search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister os maniyan"

    கவர்னர் குறித்து ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் கூற முயன்ற ஓ.எஸ் மணியனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் கவர்னர் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக ஒரு விளக்கத்தை சொல்ல கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார்.

    ஏற்கனவே கவர்னர் குறித்து இங்கு மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்லிவிட்டேன். எனவே நீங்கள் அதுதொடர்பாக பேசி புதுப்பிரச்சினைக்கு போக வேண்டாம் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கேட்காமலேயே ஏன் பேசவேண்டாம் என்கிறீர்கள் என்று சபாநாயகரை பார்த்து கேட்டார். இதனால், சபாநாயகருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சபாநாயகர் கூறுகையில், ‘‘நீங்கள் பேசுவது எனக்கு சரியாக படாவிட்டால் உங்கள் பேச்சை நீக்க வேண்டியது வரும் என்றார். ஆனாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தான் சொல்ல நினைத்த கருத்தை எப்படியும் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பேச முற்பட்டார்.

    அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, கவர்னர் பற்றி மேற் கொண்டு பேச வேண்டாம் என்ற கருத்தில் சில வார்த்தைகளை தெரிவித்தார். உடனே சபாநாயகர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு பேச வாய்ப்பு வழங்காமல் வேறு நிகழ்ச்சி நிரலை நடத்த தொடங்கினார்.

    தன்னை பேச அனுமதியுங்கள் என்று நின்று கொண்டிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு பேச வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர், உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.
    தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் பூமிக்கும், ஆகாயத்தக்கும் இடையே தான் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். #TNPolitical #TNMinister #OSManiyan
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு காட்டுச்சேரி ஊராட்சி தேவசேனா கிராமத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். ஆனால் நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு அலுவலக குளறுபடி காரணமாக 50 சதவீத விவசாயிகள் தான் பயிர் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்.

    தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை.


    பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் நீட்தேர்வால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக 2 பெற்றோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolitical #TNMinister #OSManiyan
    ×