search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin plant"

    நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். 

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி அல்லது நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்த் அங்கு பேசும் போது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    போராட்டக் காரர்களால் தான் பிரச்சினை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று கேட்கிறார்.

    ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சை படுத்திருக்கிறார். காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என்று அவர் சொல்கிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக பேசும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடுவது தவறு என்கிறாரா? பெட்ரோல், டீசல் விலைக்கு போராட வேண்டாம் என்கிறாரா?

    சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி வாய்திறக்க வில்லை. காவல் துறையின் தவறை மூடி மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் உண்மைக்கு மாறான தகவல்களை தருவதை கைவிட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×