search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த் அரசியல்"

    ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைக்குழு, மகளிர் அணி, இளைஞர் அணி, வக்கீல்கள் அணி, வணிகர்கள் அணி என்று ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் செயல்படாதவர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முறையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

    ரஜினி அரசியல் பணியை விட, சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பிசியாக இருப்பதால், நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களை காது கொடுத்து கேட்டு, தீர்த்த வைக்க முடியாத நிலையில் உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை சுதாகர் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு உள்ள குறைகளை சொல்ல, ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக அந்தந்தந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இருப்பார். வக்கீல் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, வர்த்தகர் அணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இந்த 5 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பொறுப்பேற்று செயல்படுவார்கள்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறியதும், அது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்தால் உடனே ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து முடிவு செய்யும். இல்லையெனில் மாதத்துக்கு 2 தடவை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி பேசும்.

    சில உறுப்பினர்கள் மாநில தலைமை அலுவலகத்துக்கு புகார்களை அனுப்பியபடி உள்ளனர். அந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுதான், புகார்கள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சுதாகரின் இந்த சுற்றறிக்கையை ஏற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகிகள் மீதுதான் புகார்கள் உள்ளது. அந்த புகார்களை அவர்களே விசாரித்தால், எப்படி உரிய, நியாயமான தீர்வு கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. #Rajinikanth
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான் என்று கோவையில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    கோவை:

    தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தை கூர்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநில இளைஞரணி சார்பில் கோவை காந்தி பார்க் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-

    மதுவற்ற தமிழகம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டையும் லட்சியமாக கொண்டு காந்திய மக்கள் இயக்கம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இன்று வரை அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது.

    அதன் பின்னர் அங்கு பெருமளவு குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பதாகவும் அம் மாநில அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடையால் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அதனை இழக்க அரசு தயாராக இல்லை என்பதாக உள்ளது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மதுக்கடையை மூடினால் ஏற்படும் இழப்புக்கு மாற்று திட்டம் தயார் செய்து கொடுத்ததோடு 16 லட்சத்து 800 மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தோம்.

    ஆனால் மாற்று ஏற்பாடு எதுவும் அரசு எடுக்கவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு போராட்டம் நடந்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினை அல்ல.

    ஆனால் டாஸ்மாக்கிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி இருந்தால் டாஸ்மாக் கடையை மூட வழி பிறந்து இருக்கும்.

    சட்ட பேரவையில் தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 106 எம்எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் 8 வழி சாலை பிரச்சினையில் ஒன்றிணைந்து தங்கள் பணியை தீவிரப்படுத்தி இருந்தால் இந்த ஆட்சிக்கு தலை வலி ஏற்பட்டு இருக்கும்.

    ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ரகசிய ஒப்பந்தம் செய்து உள்ளது. ஊழல் படிந்த கட்சிகள் கூட்டு பேரம் நடத்தி உள்ளது.

    குட்கா முதல் முட்டை வரை ஊழல் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 60 நாட்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    பின்னர் நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது-

    ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான ஆட்சி என்பது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் மாற்று அரசியல் என்பதற்கு காலம் எங்கள் கண் முன் காட்டுவது ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான, பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்றால் ரஜினியை ஆதரிக்க வேண்டும்.


    காந்திய மக்கள் இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டு ரஜினியுடன் இணையும் என்பது வதந்திதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் டென்னிஸ் மற்றும் இளைஞர் அணித்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஆ.கணேசன், எம்.கந்தசாமி, கே.கந்தசாமி, வாசு, குருவம்மாள், சுரேஷ்பாபு, ராஜீவ், கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகிகள் துரை சந்திரன், திருமலை, ராஜன், சற்குணன்,உள்பட திராளானோர் கலந்து கொண்டனர். #tamilaruvimanian #edappadipalanisamy #rajinikanth

