என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kalaignar"
- 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்.
- ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைப்பு.
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் என்றாலே போராட்டம்தான்.
அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
சேலம்:
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிைம திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந் தோறும் 1000 உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக முகாம்கள் நடந்தது. முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 846 மையங்களில் நடந்த முகாமில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 449 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 695 மையங்களில் நடந்த முகாமில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 விண்ணப் பங்கள் என மொத்தம் 1541 முகாம்கள் மூலம் 7 லட்சத்து 13 ஆயி ரத்து 662 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஓய்வூதியம் பெறும் மாற்று திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (18-ந் தேதி) முதல் வரும் 20-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஏற்கனவே முகாம் நடைபெற்ற அதே 1541 மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
ஏற்கனவே 2 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் விடுபட்டவர்களும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்கள் இன்று காலை முதல் இந்த முகாம்களில் திரண்டுள்ளனர். அவர்களிடம் விண்ணப் பங்களை பெற்று அதிகாரிகள் பதிவு செய்து வருகிறர்கள். இதனை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
- கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.
ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்