search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • . அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கரூர்,நவ

    கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 42), அவரது மனைவி செல்வி (45) ஆகியோர் பெரம்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணி (71), திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (68) ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுதமன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் ஜவகர் பஜாரில் காரில் வந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3 போலி தங்க காயின், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணி, சந்திரசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

    கைதான 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    • விசாரணை நடத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர்.
    • நிலத்திற்கு சொந்தக்காரர் வெளிமாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மோசடி நடந்துள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் தொழில் நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் திவாடி என்ற ஊரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 5.6.2022 அன்று ராஜபாளையத்தை அடுத்த கீழராஜகுலராமன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசியார்பட்டி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். பின்னர் அந்த இடத்தை தான் மற்றும் தனது மனைவி பெயரில் பதிவு செய்து பத்திரமும் வாங்கினார்.

    இதற்கிடையே அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரனின் நண்பரான முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10.1.2023 அன்று ஒரு வாட்ஸ்அப் தகவலை ராஜேந்திரனுக்கு அனுப்பினார். அதில் உங்களுக்கு சொந்தமான 9.64 சென்ட் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜபாளையம் வந்தார். பின்னர் அவர் தனது பெரியப்பா வீட்டில் வைத்து இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த மோசடி குறித்து மேலோட்டமாக விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    அதாவது, ராஜேந்திரனும், அவரது மனைவியும் இறந்து விட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, அவர்களது வாரிசாக சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரை நியமித்து அவரது பெயருக்கு இந்த நிலத்தை மாற்றி பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பத்திர எழுத்தர் சுகுணா, கோவையை சேர்ந்த குமார், செட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணன் மகன் முத்துகிருஷ்ணன், இந்த பட்டாவை மாற்றி நில மோசடிக்கு சாட்சி கையெழுத்திட்ட கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த முருகன், முருகேசன் மற்றும் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை அபகரிக்க மகனாக நடித்த கணேஷ்குமார் ஆகிய 6 பேர் மீதும் நிலத்தை பறிகொடுத்த ராஜேந்திரன் கீழராஜகுலராமன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கணேஷ் குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நிலத்திற்கு சொந்தக்காரர் வெளி மாநிலத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்த மோசடி நடந்துள்ளது.

    பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க உயிருடன் இருப்பவர்களை இறந்து விட்டதாக போலியான சான்றிதழ் தயாரித்து, அவர்களுக்கு வாரிசாக ஒருவரை நியமித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
    • பணத்தை திருப்பி தராமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33).

    திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும் அவரது மருமகன் தனபால் ஆகியோர் சேர்ந்து ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி வலிவலம், வேதாரண்யம் மருதூர், குருக்கத்தி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ. 50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

    ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.

    மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் உத்தர விட்டார்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி அறிவுருத்தலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் குற்றவா ளிகள் ராஜலட்சுமி, நாராயணசாமி தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகை அருகே ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆன்லைன் வேலை தருவதாக கூறி ஏமாற்றினர்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை உப்பிலிபாளையம், காந்திபுதூரை சேர்ந்தவர் கீர்த்திகுமார் (வயது 35). பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்திகுமார் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே கீர்த்திகுமார் அந்த இணைப்பை கிளிக் செய்தார். தொடர்ந்து அவர் டெலிகிராம் குழுவில் இணைந்து விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட ஒருவர், நாங்கள் அனுப்பும் விளம்பரத்தை பார்த்து ஷேர் செய்தால் அதிகளவில் பணம் தருவோம். இதற்கு நீங்கள் சிறியஅளவில் பணம் கட்ட வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கீர்த்திகுமார், அந்த நபர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ. 5.88 லட்சம் முதலீடு செய்தார்.'

    ஆனால் அந்த நபர் சொன்னபடி பணம் தரவில்லை. முதலீடு செய்த பணமும் திருப்பி தரப்படவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த கீர்த்திகுமார்அந்த நபரை தொடர்பு கொண்டபோது, நீங்கள் மேலும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்தான் செலுத்திய தொகை லாபத்துடன் திரும்ப கிடைக்கும் என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபரை கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    அப்போதுதான் ஆன்லைன் வேலை தருவதாக கூறி, அந்த நபர் ரூ.5.88 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கீர்த்திகு மார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார்.
    • யூடியூப்பர் 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 'தமிழ் உங்களில் ஒருவன்' என்ற யூடியூப் சேனலை அடிக்கடி பார்ப்பது வழக்கம். இதையடுத்து அந்த யூடியூப் சேனலைஅதை நடத்தி வரும் தமிழழகன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக தமிழழகனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். தமிழழகன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து விட்டதாகவும் தங்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் சற்று விலகி இருக்குமாறும், பிரச்சனை முடிந்தவுடன் வீட்டில் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி அந்த இளம்பெண்ணை சமாதானப்படுத்தி உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தமிழழகன் சொல்வது பொய் என தெரிந்த அந்த பெண் தமிழழகனிடம் கேட்டபோது அவரை அழைத்து சென்று மீண்டும் உல்லாசமாக இருந்து விட்டு இனி தான் சொல்லும் வரை என்னை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார். ஆனால் திருமணத்துக்கு தமிழழகன் மறுத்து உள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகப்பேர் பகுதியை சேர்ந்த யூடியூப்பர் தமிழழகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழழகன் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து யூடியூப்பர் தமிழழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யூடியூப்பில் பெண்ணுரிமை, பெண்களின் நன்மை, பெண்களை அழ வைக்கக் கூடாது, பெண் பாவம் பொல்லாதது என்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்த யூடியூப்பர், 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    • சபரி சங்கர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.
    • 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட ஏஜென்சி அலுவலகம் நடத்தி தங்க நகை சேமிப்பு திட்டம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற திட்டத்தில் பழைய தங்கத்துக்கு மாற்றாக புதிய தங்கம் என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கை யாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தார்.