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.ஆல்வினுக்கு பொன்னாடை போர்த்தி மன்றத்தில் இணைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். ரஜினி நற்பணி மன்றத்தின் முன்னாள் இளைஞரணி தலைவர் கலுங்கடி சதீஷ்பாபு, சிவபன்னீர் செல்வனுக்கு சால்வை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மன்ற ஆலோசகர் கனகசபாபதி, நகர செயலாளர் செல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் பழனி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், குழித்துறை நகர செயலாளர் சந்தோஷ்குமார், தயாபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘மாற்று கட்சியை சேர்ந்த பலர் ரஜினி மன்றத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாற்றத்தை விரும்பி அவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும்‘ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் தெரிவித்தார். 
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீரென மாவட்டந்தோறும் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அரசியலில் ஈடுபட போவதாக முன்னணி நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அறிவித்தனர்.

    ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியிட்டதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    ரஜினி உடனடியாக தனது கட்சிப் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் விபரத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கும் வி‌ஷயத்தில் அவர் அவசரம் காட்டவில்லை. கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்று தனது கட்சிப் பெயரை அறிவித்த பிறகும் கூட ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் மிக, மிக நிதானமாகவே உள்ளன.

    கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரை தனது கட்சிக்கு ஆழமான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ரஜினி முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய போது அவர் அரசியலில் சாதனைகள் படைக்க அவரது ரசிகர் மன்றங்கள்தான் முக்கிய பங்களிப்பு கொடுத்தன. அதே பாணியை ரஜினியும் கடை பிடித்துள்ளார்.

    ரஜினிக்கு தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 60 ஆயிரம் உள்ளன. அவை அனைத்தும் “ரஜினி மக்கள் மன்றம்“ என்று மாற்றம் செய்யப்பட்டன.

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த 6 மாதமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு கிளை அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி, மகளிர் அணி, வக்கீல்கள் அணி, விவசாய அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்தக் கட்டமாக புதிய நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு குறைந்தபட்சம் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    அடுத்தக் கட்டமாக மற்றொரு பணியையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓசையின்றி செய்து வருகிறார்கள். பூத் கமிட்டிக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஓட்டுப்பதிவு தினத்தன்று பூத் கமிட்டி தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.


    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அடுத்தக்கட்ட அதிரடியைத் தொடங்கியுள்ளனர். அதன்படி மாவட்டந்தோறும் ‘திடீர்’ ஆலோசனையை நடத்தி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி விவாதித்தனர். மேலும் பொதுமக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை, நீண்ட கால கோரிக்கைகளை கையில் எடுத்து செயல்பட்டால்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற முடிவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன உள்ளன என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வின் அடிப்படையில் முக்கிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு அதற்கு ஏற்ப ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செயல்பட வியூகம் வகுத்துள்ளனர். ரஜினி விரைவில் மாநில அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, பிறகு கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.

    அந்த சமயத்தில் தங்கள் பகுதியில் தனி செல்வாக்குடன் இருக்கும் வகையில் செயல்பட ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரமாகியுள்ளனர்.

    இதற்கிடையே ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தாமதம் செய்வது, மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘காலா’ படத்துக்கு பிறகு அவர் தீவிர அரசியலுக்கு வந்து செயல்பட தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ‘காலா’ படம் வெளியான பிறகு மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் ஆனதால், அவரது தீவிர அரசியல் பணிகள் தள்ளிப்போனது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி எப்போது கட்சிப் பெயரை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் மங்கத் தொடங்கியது.


    ஸ்டெர்லைட் பிரச்சினையில் வெளியிட்ட கருத்தும், ‘காலா’ பட தோல்வியும் ரஜினி மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இனி அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் அடுத்த இலக்கை சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஆகையால் அவர் தீவிர அரசியலை விரைவில் கையில் எடுக்க உள்ளார்.

