என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியலுக்கு வரமாட்டார்- புகழேந்தி
Byமாலை மலர்31 May 2018 4:57 AM GMT (Updated: 31 May 2018 2:40 PM GMT)
ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார் என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.#Rajinikanth #Pugazhendhi
பெருமாள்மலை:
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.
கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.
பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கர்நாடகாவில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதே நிலைதான் தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் நடைபெறும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.
கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.
ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார். காலா படம் திரைக்கு வந்ததும் ராகவேந்திரர் வேண்டாம் என்று கூறினார். இதனால் அரசியல் தனக்கு வேண்டாம் என்று விரைவில் கூறி விடுவார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X