search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    • நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள்.

    ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது. ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டது.

    'நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மிண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.

    சிறப்புமிக்க அந்த நாக சதுர்த்தி வருடா வருடம் ஜூலை மாதம் வருகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில், ஏதாவது ஒரு நாகம் கோவிலில் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.

    அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

    • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
    • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

    • நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
    • அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.

    நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.

    • ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.
    • ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயனம். ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன.

    இந்த புண்ணிய காலகட்டங்களில் தீர்த்த ஸ்நானம் மிகவும் விசேஷம். ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

    ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம்! பூமாதேவி அவதரித்த ஆனந்த் மாதம். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் கொண்டாட்டம்.

    ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! நமக்கு அருள்பாலிக்க அம்மன் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நலமெல்லாம் சொரியும் மங்கல மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    அதற்கு காரணம் ஆடிப் பூரம்!

    ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் பிருந்தாவனத்திலே பிராட்டியார் கோதை அவதரித்தார்கள். 'கோதையா! அவள் கருணையின் கொழுந்து' என்று போற்றி பணிகின்றோம்.

    'சூடிக்கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் ஆண்டாள்' தான் பாடிக் கொடுத்த பாமாலையால் பரமனை சேவித்து அவரிடமே ஜக்கியமானாள்.

    ஆண்டாள் பிறந்த அந்த தினத்தை ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடிக்களிக்கின்றோம்.

    இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    இதேபோல 'ஆடி பதினெட்டு' என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமான பண்டிகை நாளாகும். அந்த பண்டிகை வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

    முன்பு ஆடிப்பூரத் திருநாளின்போது காவேரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து, பொங்கிப் பெருகி ஓடும்.

    ஆடிப்பூர நந்நாளன்று அணங்கையர் புத்தாடை உடுத்திக் கோவிலுக்குச் செல்வர். மாலையில் தேங்காயம் சாதம், தயிர் சாதம், புளியஞ்சாதம், பாயசம் போன்ற சித்ரா அன்னம் தயாரித்து அம்மனுக்கு நிவேதிப்பர். பிறகு குடும்பத்துடன் அனைவரும் மாலையில் நதிக்கரைக்கு சென்று சித்ரா அன்னத்தை உண்டு மகிழ்வர்.

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.

    கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    கரக ஆட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை இவைகளுடன் கேளிக்கையும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.

    இந்த ஆடி மாதத்தில் புன்னைவனம் என்றழைக்கப்படும் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் பார்வதி தேவி. அதற்காக புன்னைவனத்தில் தவமிருந்தாள் அம்பிகை.

    அம்பிகையின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். அதே தலத்தில் ஐயன் சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொள்கிறார்.

    ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஆடித்தபசு பண்டிகையைக் காண பக்தர்கள் கூட்டம் வெள்ளம் எனப்பெருகும்!

    இவ்வாறு அம்பிகைக்கு உகந்ததான ஆடி மாதத்தில் வரும் செவ்வாயும், வெள்ளியும் விரதம் இருந்து நாம் அம்மனின் பேரருளைப் பெறுவோமாக!

    ஆடி ஸ்பெஷல்

    ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் 'காவிரி அம்மன் உலா' ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொதுமக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் முயற்சியுடன் இந்த வைபவம் நடந்து வருகிறது. காவிரி அம்மனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்க விடுவர்.

    • விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கீழக்கரை

    மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
    • அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது.

    அவினாசி :

    கருவலூரில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்னதான மண்டபம் வாகன மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், திருச்சுற்று மண்டபம், தரைத்தளங்களில் கல்தளம் அமைத்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூர்ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது. இதில் கருப்புசாமி கவுண்டர், கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அவினாசியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வெ.லோகநாதன், அறங்காவலர்அர்ச்சுனன், கோவில் செயல் தலைவர் குழந்தைவேலு ஆகியோர் செய்திருந்தனர்.

    • 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.
    • நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா 7 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜையும் ,வில்லிசையும் நடந்தன.

    முதல் நாளில் யாக பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.அம்பாள் சரஸ்வதி திருக்கோலத்தில் அம்மன் காட்சியருளல் நடந்தது. 5- வது நாளில் மஞ்சள் நீராடல் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீராடல் நடந்தது.

    இரவில் சிறுவர்- சிறுமியர் ஆயிரங்கண் பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    6-வது நாளான நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.நிறைவு நாளான இன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தன. பின்னர் அன்னதானம் நடை பெற்றது. நிகழ்ச்சி களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டி யன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் கம்பம் போடுதல், கொடியேற்றம் பூவோடு எடுத்தல் மற்றும் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 13ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் குட்டை திடல் பகுதியில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கையை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் நிறைவு நாளன்று மாரியம்மன் யானை மற்றும் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது . கடலூர் மாவட்டம் குட்டியாங் குப்பம் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கவியரசன் பிரபு குழுவினர் வான வேடிக்கை நடத்தினர். இதில் இரண்டு அடி அவுட்டு, 3 அடி அவுட்டு ,இரண்டடி மாலை வெடி, சரம் மூன்றடி, குண்டு வெடி சரம் ,கலர் மத்தாப்பு ,செடி, மரம் ,பாம்பு வெடி உட்பட பல்வேறு வகையான வெடிகள் வானத்தில் கலர் கலராக வர்ண ஜாலங்களுடன் வெடித்தன. வெடிக்கும் வெடிகளை பார்த்து பொது மக்கள் உற்சாகம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் ,காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். உடுமலை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வான வேடிக்கையை கண்டுகளித்தனர்.

    வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ் எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன், சஞ்சீவ் சுந்தரம் மற்றும் நன்கொடையாளர்கள் செய்திருந்தனர்.

    • மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது.
    • தேருக்கு முன் பல்வேறு இசைக்கருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பழமை யான மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் கடந்த மாதம், 28-ந்தேதி தேர்த்திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம், மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது. நடப்பாண்டு, பழைய தேருக்கு பதிலாக, புதிதாக எண் கோணவடிவத்தில், அற்புத வேலைப்பாடுகளுடன், அகலம் மற்றும் உயரம் அதிகம் கொண்ட பிரமாண்ட தேர் வடிவமைக்கப்பட்டு, புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 4:10மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. பக்தர்களின் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழங்க அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் நீல பட்டு உடுத்தி ரத்தினக்கல் ஆபரண ங்களுடன் சூலத்தேவருடன் எழுந்தருளிய அம்மன் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேருக்கு முன் பல்வேறு இசைக்க ருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.

    தேரை முன்னே பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பின்னால் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட 'குஷ்மா' யானை, தேரை நகர்த்தி பக்தர்களுக்கு உதவியது. தேரோட்டத்தை முன்னிட்டு, நீர் மோர் பந்தல், அன்னதானம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் என நகரம் விழாக்கோலமாக காணப்பட்டது. தேரோட்ட த்தை பொள்ளாச்சி பாராளு மன்ற தொகுதி சண்முக சுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி என்ற சுப்பிரமணியம், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர்.அட்சயா திருமுருக தினேஷ் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி, பன்னீர்செல்வம்,பிரேம்குமார்,அன்பரசன் பாலகிருஷ்ணன், கனகராஜன், ரவிக்குமார், மதுரை கிருஷ்ணன், பழனிச்சாமி, ஹரி கிருஷ்ணன், ராமராஜ் ராமானுஜதாசன் அறங்காவலர் தலைவர், செவ்வேள், சிவக்குமார், நியூ மேன், பினில், ராம்குமார், அருண்குமாரி வடுகநாதன், ரமேஷ், சதீஷ்குமார், ஜெயக்கனி, மஞ்சுளா தேவி, செல்வநாயகம், ஏவிஎம் தங்கமணி, கிருஷ்ணன் கலையரசன், கஜேந்திர பட்டாச்சாரியார் ,கண்ணன் திருச்சி ஸ்டீல், ஜஸ்டின் ராஜா, சதீஷ், கொக்கரக்கோ குழுமம், நூர் முகமது, கன்னியப்பன், கோபாலகிருஷ்ணன் பார்த்தசாரதி, ஆரியபவன் குடும்பத்தார்கள், திருமூர்த்தி ,ஜே வி ஏஜென்சீஸ்,முபாரக் அலி, குருவாயூரப்பன் பில்டர்ஸ், சலீம், ஹர்ஷா டைல்ஸ் சந்தான விக்ரம், ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே தாசில்தார் பிரபாகர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

    அப்போது கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனுமதியோடு பட்டியல் இன மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் 48 நாள் மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது 48 நாளில் ஏதாவது ஒரு நாளாவது மண்டகப்படியில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி உண்டு. நீங்கள் தடுப்பது சரியில்லை என கூறினர். இருந்த போதிலும் பட்டியல் இன மக்களை மண்டகப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மற்ற இன மக்களில் சிலர் அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தலைமையில் பட்டியல் இனமக்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். தொடர் எதிர்ப்பால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே தாசில்தார் பிரபாகர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

    இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தீர்வு வரும் வரை மலை மாரியம்மன் கோவில் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மலை மாரியம்மன் கோவிலை போலீசார் பூட்டி சீல் வைத்ததோடு போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதனால் ஆழம்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

    உடுமலை :

    மதங்களின் பெயரால் பல கலவரங்கள்,பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுக ளாக வாழ்ந்து வரும் உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் நடைபெறும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வ லமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று ள்ளது.உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலை மையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவி லுக்கு வந்தனர்.அவர்களை கோவில் பரம்பரை அற ங்காவலர் யு.எஸ்.எஸ் ,ஸ்ரீதர்உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்தி ருவிழா சிறக்க வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

    மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவரு க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.பல இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என உடுமலை மக்கள் உதாரண மாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

    ×