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் ரஜினி தங்கி இருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ரஜினி இந்த மாத இறுதியில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி டார்ஜிலிங்கில் இருந்தாலும் மக்கள் மன்ற பணிகளை உடனுக்கு உடன் தெரிந்து கொண்டு வருகிறார். ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிக்கு இது தொடர்பான தகவல்களை கொடுத்துவருகிறார்.

    சென்னை திரும்பிய உடன் மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். ஏற்கனவே அவர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசிவிட்டார். இன்னும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. அதற்கு சுமார் 4 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்பதால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அந்த கூட்டத்தை நடத்த முடியாது. எனவே வேறு இடம் பார்த்து வருகிறார்கள். அனேகமாக சென்னையிலேயே இந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

    வரும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளாகும். அன்று ரஜினி தனது புதிய அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை வைத்து கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு வேலைகள் ரகசியமாக நடந்து வருகின்றன.
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் என குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை சுமார் 6 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ‘நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth #karunanidhibirthday
    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு எதிர்ப்புகள் வலுக்கிறது.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் 4 கம்பம் பகுதியில் ரஜினிகாந்தின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழினம் மறு மலர்ச்சி கழக அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, ரஜினிகாந்த்தின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி கோ‌ஷம் எழுப்பினர். அங்கு வந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார், ரஜினியின் உருவபொம்மையை எரித்த 20 பேரை கைது செய்தனர்.

    தீயில் எரிந்த ரஜினி உருவ பொம்மையின் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினி கூறியுள்ளார். அவர் யாரை சமூக விரோதி என்று கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுள்ளார்.

    பீளமேடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    அவரது மனித நேயம் பாராட்டத்தக்கது. தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறினார்.

    இதே கருத்தை தான் ரஜினிகாந்தும் எதிரொலித்துள்ளார். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகள் இதே கருத்தை தான் சொல்கின்றன. அதே கருத்தை ரஜினியும் கூறி உள்ளார். அவரது கருத்து வேதனை அளிக்கிறது.

    திரைப்படத்தில் ரஜினியை இயக்குவது போல் அரசியலிலும் ரஜினியை யாராவது இயக்குகிறார்களா? என தோன்றுகிறது.

    ரஜினி யாரை சமூக விரோதிகள் என கூறினார் என அவர் முதலில் விளக்க வேண்டும். 13 பேர் உயிர் இழப்புக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை?

    போராடும் மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு சுடுகாடு போல் ஆகும் என ரஜினி கூறி உள்ளார்.

    அவரது திரைப்படத்தில் போராடுவது போல் காட்சி வைத்து கொண்டு நிஜ வாழ்க்கையில் போராட கூடாது என்பது மாறுபட்ட கருத்து ஆகும். ரஜினியின் குரல் கார்ப்பரேட் குரலாக உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கலவரம் ஏற்பட்டு தலித்துகள் 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் மாநில உரிமைக்காக போராடும் நிலையில் அதனை பற்றி கவலைப்படாமல் தலித் மீது தொடர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் போட்டி சட்ட மன்ற கூட்டம் நடத்தியது போராட்டத்தின் ஒரு வடிவம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவரை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது பல வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுசி கலையரசன், சித்தார்த், இலக்கியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்த் அங்கு பேசும் போது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    போராட்டக் காரர்களால் தான் பிரச்சினை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று கேட்கிறார்.

    ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சை படுத்திருக்கிறார். காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என்று அவர் சொல்கிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக பேசும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடுவது தவறு என்கிறாரா? பெட்ரோல், டீசல் விலைக்கு போராட வேண்டாம் என்கிறாரா?

    சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி வாய்திறக்க வில்லை. காவல் துறையின் தவறை மூடி மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் உண்மைக்கு மாறான தகவல்களை தருவதை கைவிட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசின் துணையோடு தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி முதுநிலை பட்டப்படிப்பிற்கான கவுன்சிலிங் நடந்தது.

