search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பிடிபட்டது
    X

    கொள்ளையில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பிடிபட்டது

    • சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லிங்கா ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). இவர் வெளிநாட்டில் (துபாய்) தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இவரது மனைவி கவுரி மகன் பாலகிருஷ்ணனுடன் உறவினர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கவுரி வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாயை சுற்றுலா செல்லும்போது அருகில் உள்ள மற்றொரு வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த வீட்டிலிருந்தவர் மறுநாள் காலை நாய்க்கு உணவளிக்க சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுற்றுலா சென்ற வீட்டின் உரிமையாளர் கௌரிக்கு தகவல் தெரிவித்தார். இதை கேட்ட கவுரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைந்து அதில் இருந்த வைர நகை தங்க நகை உள்ளிட்ட 50 பவுன் மற்றும் 10 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து கவுரி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த தேடுதல் வேட்டையில் பண்ருட்டி அருகே இந்த கொள்ளை சம்பந்தமாக 2 நபர்களை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பம் எய்தனூர் குதியைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 24), மேல்பட்டாம்பாக்கம் செல்வமணி (23) என்றும், கவுரியின்வீடடில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் அளித்த தகவலின் பெயரில் இந்த கொள்ளைக்கு காரணமாக இருந்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த இளையபெருமாள் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் வைரம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்டு தலை மறைவாக உள்ள 2 நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×