search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல்.-ல் கேப்டனாக டோனி தவறு செய்திருக்கிறார்: ரோகித் அப்படியில்லை- முன்னாள் சிஎஸ்கே வீரர் விளக்கம்
    X

    ஐ.பி.எல்.-ல் கேப்டனாக டோனி தவறு செய்திருக்கிறார்: ரோகித் அப்படியில்லை- முன்னாள் சிஎஸ்கே வீரர் விளக்கம்

    • ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது.
    • டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மாவை மாற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அந்த அணி நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் டோனியை விட ரோகித் சர்மா தான் கேப்டன்ஷிப்பில் சிறந்தவர். ரோகித் தலைமையில் மும்பை அணி 2 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றுள்ளது. கேப்டனாக அவர் களத்தில் நெருக்கடியான தருணத்தில் பொறுமையுடன் செயல்படாவிட்டால் அந்த மாதிரி வெற்றியை பெறுவது சாத்தியமில்லை. இதுபோன்ற பதற்றமான போட்டியில் சில சமயங்களில் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் தவறு இழைத்து நான் பார்த்ததில்லை.

    மாறாக டோனி கேப்டன்ஷிப்பில் நீங்கள் தவறுகளை பார்த்து இருக்க முடியும். முக்கியமான தருணங்களில் பவன் நெகி போன்ற அனுபவம் இல்லாத வீரர்களுக்கு பவுலிங் வாய்ப்பு அளித்து டோனி தவறான முடிவுகளை எடுத்துள்ளார். டோனி எப்போதும் செயல்முறைகளை எளிதாக வைத்திருக்க ஆலோசனை வழங்குவார். ஆனால் அதை களத்தில் நடைமுறைபடுத்துவதில் ரோகித் சர்மா கைதேர்ந்தவர்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறினார்.

    Next Story
    ×