search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "geetha jeevan"

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    • விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
    • தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.

    அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

    இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

    இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

    பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பா ளரும், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு 50 மின் விசிறிகள் மற்றும் 4 வாட்டர் ஹீட்டர்களை வழங்கினார்.

    இதில், மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன்,  மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி,

    மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடந்து அமைச்சர் கீதாஜீவன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக வரலாற்றில் இடம்பெற்ற தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கொண்டாடப்பட்ட உள்ளது. 3-ந் தேதி கலைஞரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தி.மு.க சார்பிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை, எப்போதும்வென்றான் மற்றும் பசுவந்தனை ஆகிய இடங்களில் ஒட்டப்பிடாரம் கிழக்கு தி.மு.க ஒன்றியம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங் கினார்.

    இதில் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஊராட்சி கழக செயலாளர் கள், நிர்வாகிகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண் டும். இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை இப் போதே  செயல்படுத்த வேண் டும்.
     இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார். 

    தொடர்ந்து தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பூத் கமிட்டிகளை ஆய்வு செய் தனர். அப்போது தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பல்லாவரம் எம்.எல்.ஏ கிரி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமூவேல், ஒன்றிய அவைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.கிழக்கு ஒன்றியம், இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரகூட்டம் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமையில் கயத்தாறில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் கயத்தாறு பேரூர் இளைஞரணி அமைப்பாளர் அருண்பாண்டியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர்கள் செல்வகுமார். சுரேஷ்கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பஹீர், நகர துணை செயலாளர் குருசாமிப்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராகவன், மாவட்ட பிரதிநிதி கொம்பையா, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை,

    மாவட்ட பிரதிநிதி, பவுன்ராஜ், எட்டுராஜ், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்தனமாரியம்மாள், ஒன்றிய வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய ,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய, நகர இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

    இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்று தமிழக அரசை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்பேரில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் எனது(கீதாஜீவன் எம்.எல்.ஏ.) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதே போன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    30.3.2018 அன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தூத்துக்குடி பகுதி மக்களின் எண்ணத்திற்கேற்ப, ‘ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும்’ என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, நீதிமன்ற அனுமதியுடன், 4.4.2018 அன்று தி.மு.க.வின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தூத்துக்குடி பகுதி கிராம மக்களை தொடர் போராட்டத்தின் 100-வது நாளை மிகவும் எழுச்சியுடன் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், 20.5.2018 அன்று சப்-கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் போராட்டக் குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போராட்டக் குழுவினர் முற்றுகை போராட்டத்தினை நடத்திட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    தி.மு.க. சார்பில் 22.5.2018 அன்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அறவழியில் பேரணியாக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்படி இருக்கையில் தி.மு.க. மீது முதலமைச்சர் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாதது.

    தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்தில் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. அது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உள்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல.

    உண்மை நிலை இவ்வாறிருக்க சட்டசபையில் முதல்அமைச்சர் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் கீதாஜீவன், எம்.எல்.ஏ., என்று கூறுவது வடிகட்டிய பொய் மட்டுமல்ல தி.மு.க. மீது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுமத்தும் வாடிக்கையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகவே உள்ளது.

    தி.மு.க. மீது பழி சுமத்தும் போக்கில் துயரத்தில் மூழ்கி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் முயற்சியில் முதலமைச்சரே இறங்கியிருப்பது வேதனைக்குரியது. துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் அனுதாபம் தெரிவிக்க முடியாமலும் இருக்கும் முதலமைச்சர் என் மீது குற்றம் சாட்டுவது தனது தோல்வியை என் மீது போட்டு தப்பிக்க முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

    காவல்துறை, உளவுத்துறை கையில் வைத்திருக்கும் முதல்அமைச்சர் நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு மாநில உளவுத்துறை முதல்அமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

    எனவே முதலமைச்சரின் பொய்க்குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் இருக்கும் என் மீது பழி போடுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் மீது பழி போடுவதாக நினைத்து உணர்வுடனும், தன்மானத்துடனும், தன்னெழுச்சியாக போராடிய என் மாவட்ட மக்களை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதை மட்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், வைகோவின் மருமகன் ஆகியோர் காண்டிராக்ட் எடுத்துள்ளார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லா பிரச்சினைக்கும் தமிழக அரசு தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் சற்று கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை எனும் நிலைப்பாட்டை எடுத்தார். அவரின் அந்த நிலைப்பாட்டையே நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். எனவே எப்படி தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்? என்பது தெரியவில்லை.



    அந்த ஆலையை வைத்து அரசியல் தான் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது அந்த ஆலைக்கு எதிரான பேரணிக்கெல்லாம் தலைமை தாங்கி வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் அங்கு 600 வண்டிகள் ஓடுவதாகவும் ஒரு தகவல். அதேபோல மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவேன் என்று அடம்பிடித்து வரும் வைகோவின் மருமகனும் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாக ஒரு தகவல்.

    ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி வருபவர்கள் இப்படியாக இருக்க, அந்த ஆலையை மக்கள் நலனுக்காக தேவையில்லை என்று முடிவில் உள்ள தமிழக அரசின் மீது குற்றம் சாட்டப்படுவதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். எது உண்மை, யார் நல்லவர்? என்று மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×