search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுமுகநேரி"

    • விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
    • மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுவதும் அவை மீண்டும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம்.

    இந்த மாடுகள் ஆறுமுகநேரியின் மேற்கே அமைந்துள்ள குளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள வயல்காடு அருகே மேய்ச்சல் இடங்களுக்கு சென்று வரும். இதன்படி நேற்று காலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் பல இரவு ஆன பிறகும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவற்றின் உரிமையாளர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூலக்கரைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே சில மாடுகள் இறந்து கிடந்ததையும், மேலும் சில மாடுகள் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஆறுமுகநேரி அரசு கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 மாடுகளுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இறந்து போன மாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் தான் இந்த மாடுகள் இறந்திருக்கின்றன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மாடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
    • ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

    இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
    • பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.

    ஆறுமுகநேரி, மே. 9-

    தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் முகம்மது மொய்தீன், நகர் மன்ற தலைவர் முத்து முகம்மது, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முகம்மது அலி ஜின்னா, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரெங்கநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவராக திகழும் நமது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்குகிறார். வருகின்ற காலத்தில் பாரதீய ஜனதாவை மத்திய அரசிலிருந்து வீழ்த்தும் நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அப்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கினார். மகளிருக்காக இலவச பஸ், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்லும்போது மாதந்தோறும் ரூ.ஆயிரம், முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மேலும் பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வின் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் கிருபாகரன், வக்கீல் விஜி கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பிரதிநிதிகள் லேண்ட் மம்மி, பன்னீர் செல்வன், மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பாளர்கள் ஜலீல், ஹாஜி முராசாகிப், நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகர துணை செயலாளர்கள் கதிரவன், முகம்மது நௌபல், ராம ஜெயம், நகர பொருளாளர் தாஜ்ஜுதீன், மகளிரணி அமைப்பாளர்கள் பூங்கொடி, மல்லிகா, நகர மாணவரணி அமைப்பாளர் முகம்மது முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.
    • நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா 7 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜையும் ,வில்லிசையும் நடந்தன.

    முதல் நாளில் யாக பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.அம்பாள் சரஸ்வதி திருக்கோலத்தில் அம்மன் காட்சியருளல் நடந்தது. 5- வது நாளில் மஞ்சள் நீராடல் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீராடல் நடந்தது.

    இரவில் சிறுவர்- சிறுமியர் ஆயிரங்கண் பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    6-வது நாளான நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.நிறைவு நாளான இன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தன. பின்னர் அன்னதானம் நடை பெற்றது. நிகழ்ச்சி களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டி யன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன.
    • சிறார்களால் ஓட்டப்பட்ட வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டுநர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போக்கு வரத்து விதிமுறைகள் மற்றும் பதாகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான சாலை விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. இதன் விளைவாக 18 ஆயிரத்து 500 பேர் இறந்து ள்ளனர் என்பது வேத னைக்குறியது. இவற்றில் 70 சதவீதம் மோட்டார் சைக்கிள் விபத்துகள் ஆகும். 18 வயதிற்கு முன்பாகவே பள்ளி மாணவ,மாணவிகள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது.

    இதனை பெற்றோர்கள் எந்த வகையிலும் அனு மதிக்க கூடாது. இதனை மீறும் பெற்றோர் களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும் வழங்கப்படும். இதற்கான 2019 சட்டப்பிரிவு 199 (ஏ)ன் படி சிறார்களால் ஓட்டப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஆர்.சி புக் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அத்து டன் சம்பந்தப்பட்ட சிறார்கள் 25 வயதிற்கு பிறகு தான் ஓட்டுநர் உரிமைத்தை பெற முடியும். ஆகவே இது பற்றிய விவரங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஜனவரி மாதம் மட்டும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இனி மாதம் தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் தமிழ்ச்செல்வன், மாரியப்பசாமி, காயல்பட்டினம் ஓட்டுனர் பள்ளி ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • ரூ. 36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக நேற்று மாலை ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சீட்டு விளையாட்டு

    இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கே சிலர் வட்டமாக அமர்ந்தபடி ' உள்ளே வெளியே' என்று கூறி பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கைது

    விசாரணையில் அவர்கள் தலைவன்வடலி முத்துலிங்கம் (45), பரமன் குறிச்சி சுயம்புலிங்கம் (44), காயாமொழி பால கிருஷ்ணன் (59), காயல்பட்டினத்தை சேர்ந்த சாமு சிராபுதீன்(50), செய்யது(50), தக்கியா சாகிப்(47),சுயம்புலிங்கம் (47), சாகுல் ஹமீது(60) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்கள் வைத்திருந்த சீட்டுக்கட்டு, ரூ.36 ஆயிரத்து 100 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தாமஸ்துரைக்கும், முருகேஸ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • தாமஸ்துரை டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை தொட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேயன்விளை அருகே காணியாளன் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்துரை (வயது25). கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே தாமஸ்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிர வில் தாமஸ்துரை குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தாமஸ்துரை வீட்டின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்துள்ளார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தாமஸ்துரையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூமிஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பூமிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கும், வீரசக்கதேவி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. இரவில் 308 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்களை திருச்செந்தூர் வட்டார த.மா.கா. தலைவர் சுந்தர்லிங்கம், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், டயானா முருகப்பெருமாள் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து சமய சொற்பொழிவும் சிறப்பு பூஜையும் நடந்தது.

