என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தலில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்க்காதீர்கள்- ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு?
Byமாலை மலர்21 July 2018 5:38 AM GMT (Updated: 21 July 2018 5:38 AM GMT)
நீண்ட நாட்கள் மன்றத்தில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்க்க கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.
தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.
மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.
எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.
இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.
ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.
தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.
மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.
எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.
இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.
ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X