    இதில் 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் அந்தந்த மாவட்டங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

    தங்க நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் . மேலும் அந்த கடையில் பணிபுரிந்த மேலாளர், மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமறைவாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த நகைக்கடையின் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் உள்பட 14 பேரை அந்த நிறுவனத்தின் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, தர்மபுரி மாவட்ட மார்க்கெட்டிங் ஏஜெண்டு களே பிடித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

    இது பற்றி மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் கூறிய தாவது:-

    பொதுமக்களிடம் நாங்கள் எஸ்.வி.எஸ் தங்க நகை நிர்வனம் அறிவித்தபடி பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, தங்க நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு வழிகளில் பணத்தை வசூல் செய்து கடையில் கட்டினோம்.

    ஆனால் தற்போது இந்த நகைக்கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் தலைமறை வாகிவிட்டார் . மேல்மட்ட அதிகாரிகள் அந்த நகை கடையில் உள்ள தங்க கட்டிகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். அவர்களில் சிலரை பிடித்து சேலம் கலெக்டர் அலுவலக போலீ சிடம் ஒப்படைத்துள்ளோம்.

    நாங்கள் பொதுமக்களிடம் பணம் நேரடியாக வசூல் செய்ததால் எங்களை வீட்டில் இருக்க விடாமல் பொதுமக்கள் விரட்டுகின்றனர். இதனால் நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே மாவட்ட அளவிலான அதிகாரி களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால் உரிமையாளர் சபரி சங்கர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    உடனடியாக அவரை பிடித்து பொதுமக்களின் பணம் மற்றும் நகையையும் மீட்டு தர வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் நாங்கள் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியாது. எனவே எங்களுக்கு அந்த பணத்தை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    அப்போது அவர்களுடன் வந்த பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் கூறு கையில், ஒவ்வொருவரும் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் கட்டியதாகவும் தற்போது பணத்தை இழந்து நடுத்தெருவில் இருப்பதா கவும் இதனால் திருமணம் போன்ற முக்கிய காரியங்கள் நடத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறினர்.

    தங்களது பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு கதறியபடி பெண்கள் புகார் கூறினார்.

    தொடர்ந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    மும்பை:

    சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார்.

    1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா ராயின் தலைமையின் கீழ் சஹாரா நிறுவனம் ரியல் எஸ்டேட், மருத்துவமனை, விளையாட்டு, சினிமா, போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் கால்பதித்தது. இதனால் சுப்ரதா ராயின் வளர்ச்சி கதை பலருக்கும் வியப்பாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்த வழக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டில் அதன் சிட்பண்ட் செயல்பாடுகளின் கீழ் மக்களிடம் இருந்து எந்த டெபாசிட்களையும் பெற கூடாது என்று தடை விதித்தது. ஆனால் அதை மீறி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட்களை பெற்றது.

    இதன் மூலம் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதே போல நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்களை வழங்கியதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.17,656 கோடிக்கு அதிகமான பணத்தை விதிமுறைகளை மீறி பொது சந்தையில் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் பணத்தை வசூலித்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தவர் வீழ்ச்சியை சந்தித்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சஹாரா குழும நிறுவனங்கள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க அரசு தரப்பில் செபி-சஹாரா ரீபண்ட் என்ற பெயரில் தனியாக ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் பணிகளை தொடங்கிய வேளையில் கடந்த மார்ச் 31-ந்தேதி முடிவில் கோர்ட்டு உத்தரவின் பேரில் சஹாரா குழுமம் இந்த சிறப்பு கணக்கில் ரூ.25,163 கோடியை டெபாசிட் செய்துள்ளது.

    ரூ.25 ஆயிரம் கோடியின் நிலைமை என்ன?

    இந்நிலையில் செபி அமைப்பு சஹாரா குழுமம் தொடர்பாக 17,526 விண்ணப்பங்களுக்கு தொடர்புடைய 48,326 கணக்கில் உரிமையாளர்களுக்கு ரூ.138.07 கோடி வினியோகம் செய்துள்ளது என்றும், இதில் சுமார் 67.98 கோடி வட்டி தொகை மட்டும் என்று செபி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு இதற்காக தனியாக போர்டல் தொடங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரீபண்ட் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 112 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரீபண்ட் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    தற்போது சுப்ரதா ராய் மறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படாமல் செபி வசம் இருக்கும் இந்த தொகையின் நிலைமை என்ன என்பது மிகப்பெரிய பேசு பொருளாகி இருக்கிறது. 

    • சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது.
    • நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    நாமக்–கல்:

    சேலத்தை தலை–மை–யி–ட–மாக கொண்டு எஸ்.விஎஸ் நகைக்–கடை செயல்–பட்டு வந்–தது. இந்த கடை–க–ளின் சார்–பில் வாடிக்–கை–யா–ளர் சேவை மையங்–களை ஆங்–காங்கே தொடங்கி பொது–மக்–க–ளி–டம் இருந்து தீபாவளி சீட்டு, நகை சேமிப்பு திட்டம் , கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம் வசூ–லித்து வந்–த–னர்.

    சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. அதன் உரிமையாளர் சபரி சங்கர் உள்பட நிர்வாகிகள் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தில் கிளைகள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலும் செயல்பட்டு வந்தது. இந்த கடைகள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த முத–லீட்–டா–ளர்–கள், நாமக்–கல் மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–தில் புகார் அளித்–த–னர். பின்–னர் அவர்–கள் கூறுகையில், எஸ்.வி.எஸ். நகை கடை உரிமையாளர், வாடிக்–கை–யா–ளர் சேவை மையம் மூலம் நூற்–றுக்–க–ணக்–கான நபர்–க–ளி–டம் இருந்து சுமார் ரூ.50 லட்–சத்–துக்கு மேல் பணத்தை பல்–வேறு கவர்ச்–சி–க–ர–மான திட்–டங்–கள் மூலம் வசூல் செய்–து–விட்டு, பணம் மற்–றும் நகை–களை திருப்பி தரா–மல், மோசடி செய்து விட்டு, கடை–யை–யும் பூட்–டி–விட்டு தலை–ம–றை–வாகி விட்–டார். எனவே போலீ–சார் உரிய நட–வ–டிக்கை எடுத்து எங்–க–ளின் பணத்தை மீட்டு தர வேண்–டும் என்–ற–னர்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார்.

    கடலூர்

    பண்ருட்டி அடுத்த விலங்கல் பட்டை சேர்ந்தவர் பற்குணன் (வயது 40), ஆட்டோ டிரைவர்,இவரது போனுக்கு நேற்று ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு டிரைவர் வேலைக்கு உனக்குஆர்டர் வந்துள்ளது.இந்த வேலையில் சேர 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நாளைக்கு காலை 10 மணிக்கு யூனியன் அலுவலகத்திற்கு பணத்துடன் வரவும் என்று கூறியுள் ளார் .

    போனில் பேசிய நபர் கூறியவாறு ஆட்டோ டிரைவர் பற்க்குணன் ரூ 50 ஆயிரம் பணத்துடன் பண்ருட்டி யூனியன் ஆபீசுக்கு நேற்று காலை வந்தார்.சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்த டிப் டாப் ஆசாமி பஸ்சிலிருந்து இறங்கி வந்துள்ளார். அவருக்காகயூனியன் அலுவலகம் வாசலிலே காத்திருந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் டிப்டாப் ஆசாமிடம் முதல் தவணையாக ரூ50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டிப் டாப் ஆசாமி இங்கேயே இரு. உனக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு ஜெயசீலன் என்பவர் வருவார் எனக்கூறி அங்கிருந்து பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பற்க்குணன் வேலைக்கான ஆர்டர் வரும் என்று நம்பி அங்கேயே காத்திருந்திருந்தார். நேரமாக, நேரமாக டிப்டாப் சாமி சொன்னது போலயாரும்வரவில்லை நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து டிப்டாப் ஆசாமிக்கு போன் செய்துள்ளார்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பற்குணன் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ் (30). இவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.டெலிகிராம் மூலமாக ஹரியை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் டெலிகிராம் மூலமாக அதிக அளவில் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.

    முதலில் தயங்கிய ஹரி, மீண்டும் வற்புறுத்தவே ரூ.5,49,720 பணத்தை கட்டியுள்ளார். பணம் கட்டியது குறித்து தொடர்ந்து கேட்டதால் டெலிகிராமில் மேலும் ரூ.12 லட்சம் கட்டினால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    பணம் கட்டவில்லை என்றால் முதலில் கட்டிய பணமும் திருப்பி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி பிரகாஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

    இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுகுமார்(வயது53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    எனக்கு நட்பு ரீதியாக அவரது பழக்கம் கிடைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும். அதற்கு வங்கி கடனை அடைக்க வேண்டும் என பணம் கேட்டார்.

    இதனை நம்பிய நான் அவரிடம் ரூ.53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில மாதங்கள் வரை வட்டி கொடுத்தார்.

    அதன்பின்பு வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது.

    எனவே ரூ.53 லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×