search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் ரூ.50 லட்சம் மோசடி
    X

    நாமக்கல்லில் ரூ.50 லட்சம் மோசடி

    • சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது.
    • நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    நாமக்–கல்:

    சேலத்தை தலை–மை–யி–ட–மாக கொண்டு எஸ்.விஎஸ் நகைக்–கடை செயல்–பட்டு வந்–தது. இந்த கடை–க–ளின் சார்–பில் வாடிக்–கை–யா–ளர் சேவை மையங்–களை ஆங்–காங்கே தொடங்கி பொது–மக்–க–ளி–டம் இருந்து தீபாவளி சீட்டு, நகை சேமிப்பு திட்டம் , கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம் வசூ–லித்து வந்–த–னர்.

    சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. அதன் உரிமையாளர் சபரி சங்கர் உள்பட நிர்வாகிகள் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தில் கிளைகள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலும் செயல்பட்டு வந்தது. இந்த கடைகள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த முத–லீட்–டா–ளர்–கள், நாமக்–கல் மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–தில் புகார் அளித்–த–னர். பின்–னர் அவர்–கள் கூறுகையில், எஸ்.வி.எஸ். நகை கடை உரிமையாளர், வாடிக்–கை–யா–ளர் சேவை மையம் மூலம் நூற்–றுக்–க–ணக்–கான நபர்–க–ளி–டம் இருந்து சுமார் ரூ.50 லட்–சத்–துக்கு மேல் பணத்தை பல்–வேறு கவர்ச்–சி–க–ர–மான திட்–டங்–கள் மூலம் வசூல் செய்–து–விட்டு, பணம் மற்–றும் நகை–களை திருப்பி தரா–மல், மோசடி செய்து விட்டு, கடை–யை–யும் பூட்–டி–விட்டு தலை–ம–றை–வாகி விட்–டார். எனவே போலீ–சார் உரிய நட–வ–டிக்கை எடுத்து எங்–க–ளின் பணத்தை மீட்டு தர வேண்–டும் என்–ற–னர்.

    Next Story
    ×