என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்கு நடவடிக்கை குழு"

    • தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார்.
    • தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராக ஆனந்த் நியமனம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன்.

    உறுப்பினர் 1. திரு. என். ஆனந்த் கழகப் பொதுச் செயலாளர்.

    உறுப்பினர் 2. திருமதி சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி,

    இக்குழுவானது. கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள். குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு. மேற்கு தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.

    இந்த மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் கீழ்க்கண்டவாறு ஒரு பெண் உட்பட நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

    1. வடக்கு மண்டலம்

    ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்:

    1. திரு.A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்

    2. திரு.K.விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம்

    3. திரு.ரவிசங்கள் மாவட்டக் கழகச் செயலாளர், திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம் 4. திருமதி B.தன்யா, கழக உறுப்பினர். ஈரோடு மாநகர் மாவட்டம்

    மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்:

    1. சென்னை

    2. திருவள்ளூர்

    3. காஞ்சிபுரம்

    4. செங்கல்பட்டு

    5. ராணிப்பேட்டை

    6. வேலூர்

    7. திருப்பத்தூர்

    8. திருவண்ணாமலை

    9. விழுப்புரம்

    10. கடலூர்

    11. கள்ளக்குறிச்சி

    ஆகிய மாவட்டங்கள்.

    2.மேற்கு மண்டலம்

    ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்:

    1.திரு. R.சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சை மத்திய மாவட்டம்

    2.திரு.S.P.தங்கபாண்டி மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

    3.திரு.R.பரணி பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

    4. திருமதி A.சத்திய பாமா கழக உறுப்பினர். திருநெல்வேலி தெற்கு மாவட்டம்

    மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்:

    1. திண்டுக்கல்

    2. கரூர்

    3. நாமக்கல்

    4. திருப்பூர்

    5. ஈரோடு

    6. கோயம்புத்தூர்

    7. நீலகிரி

    8. சேலம்

    9. தர்மபுரி

    10. கிருஷ்ணகிரி

    ஆகிய மாவட்டங்கள்.

    3.தெற்கு மண்டலம்

    ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்

    1. திரு.V.சம்பந்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்

    2. திரு.M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர், நாகப்பட்டினம்

    3. திரு.J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர், பதுக்கோட்டை மத்திய மாவட்டம்

    4. திருமதி M.ராணி - கழக உறுப்பினர், கரூர் மேற்கு மாவட்டம்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணைக்கு அழைத்தபோது வரவில்லை.#ChennaiStudentharassment #AgriCollege
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆதரவாக விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.

    இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார். இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினார்.

    நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  #ChennaiStudentharassment #AgriCollege
    ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றம் செய்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

    அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைக்குழு, மகளிர் அணி, இளைஞர் அணி, வக்கீல்கள் அணி, வணிகர்கள் அணி என்று ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் செயல்படாதவர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முறையாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

    ரஜினி அரசியல் பணியை விட, சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பிசியாக இருப்பதால், நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களை காது கொடுத்து கேட்டு, தீர்த்த வைக்க முடியாத நிலையில் உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் எந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அதை அந்த மாவட்டத்திலேயே தீர்த்து வைத்துக் கொள்ளும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை சுதாகர் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு உள்ள குறைகளை சொல்ல, ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக அந்தந்தந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இருப்பார். வக்கீல் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, வர்த்தகர் அணி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இந்த 5 பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பொறுப்பேற்று செயல்படுவார்கள்.

    இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறியதும், அது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்தால் உடனே ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து முடிவு செய்யும். இல்லையெனில் மாதத்துக்கு 2 தடவை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி பேசும்.

    சில உறுப்பினர்கள் மாநில தலைமை அலுவலகத்துக்கு புகார்களை அனுப்பியபடி உள்ளனர். அந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுதான், புகார்கள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சுதாகரின் இந்த சுற்றறிக்கையை ஏற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகிகள் மீதுதான் புகார்கள் உள்ளது. அந்த புகார்களை அவர்களே விசாரித்தால், எப்படி உரிய, நியாயமான தீர்வு கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. #Rajinikanth
    ×