என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோவை என்ஜினீயரிடம் ரூ. 5.88 லட்சம் மோசடி

- ஆன்லைன் வேலை தருவதாக கூறி ஏமாற்றினர்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை உப்பிலிபாளையம், காந்திபுதூரை சேர்ந்தவர் கீர்த்திகுமார் (வயது 35). பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்திகுமார் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே கீர்த்திகுமார் அந்த இணைப்பை கிளிக் செய்தார். தொடர்ந்து அவர் டெலிகிராம் குழுவில் இணைந்து விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட ஒருவர், நாங்கள் அனுப்பும் விளம்பரத்தை பார்த்து ஷேர் செய்தால் அதிகளவில் பணம் தருவோம். இதற்கு நீங்கள் சிறியஅளவில் பணம் கட்ட வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கீர்த்திகுமார், அந்த நபர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ. 5.88 லட்சம் முதலீடு செய்தார்.'
ஆனால் அந்த நபர் சொன்னபடி பணம் தரவில்லை. முதலீடு செய்த பணமும் திருப்பி தரப்படவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த கீர்த்திகுமார்அந்த நபரை தொடர்பு கொண்டபோது, நீங்கள் மேலும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்தான் செலுத்திய தொகை லாபத்துடன் திரும்ப கிடைக்கும் என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபரை கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போதுதான் ஆன்லைன் வேலை தருவதாக கூறி, அந்த நபர் ரூ.5.88 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கீர்த்திகு மார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