    2- வது நாளான நேற்று காலையில் சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மதியம் அலங்கார சிறப்பு பூஜையும் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இதனை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் பேரூ ராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், கோவில் நிர்வாகி முருகன், தொழிலதிபர் பூபால் ராஜன், சிங்கராஜ் பிரபு, முருகேசன், ஆனந்தவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வேல்சாமி,சூர்யா இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
    • சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி செந்தில் நகரை சேர்ந்தவர் வேல்சாமி (50). இவரது மகன் சூர்யா (20).

    இவர்கள் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி தனது தந்தையான வேல்சாமியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே சூர்யாவை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான அறிக்கையை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் சமர்ப்பித்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு இதனை ஏற்று மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார்.இதன்படி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து சூர்யா பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
    • ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய பேரூராட்சி ஆகும்.

    18 வார்டுகளிலும் இங்கு அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வந்தது.இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு நிறைந்ததாக காணப்பட்டது.

    இதனால் இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்றும், வேறு இடத்தில் புதிதாக குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து கலாவதி கல்யாணசுந்தரம் தலைவராகவும், தி.மு.க. பிரமுகரான கல்யாண சுந்தரம் துணை தலைவ ராகவும் பொறுப்பு ஏற்றனர். இவர்களின் தீவிர முயற்சியால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நவீன எந்திரங்களின் மூலம் குப்பையை அகற்றும் பணிக்காக ரூ.1.44 கோடி செலவிலான திட்டத்தை செயலுக்கு கொண்டு வந்தனர்.

    இதன்படி அங்கு குப்பைகளை பிரித்தெடுத்து உரமாக மாற்றப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர லாரிகள், டிராக்டர்கள், மினி வேன்கள், பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.மேலும் நிரந்தர பணியிலும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 60 பேர் செயல்பட்டு வருகின்றனர்.ஒருங்கிணைந்த இந்த தூய்மை பணியில் தினம்தோறும் மலை அளவிற்கு சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பதுதான் புதிய பிரச்சினையாக உள்ளது.

    ராணிமகாராஜபுரம் அருகே காட்டுப்பகுதியில் சில நாட்கள் குப்பைகள் கொட்டப்பட்டன.ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்தனர்.

    இதன் பின்னர் அடைக்கலாபுரம் அருகே ஒதுக்குப்புறத்தில் குப்பைகள் போடப்பட்டன.இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் ஆறுமுகநேரி 4-வது வார்டு குளக்கரை அருகே குப்பைகளை போடும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இப்படியாக 10 நாட்களில் குப்பை கொட்டும் இடங்களை மக்கள் பந்தாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் பேரூராட்சி நிர்வாகம் திக்குமுக்காடியது.

    இதனிடையே 4-வது இடமாக ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.இந்த நிலையில் நேற்று மதியம் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.

    இதனால் செல்வ ராஜபுரம் பெரியான்விளை, கீழசண்முகபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகள் புகைமண்டலமாக மாறியது.இது சிறுவர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பினரை யும் அவதிப்பட வைத்தது.

    இதனால் செல்வராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முடங்கியது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனிடையே திருச்செந்தூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு குப்பை கிடங்கில் பரவிய தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

    ஏற்கனவே ஆறுமுகநேரி பேரூராட்சியின் சார்பில் நவீன முறையிலான குப்பை கிடங்கு அமைப்பதற்காக புதிய இடத்தை தேர்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி விரைவில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. 2-வது நாளிலும் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம். பூரண ஆஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது பக்தர்கள் 'அரகர மகாதேவா' என்று முழக்கம் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.இதன் பின்னர் லட்சார்ச்சனை நிறைவுக்கு பின் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    இதில் பக்த ஜனசபை சார்பில் சண்முக வெங்கடேசன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, கற்பக விநாயகம், சங்கரலிங்கம், இளைய பெருமாள், தொழிலதிபர் பெருமாள், பேராசிரியர் அசோக்குமார் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

    ஆலய பூஜகர் அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்தஜன சபையினர் செய்துள்ளனர்.

    • ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போட்டியில் கமலாவதி பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி அனன்யா,மாணவர்கள் கார்த்தி, அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய தொழில் நுட்பக் கழகம் சார்பில் தேசிய அளவிலான தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டி ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் 2 நாட்கள் நடைபெற்றது. தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் மற்றும் ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது.இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியின் சார்பில் 7 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனிஷ் சங்கர், குஷ்வந்த், 8-ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக், சிவ சந்தோஷ் ஆகியோர் சிறந்த வடிவமைப்பாளர்க்கான விருதை பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவி அனன்யா, 5-ம் வகுப்பு மாணவர் கார்த்தி, 4-ம் வகுப்பு மாணவர் அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங்க் ஆய்வக ஆசிரியை சேர்மசத்தியசிலி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ.நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் சீனிவாசன், மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ். தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    ×