராவிட் - விராட் கோலியின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தனர்.

    அந்த பட்டியல்:

    1. டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் : 180*, 2023

    2. ராகுல் டிராவிட் – விராட் கோலி : 170, 2011

    3. சர்ப்ராஸ் கான் – சோயப் மாலிக் : 163, 2016

    4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 144, 2014

    • உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா திணறி வருகிறது. இதனால் இந்த உலகக் கோப்பயை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். 'சுவர்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனான அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிவடைகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள்.
    • எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்

    மும்பை:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

    இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில், 'டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். 

    ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை. ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது. ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது.
    • என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.

    இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

    ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சில சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு படேல் கூறியுள்ளார்.

    • உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது.
    • சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். இன்றைய ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் ஆட வேண்டி இருப்பதால் தான் இப்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் பல்வேறு மாற்றங்களை செய்து களம் காணுகிறோம். நிலைமைக்கு தக்கபடி மாற்றம் செய்யும் வகையில் அணியில் வீரர்கள் வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி உள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவர் இரண்டு நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் மட்டும் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போது தான் நிறைய கற்று வருகிறார். எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார்.

    இவ்வாறு டிராவிட் கூறினார்.

    • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார்.
    • தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும் தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

    போட்டி முடிந்தவுடன் தொடர் நாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    அதில் இந்தூர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார்.


    அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் பயணத்தை ராகுல் தொடங்கினார்.

    இந்தூரில் டிராவிட் பிறந்ததை கொண்டாடும் வகையில், அவரது பெயரை அங்குள்ள மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.
    • மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    எந்த வடிவத்திலும் யாரும் நோ-பால் வீச விரும்புவதில்லை. அது குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் உங்களை காயப்படுத்தலாம்.

    இந்த இளம் வீரர்களுடன் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்.

    இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்து வீச்சில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டியதிருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக ஆதரவளிக்கிறோம்.

    மேலும் அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்குகிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் கற்று கொள்வது எளிதானதல்ல. அதிலிருந்து கற்று கொள்ள வேண்டும்.

    நல்ல விஷயம் என்னவென்றால் ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

    ×