என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awards Ceremony"

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு 33 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.
    • விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்,2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை முதலீட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீசார் 4 பேர் உள்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும் வழங்கப்பட்டது.

    துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    'பாதுகாப்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன' என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது..

    • ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி பிசிசிஐ கௌரவித்து வருகின்றது.
    • கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ வழங்கியுள்ளது.

    மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனைக்கான விருது:

    1. பிரியா புனியா : 2019 -20

    2. சபாலி வர்மா : 2020 - 21

    3. சபினெனி மேக்னா : 2021 - 21

    4. தேவிகா வைத்யா : 2022 23

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைக்கான விருது:

    1. பூனம் யாதவ் : 2019 -20

    2. ஜூலன் கோஸ்வாமி : 2020 -21

    3. ராஜேஸ்வரி கைக்வாட் : 2021 - 22

    4. தேவிகா வைத்யா : 2022 -23

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டரில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைக்கான விருது:

    1. பூனம் ரௌட் : 2019 - 20

    2. மித்தாலி ராஜ் : 2020 - 21

    3. ஹர்மன்ப்ரீத் கௌர் : 2021 - 22

    4. ஜெமிமா ரோட்ரிக்ஸ் : 2022 - 23

    மகளிர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தின் சிறந்த வீராங்கனை:

    1. தீப்தி சர்மா : 2019 - 20

    2. தீப்தி சர்மா : 2020 - 21

    3. ஸ்மிருதி மந்தனா : 2021 - 22

    4. ஸ்மிருதி மந்தனா : 2022 - 23

    சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது:

    1. மயங்க அகர்வால் : 2019 - 20

    2. அச்சர் படேல் : 2020 - 21

    3. ஸ்ரேயாஸ் ஐயர் : 2021 - 22

    4. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 2022 - 23

    சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது:

    1. முகமது ஷமி : 2019 - 20

    2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 2020 - 21

    3. ஜஸ்பிரித் பும்ரா : 2021 - 22

    4. சுப்மன் கில் : 2022 - 2023

    திலிப் சர்தேசாய் விருது:

    1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் : ரவிச்சந்திரன் அஸ்வின், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

    2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் : யசஸ்வி ஜெய்ஸ்வால், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

    சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது:

    1. ரவி சாஸ்திரி மற்றும் பரூக் என்ஜினீயர்

    இந்த விழாவில் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இருந்து விருதுகளை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் போன்ற அனைத்து வீரர்களும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் பங்கேற்றார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
    • கண்காட்சியில், சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு,

    பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

    ×