search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக விரோதிகள் யார் என ரஜினி விளக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி
    X

    சமூக விரோதிகள் யார் என ரஜினி விளக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

    தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினி கூறியுள்ளார். அவர் யாரை சமூக விரோதி என்று கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுள்ளார்.

    பீளமேடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    அவரது மனித நேயம் பாராட்டத்தக்கது. தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறினார்.

    இதே கருத்தை தான் ரஜினிகாந்தும் எதிரொலித்துள்ளார். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகள் இதே கருத்தை தான் சொல்கின்றன. அதே கருத்தை ரஜினியும் கூறி உள்ளார். அவரது கருத்து வேதனை அளிக்கிறது.

    திரைப்படத்தில் ரஜினியை இயக்குவது போல் அரசியலிலும் ரஜினியை யாராவது இயக்குகிறார்களா? என தோன்றுகிறது.

    ரஜினி யாரை சமூக விரோதிகள் என கூறினார் என அவர் முதலில் விளக்க வேண்டும். 13 பேர் உயிர் இழப்புக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை?

    போராடும் மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு சுடுகாடு போல் ஆகும் என ரஜினி கூறி உள்ளார்.

    அவரது திரைப்படத்தில் போராடுவது போல் காட்சி வைத்து கொண்டு நிஜ வாழ்க்கையில் போராட கூடாது என்பது மாறுபட்ட கருத்து ஆகும். ரஜினியின் குரல் கார்ப்பரேட் குரலாக உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கலவரம் ஏற்பட்டு தலித்துகள் 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் மாநில உரிமைக்காக போராடும் நிலையில் அதனை பற்றி கவலைப்படாமல் தலித் மீது தொடர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் போட்டி சட்ட மன்ற கூட்டம் நடத்தியது போராட்டத்தின் ஒரு வடிவம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவரை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது பல வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுசி கலையரசன், சித்தார்த், இலக்கியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×