search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parthiv Patel"

    • ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது.
    • டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மாவை மாற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அந்த அணி நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர். ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது. கேப்டனாக அவர் களத்தில் நெருக்கடியான தருணத்தில் பொறுமையுடன் செயல்படாவிட்டால் அந்த மாதிரி வெற்றியை பெறுவது சாத்தியமில்லை. இதுபோன்ற பதற்றமான போட்டியில் சில சமயங்களில் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் தவறு இழைத்து நான் பார்த்ததில்லை.

    மாறாக டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும். முக்கியமான தருணங்களில் பவன் நெகி போன்ற அனுபவம் இல்லாத வீரர்களுக்கு பவுலிங் வாய்ப்பு அளித்து டோனி தவறான முடிவுகளை எடுத்துள்ளார். டோனி எப்போதும் செயல்முறைகளை எளிதாக வைத்திருக்க ஆலோசனை வழங்குவார். ஆனால் அதை களத்தில் நடைமுறைபடுத்துவதில் ரோகித் சர்மா கைதேர்ந்தவர்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறினார்.

    • 2015-ல் பும்ராவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதை ரோகித் நிராகரித்தார்.
    • இதேபோல 2016-ல் பாண்ட்யாவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதையும் ரோகித் நிராகரித்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துவிட்டன. 17-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தலா 5 தடவை கைப்பற்றியுள்ளன. சென்னை அணிக்கு டோனியும், மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும் 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த ஐ.பி.எல் . சீசனில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லை. அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மனம் திறந்து உள்ளார்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை மும்பை அணி விடுவிக்க விரும்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ரோகித் சர்மா இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்தீவ் படேல் கூறியதாவது:- 

    ரோகித் சர்மா எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆவார்கள். பும்ரா 2014-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 2015-ல் அவர் முதல் சீசனை விளையாடிய போது சிறப்பாக அமையவில்லை.

    இதனால் அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அந்த வீரர் பிரகாசிப்பார். இதனால் அவரை அணியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும் என்று பும்ராவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கான பலனை நாங்கள் அடுத்த சீசனில் பார்த்தோம். பும்ரா அபாரமாக பந்து வீசினார்.

    இதே நிலைதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருந்தது. 2015-ல் இணைந்தார். 2016-ல் அவருக்கு மோசமாக இருந்தது. அவரை நீக்க மும்பை அணி விரும்பியது. அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித்சர்மா செயல்பட்டார்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல்லில் அறிமுகமானபோது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்தது. குஜராத்துக்கு கேப்டன் ஆனார். குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை நுழைந்தது. தற்போது இந்த சீசனில் அங்கிருந்து மீண்டும் மும்பை அணிக்கு மாற்றமாகி கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    • தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம்.
    • 2-வது இன்னிங்சில் கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணம். குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2-வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள்.

    நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்.

    என்று பார்தீவ் பட்டேல் கூறினார்.

    • இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
    • தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பார்தீவ் படேல் கூறியதாவது:-

    இந்தியாவின் டெஸ்ட் போட்டி விக்கெட் கீப்பர், ரஞ்சி கோப்பை அல்லது முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து கீப்பிங் செய்பவராக இருக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    • குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது.
    • என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் கூறியுள்ளார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று ஹர்திக் பாண்டியா முதல் டி20 போட்டியின் போது பவர் பிளே ஓவரில் அக்சர் பட்டேலை வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவர் அதிக ரன்கள் சென்றது.

    இதேபோன்று இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் 4 ஓவர்கள் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா விட்டு விட்டார். ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அங்கு அவருக்கு ஆசிஸ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிலும் வேண்டும்.

    ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சில சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்றும் இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ள பார்த்தீவ் பட்டேல், அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு படேல் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் இடம் பிடித்துள்ளனர். #AUSvIND #RohitSharma #ParthivPatel #MuraliVijay
    சென்னை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் நவம்பர் 11-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதன் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் ரோகித்சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    31 வயதான அவர் தென்ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல தமிழக வீரர் முரளிவிஜய்க்கும் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான தவான் தொடர்ந்து ஓரங்கப்பட்டார். இதேபோல அணியின் 2-வது விக்கெட் கீப்பரான பார்த்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதான அவர் கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் டெஸ்டில் ஆடினார். 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பெறுவது கடினமே.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வருமாறு :-

    விராட்கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்விஷா, முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா, ஹனுமா விகாரி, ரிசப் பந்த், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌சமி, உமேஷ்யாதவ், புவனேஷ்வர் குமார், பார்த்தீவ் படேல், இஷாந்த் சர்மா.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடர் நவம்பர் 21-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதியும் தொடங்குகிறது. #AUSvIND #RohitSharma #ParthivPatel
    ×