search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth political"

    மே 23-ந்தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.

    அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:-

    எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.

    இங்கு நடைபெறும் இந்த மண்டல பூஜை விழாவில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நலமாக இருக்கவும் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.



    தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.

    ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினிகாந்த் மே 23-ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் மாநாடு நடத்தி அதை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கட்டப்பட்டுள்ள அவரது பெற்றோர் மணி மண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருகை தர உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கூறியது இதையொட்டி தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார். #Rajinikanth #SathyaNarayanaRao
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தீவிர கவனம் செலுத்தப் போவதாக ஏற்கனவே பல தடவை கூறி விட்டார்.

    தமிழக சட்டசபையின் பதவிக் காலம் 2021-ம் ஆண்டு வரை உள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் அரசியலில் நிதானமாக காலடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ள ரஜினி, திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தியபடி உள்ளார்.

    தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியதும் அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் சுமார் 5 லட்சம் பேரை திரட்டி பிரமாண்ட அரசியல் மாநாட்டை நடத்தவும் ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



    புதிய அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி பெரிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று முன்பு கூறப்பட்டது. குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவார் என்ற மாயை உள்ளது. ஆனால் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா இன்று அதற்கு விடை அளித்துள்ளார்.

    பிள்ளையார்பட்டி ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த அவர் வழிபாடுகள் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ரஜினியின் புதிய கட்சிக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய கடமைகள் காத்து இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது.

    இவ்வாறு ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா கூறினார். #Rajinikanth #SathyaNarayana
    ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #SuperStarTV
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கூறி சரியாக ஓராண்டு முடியப் போகிறது.

    ஆனால் இன்னமும் அவர் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவரது கைவசம் சில சினிமா படங்கள் இருப்பதால், தற்போது அவரது முழுக் கவனமும் அந்த படங்களை முடித்துக் கொடுப்பதிலேயே உள்ளது.

    இதற்கிடையே ரஜினி தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக “ரஜினி மக்கள் மன்றம்” எனும் அமைப்பை உருவாக்கி உள்ளார். 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் ரஜினி மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வளவு வேலைகள் நடந்தாலும் ரஜினி தனது புதிய அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரஜினி கட்சியின் டி.வி. சேனல் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும் கடந்த மாதம் 9-ந்தேதி “டிரேடு மார்க் ரிஜிஸ்டிரார்” அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதில் ரஜினி கட்சி டெலிவி‌ஷனுக்கு மூன்று பெயர்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பெயர்களில் “சூப்பர் ஸ்டார் டி.வி.” எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து டி.வி. சேனல் பெயருக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


    மேலும் சூப்பர் ஸ்டார் டி.வி. பெயர் அருகில் ரஜினி படத்துடன் லோகோ ஒன்றும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நடிகர் ரஜினியும் “டிரேடு மார்க்”கை பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “சென்னை அண்ணாநகர் கிழக்கு என் பிளாக் லோட்டஸ் காலனியில் வசிக்கும் வி.எம். சுதாகர் எனது பெயரில் டெலிவி‌ஷன் சேனல் தொடங்க விண்ணப்பித்துள்ளது தொடர்பாக இந்த கடிதம் தருகிறேன். சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. பெயர்களை பயன்படுத்த எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறி உள்ளார்.

    மேலும், “அந்த சானலில் எனது புகைப்படம், லோகோ, லேபிள் போன்றவற்றை பயன்படுத்தவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனவே சுதாகர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினியின் கடிதத்தை தொடர்ந்து விரைவில் தடை இல்லா சான்றிதழ் வழங்குவார்கள் என்று தெரிகிறது. என்றாலும் ரஜினி கட்சியின் டி.வி. சேனல் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய தகவல்களை ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான தமிழக கட்சிகள் தங்களுக்காக டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. அதன் மூலம் அந்தந்த கட்சி தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ரஜினி கட்சிக்கும் டெலிவி‌ஷன் சேனல் வரும்பட்சத்தில் அதில் ரஜினி தொடர்பான தகவல்களை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். #Rajinikanth #SuperStarTV
    தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical
    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தனது அரசியல் வருகை பற்றி பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ரஜினி, "அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்" எனக் கூறினார்.

    தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்.

    ஆனால் அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப்பெறுவதை விட இது மிகவும் முக்கியமானது.

    மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.

    நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுது போக்கிற்கு மட்டுமே.


    எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்.ஜி.ஆர். தான் நிரூபித்துக் காட்டினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர் தான் ரோல்மாடல். அதேபோல் தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலுவான பெண்.

    கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியில் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical #PMModi
    ரஜினி மக்கள் மன்றம் 10 நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இன்னமும் அவர் புதிய கட்சியை தொடங்கவில்லை.

    கட்சி தொடங்குவதற்கு முன்பு அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார்.

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் இத்தகைய மன்றத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலில் அமெரிக்காவில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கனடாவிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிறைய தீவிர உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மூலம் இணைய தள தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மேலும் சில நாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிடேட், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, கத்தார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 10 நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்த மன்றங்கள் சார்பில் சமீபத்தில் வாஷிங்டன், லண்டன், அபுதாபி, சார்ஜா உள்பட பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படும்போது வெளிநாடுகளில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து ரஜினிக்கு பிரசாரம் செய்வது பற்றி இந்த கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    புதிய அரசியல் கட்சியை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த் கட்சிக்கான தொலைக்காட்சி, நாளிதழுடன் கொடி சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்றத்தை பலப்படுத்தும் பணிகளில் இறங்கினார்.

    அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் சில அறிவிப்புகள் வர இருக்கின்றன. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பகிர்ந்த தகவல்கள்...

    ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.

    சில இடங்களில் இந்த 30 பேர் இலக்கை எட்ட முடியவில்லை. சில இடங்களில் பொய்க்கணக்கு காட்டி இருந்தார்கள். இவர்கள் மீதுதான் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ரஜினி பூத் கமிட்டி வி‌ஷயத்தில் அதிக கவனம் காட்டுகிறார். ஒவ்வொரு தெருவிலும் ரஜினி மக்கள் மன்றம் இருக்க வேண்டும் என்று தனது அரசியல் வியூகத்தை அறிவித்த ரஜினிகாந்த், பூத் கமிட்டி என்பதை பலமிக்க கட்சி அமைப்பாகவே கருதியுள்ளார்.

    வாக்குச்சாவடி அளவில் அதிகாரப்பூர்வமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும்.

    மக்களோடு மக்களாக இருந்து, அவர் சொன்னதைப் போல் ‘காவலர்களாக’ கண்காணிக்கும் பொறுப்பு. பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் பூத் கமிட்டி நியமனங்கள் முடிந்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் தொடர்கிறது.

    இப்போது ரஜினி காந்தைப் பார்த்து மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல தினகரனும் தனது கட்சியை பலப்படுத்த பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறார்.

    ரஜினிகாந்த் சில வி‌ஷயங்களை ரகசியமாக திட்டமிட்டு வருகிறார். அது உறுதியானதும் விரைவில் அறிவிப்புகள் இருக்கும். முக்கியமாக கட்சிக்கு தனியாக சேனல் (டி.வி.) இருக்கவேண்டும். பத்திரிகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக சேனல் ஒன்று இருக்கிறது. பெரிதாக பிரபலமாகாத அந்த சேனலை ரஜினி கையிலெடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சிக்கு தனியாக பத்திரிகை தொடங்கும் திட்டமும் உள்ளது.

    ரஜினி மன்ற நிர்வாகிகள் வி‌ஷயத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடப்பதால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்.

    திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அவர் கவனித்து வருகிறார். ரஜினி தான் எதிர்பார்த்த சூழ்நிலை அமைந்து வருவதாக நம்புகிறார். எனவே இன்னும் சில வாரங்களில் கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி மன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சின்ன புகார் என்றாலும் எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப்படுகிறார்கள். இது அப்படியே ஜெயலலிதாவின் நடவடிக்கையை போல் உள்ளது. எனவே கட்சி தொடங்கிய பின்னரும் கூட ரஜினி நிர்வாகிகளிடம் இதே கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டீசர் ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவரும் என்று தகவல் வெளியானதால் அன்றைய தினத்தை ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

    ஆனால் ஆகஸ்டு 15-ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை-வெள்ளம் என இப்போது தெரிய வந்துள்ளது. “கேரள மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது,” என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    நீண்ட நாட்கள் மன்றத்தில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்க்க கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.

    மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

    தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.

    எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.

    இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

    ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைக்குழு, மகளிர் அணி, இளைஞர் அணி, வக்கீல்கள் அணி, வணிகர்கள் அணி என்று ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் செயல்படாதவர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முறையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

    ரஜினி அரசியல் பணியை விட, சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பிசியாக இருப்பதால், நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களை காது கொடுத்து கேட்டு, தீர்த்த வைக்க முடியாத நிலையில் உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை சுதாகர் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு உள்ள குறைகளை சொல்ல, ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக அந்தந்தந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இருப்பார். வக்கீல் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, வர்த்தகர் அணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இந்த 5 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பொறுப்பேற்று செயல்படுவார்கள்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறியதும், அது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்தால் உடனே ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து முடிவு செய்யும். இல்லையெனில் மாதத்துக்கு 2 தடவை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி பேசும்.

    சில உறுப்பினர்கள் மாநில தலைமை அலுவலகத்துக்கு புகார்களை அனுப்பியபடி உள்ளனர். அந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுதான், புகார்கள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சுதாகரின் இந்த சுற்றறிக்கையை ஏற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகிகள் மீதுதான் புகார்கள் உள்ளது. அந்த புகார்களை அவர்களே விசாரித்தால், எப்படி உரிய, நியாயமான தீர்வு கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார் என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.#Rajinikanth #Pugazhendhi
    பெருமாள்மலை:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.

    கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.

    ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார். காலா படம் திரைக்கு வந்ததும் ராகவேந்திரர் வேண்டாம் என்று கூறினார். இதனால் அரசியல் தனக்கு வேண்டாம் என்று விரைவில் கூறி விடுவார்.


    பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே பிரதமர் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கர்நாடகாவில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதே நிலைதான் தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் நடைபெறும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
    தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் பூமிக்கும், ஆகாயத்தக்கும் இடையே தான் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். #TNPolitical #TNMinister #OSManiyan
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு காட்டுச்சேரி ஊராட்சி தேவசேனா கிராமத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். ஆனால் நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு அலுவலக குளறுபடி காரணமாக 50 சதவீத விவசாயிகள் தான் பயிர் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்.

    தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை.


    பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் நீட்தேர்வால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக 2 பெற்றோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolitical #TNMinister #OSManiyan
    ×