search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டில் வேலை"

    • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    • தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.

    இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். இணையதளம் வழியாகவும் பல்வேறு வேலை விவரங்களை தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது.

    அதில் நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வெளிநாட்டில் உள்ளது.

    உங்களுக்கு அந்த வேலை வேண்டுமென்றால் நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்.

    உங்களுக்கு விசா தயார் செய்து வெளிநாட்டிற்கு வேலை அனுப்புவது வேண்டியது எனது பொறுப்பு என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பி அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை செலுத்தி இருந்தார்.

    ஆனால் நாட்கள் கடந்தும் வெளிநாட்டிற்கான வேலை பணி நியமன ஆணை வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

    ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட செல்போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    அதில் திருப்பூரை சேர்ந்த தீபிகா (வயது 30) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீபிகாவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வாலிபரிடம் வெளிநாட்டு வேலை எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

    போலீசாரிடம், தீபிகா கூறிய விவரங்கள் வருமாறு:-

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.

    பின்னர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்னை குன்றத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்தேன். எனக்கு பணம் அதிக அளவில் தேவைப்பட்டது .

    அப்போது யாருக்காவது போன் செய்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தேன்.

    அதன்படி சம்பந்தப்பட்ட வாலிபருக்கு குறுந்தகவல் அனுப்பி எனது பெயரை மாற்றி கூறினேன். அவர் நம்பும் அளவிற்கு குறுந் தகவல்கள் அனுப்பினேன்.

    மேலும் வேறு ஒருவரின் வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் போடச் செய்தேன். மேலும் வேறு பெயரில் உள்ள சிம் கார்டுகளை பயன்படுத்தினேன்.

    இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி நான் வேலை பார்த்த இடத்தில் என்னுடன் பணி புரிந்து வந்த ஒருவரை தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் இணையதளம் மோசடி செய்ததாக கூறி கைது செய்தனர்.

    அதுபோல் நானும் மாட்டிக்கொள்வேன் என்ற பயத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினேன். ஆனால் எப்படியோ என்னை தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து தீபிகாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஐ போன், செல்போன், பல்வேறு சிம் கார்டுகள், பான் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து தீபிகாவை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரிக்க நீதிபதி , தீபிகாவை வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார், தீபிகாவை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    கவனமுடன் இருக்க வேண்டும்

    ஏதாவது ஒரு நம்பரில் இருந்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.

    நீங்கள் பணம் அனுப்பினால் நாங்கள் அந்த பரிசுத்தொகையை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் என குறுந்தகவல் வரும்.

    அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்களது செல்போன் எண்ணுக்கு பணம் கிடைத்துள்ளது. முன்பனமாக சிறிய தொகை செலுத்தினால் நாங்கள் பெரிய அளவில் பணம் தருகிறோம் எனவும் மெசேஜ் வரும்.

    அதனையும் நம்பி ஏமாற வேண்டாம். வங்கி விவரங்கள், ஓ.டி.பி விவரங்களை யாரும் கேட்டால் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து இது போன்ற தகவல்கள் கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

    வெளிநாட்டில் வேலை என கூறி பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உண்மைத்தன்மை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.

    • சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லிங்கா ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் வெளிநாட்டில் (துபாய்) தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இவரது மனைவி கவுரி மகன் பாலகிருஷ்ணனுடன் உறவினர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கவுரி வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாயை சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த வீட்டிலிருந்தவர் மறுநாள் காலை நாய்க்கு உணவளிக்க சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுற்றுலா சென்ற வீட்டின் உரிமையாளர் கௌரிக்கு தகவல் தெரிவித்தார். இதை கேட்ட கவுரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைந்து அதில் இருந்த வைர நகை தங்க நகை உள்ளிட்ட 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து கவுரி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த தேடுதல் வேட்டையில் பண்ருட்டி அருகே இந்த கொள்ளை சம்பந்தமாக 2 நபர்களை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பம் எய்தனூர் குதியைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 24), மேல்பட்டாம்பாக்கம் செல்வமணி (23) என்றும், கவுரியின்வீடடில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் அளித்த தகவலின் பெயரில் இந்த கொள்ளைக்கு காரணமாக இருந்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த இளையபெருமாள் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் வைரம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டு தலை மறைவாக உள்ள 2 நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×