    முதுநிலை படிப்பிற்கு ரூ.20 லட்சத்து 34 ஆயிரம் கட்டணமாக குழு நிர்ணயித்திருந்தது. இதில் புதுவை மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அதன் பிறகே அகில இந்திய கோட்டாவில் மாணவர்களை நிரப்பினர்.

    ஆனால் புதுவையில் சுகாதரத்துறை செயலாளர் கவர்னரிடம் தவறான தகவல்களை எடுத்துக்கூறி கவுன் சிலிங்கை நடத்தி முடித்துள்ளார். மண்ணாடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் திடீரென கல்லூரியில் சேர இயலாது என கடிதம் அளித்து விட்டனர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக 2 மாணவர்களை முதுநிலை படிப்பில் சேர்த்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த அந்த மாணவர்கள் அதிகளவில் பணம் தருவோம் என்று சொன்னதால் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக கவர்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையின்மூலம் பல உண்மைகள் வெளிவரும்.

    கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் தேர்தலை நடத்துவது தவறான அணுகு முறை. 30 பேர் உறுப்பினராக இருக்கக்கூடிய சங்கத்திற்கு 9 இயக்குனர்களை தேர்வு செய்கின்றனர்.

    இந்நிலையில் கடைசியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இளங்கோ நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்.

    புதுவையில் சில இடங்களில் கட்டண பார்க்கிங் முறையை அமல்படுத்த உள்ளாட்சித்துறை முடிவு செய்துள்ளது.

    கடலூர் சாலை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இங்கு உள்ளாட்சித்துறை கட்டண பார்க்கிங்கிற்கு ஏலம் விட்டுள்ளது. பொதுப் பணித்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நகர பகுதியில் பல வணிக நிறுவனங்கள் பார்க்கிங் இல்லாமல் கட்டிடம் கட்டியுள்ளனர்.

    இதை அரசு கண்டும், காணாமலும் உள்ளது. இனியாவது புதுவை நகர குழுமம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை பார்க்கிங் வசதி இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிட வேண்டும்.

    நடிகர் ரஜினிகாந்தின் பல்வேறு கருத்துகள் அ.தி. மு.க.வுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம். அவரின் கருத்து 100 சதவீதம் ஏற்புடையது. அம்மா இருந்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற சாத்தியமே இல்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தீர்வாகாது. இதை புதுவையில் உள்ள ஆளும் கட்சியும், நாராயணசாமியும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் ரஜினி காந்தின் பேச்சு மதவாத சக்திகளின் கருத்தை பிரதிபலிக்கிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #rajinikanth #thoothukudiprotest

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க புதுவை வந்தார்.

    புதுவையில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அவருடைய கருத்து முதல்-அமைச்சர் மற்றும் மதவாத சக்திகளின் கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளது. சாதியவாதிகள், மதவாதிகள் கருத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆட்சியாளர்,காவல்துறையினருக்கு எதிராக பேசக் கூடாது என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது.

    தமிழக முதல்வரும், நடிகர் ரஜினிகாந்தும் சமூகவிரோதிகள் யார் .? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அவரின் மனிதநேய மாண்பை பாராட்டுகிறோம். அதேவேளையில் ரஜனிகாந்தின் கருத்து காவல் துறையின் ஒடுக்கு முறையை நியாயப்படுத்தும் போக்கில் உள்ளது.


    அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள். இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது. வேல்முருகன் மீதான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #thirumavalavan #rajinikanth #thoothukudiprotest

    ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார் என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.#Rajinikanth #Pugazhendhi
    பெருமாள்மலை:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.

    கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.

    ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார். காலா படம் திரைக்கு வந்ததும் ராகவேந்திரர் வேண்டாம் என்று கூறினார். இதனால் அரசியல் தனக்கு வேண்டாம் என்று விரைவில் கூறி விடுவார்.


    பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கர்நாடகாவில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதே நிலைதான் தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் நடைபெறும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
    தமிழக மக்கள் ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர் என்று ஓசூரில் நிருபர்களுக்கு தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர்.


    எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    ×