search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளிதரன்"

    • ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள்.
    • எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்

    மும்பை:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

    இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில், 'டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். 

    ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை. ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது. ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.சி. ராஜ்,மண்டல தலைவர்கள் பிரபாகரன், ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜன் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன்துரை, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மீனவரணி மாநகர தலைவர் ரொனால்டு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,

    மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் கோபால்,ராதாகிருஷ்ணன்,சாமுவேல்ஞானதுரை, கதிர்வேல், மகாலிங்கம், வாசிராஜன், கனகராஜ், சித்திரைபால்ராஜ், தனுஷ், நிர்மல் கிறிஸ்டோபர், சின்னகாளை,சண்முகசுந்தரம், சுசைவியாகுலம், ஜெயகிங்ஸ்டன், ஜெயராஜ், மகாராஜன், கருப்பசாமி, முருகன்,குமாரமுருகேசன், புஷ்பராஜ், ராஜரத்தினம், முனியசாமி இசக்கிபாண்டியன், நெப்போலியன், நவ்ரோஜ், நடேஷ்குமார், கிருஷ்ணன்,கணேசன்,உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×